ரவுடிகளின் வீடுகளில் போலீசார் அதிரடி சோதனை… புதுச்சேரியில் பரபரப்பு…

SS News

ஆபரேஷன் திரிசூலம் திட்டத்தின் கீழ் 400க்கும் மேற்பட்ட ரவுடிகளின் வீடுகளில் விடியற்காலை முதல் போலீசார் அதிரடியாக சோதனை மேற்கொண்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுச்சேரி காவல்துறையில் ‘ஆபரேஷன் திரிசூலம்’ என்ற திட்டம் மாநிலம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் தொடங்கப்பட்டது.

அதன்படி, ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அவர்கள் வீட்டில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளார்களா என்பதை ஆராய்வதற்கும் இந்த சோதனை மேற்கொள்ளப்படுகிறது.

புதுச்சேரி முழுவதும் அந்தந்த சரகத்திற்கு உட்பட்ட காவல் நிலையத்தை சார்ந்த போலீசார், சட்டம் ஒழுங்கு முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் தலைமையில் இன்று விடியற்காலை முதல் சோதனை மேற்கொள்ளப்பட்டது. 400-க்கும் மேற்பட்ட குற்ற பின்னணி உடைய ரவுடிகளின் வீடுகளில் அதிரடி சோதனையில் ஈடுபட்டது புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *