தோட்டா தரணிக்கு செவாலியர் விருது- இந்திய கலை உலகுக்கு பெருமை!
சென்னை: பிரபல கலை இயக்குநர் தோட்டா தரணிக்கு பிரான்ஸ் அரசின் ‘செவாலியர்’ (Chevalier de l’Ordre des Arts et des Lettres) விருது வழங்கப்பட உள்ளது. இந்த விருதை இதற்கு முன்னர் சிவாஜி கணேசன், கமல்ஹாசன், பாலமுரளிகிருஷ்ணா, ஐஸ்வர்யா ராய், கல்கி கோச்சலின் ஆகியோர் பெற்று இருந்தனர். இப்போது தோட்டா தரணி ஆறாவது இந்தியராக இணைந்துள்ளார். ஆந்திராவைச் சேர்ந்த தரணியின் தந்தை தோட்டா வெங்கடேஸ்வர ராவ், 1950களில் பிரபலமான ஆர்ட் டைரக்டர். சிறு வயதிலேயே கலை…

