சென்னையில் அடுத்த 24 மணி நேரமும் கனமழை தொடரும் : வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை
சென்னை:சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்துக்கும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கக்கடலில், சென்னைக்கு மிக அருகில், ஒரே இடத்தில் நகராமல் சுழன்று கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் இந்த தொடர்ச்சியான மழைக்கு முக்கிய காரணமாகும். கடந்த சில மணி நேரங்களாக இந்த மண்டலம்…

