நேரு எம்.எல்.ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெறவும், பாலியல் புகார் விசாரணைக் குழு அமைக்கவும் வலியுறுத்தி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் சேவை இயக்கத் தலைவர் மற்றும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழர் களம், மாணவர் கூட்டமைப்பு, காரைக்கால் மக்கள் போராட்டக் குழு உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் பொதுநல அமைப்புகள்…

Read More

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மீண்டும் மாணவர் போராட்டம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் ஒருவர் விடுதி வார்டனாக தொடர்வதை கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். வார்டன் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நிலையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Read More

பாலியல் புகாரில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் – மாணவர்கள் மீது நடவடிக்கை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு

காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகாருக்கு நியாயமான விசாரணை நடத்த வேண்டுமென மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி, கைது செய்து வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார். “மாணவர்கள் தங்கள் உரிமைக்காக அமைதியான முறையில் குரல் கொடுத்துள்ளனர். அவர்களை தாக்கி, வழக்குப்பதிவு செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது. மாணவர்கள்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை…

Read More

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் விடுவிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது-புதுவை பல்கலைக்கழகம் அறிக்கை.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தை நோக்கி எதிர்ப்பு பேரணியில் புறப்பட்டனர். பிற்பகல் 2.45 மணியளவில் தொடங்கி, 3.10 மணியளவில் கட்டிடத்தை அடைந்த மாணவர்கள் சிலர் கட்டிடத்தின் பக்கவாட்டு வாயில்களூடாக நுழைந்தனர். நிர்வாகம் மற்றும் சிறப்பு காவல் அதிகாரிகள் மாணவர்களை அமைதியாக வெளியே அழைத்து, கட்டிடத்திற்கு வெளியே போராட்டத்தை தொடருமாறு கேட்டனர். ஆனால் மாணவர்கள் கோரிக்கையை ஏற்காமல், உள்ளே போராட்டத்தை தொடர்ந்தனர். 100 மீட்டர் உள்ளகப் பிரதேசத்தில் எந்தவித போராட்டங்களிலும் ஈடுபடாதிருப்பது குறித்த உயர்நீதிமன்ற…

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு – சிபிஎம், திமுக, விசிகவினர் கலைவாணனுடன் IPS சந்திப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் பேராசிரியர் மாதவய்யா மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் நேற்று நடத்திய போராட்டத்தின் போது, போலீசார் மாணவர்களை தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை கண்டித்து, சிபிஎம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து இன்று காலை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் IPS அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும்…

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரி JCM மக்கள் மன்றம் போராட்டம்!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடைபெற்ற காவல் துறை நடவடிக்கைக்கு எதிராக JCM மக்கள் மன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. காலாப்பட்டு காவல் நிலையம் முன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர் கடந்த சில நாட்களாக பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்கள் குறித்து விவாதம் நிலவி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்…

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராடிய மாணவர்கள் மீது தடியடி! 24 மாணவர்கள் கைது!

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை நிர்வாகம் மூடி மறைப்பதாக குற்றம்சாட்டி, பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நள்ளிரவில் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர் அழுதபடி அளித்த ஆடியோ இணையத்தில் வைரலானது. அதில், துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் ஆபாசமாகப் பேசுவதோடு, நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும், மறுத்தால் இன்டெர்னல்…

Read More