காரைக்காலில் 200க்கும் மேற்பட்டோர் கண்டன பேரணி!

புதுவை மாநிலம் காரைக்காலில் போலி மருந்து விவகாரத்தை கண்டித்து காரைக்கால் போராளிகள் குழுவினர் சார்பில் 200க்கும் மேற்பட்டோர் புதுவை அரசுக்கு எதிராக கண்டன பேரணியில் ஈடுபட்டனர். புதுவையில் கோடிக்கணக்கான போலி மருந்துகள் பிடிபட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் போலி மருந்து தொழிற்சாலையை கண்டித்தும் இது தொடர்பாக புதுவை அரசு விசாரணை நடத்த வலியுறுத்தியும் இன்று காரைக்காலில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி கண்டன பேரணியில் 200க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். புதிய பேருந்து நிலையத்திலிருந்து…

Read More

14 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி தொழில்நுட்ப பல்கலைக்கழக (PTU) ஓய்வூதியர்கள் பல மாதங்களாக நிலுவையில் உள்ள தொகைகள் மற்றும் நலன்கள் வழங்கப்படுவதில் தொடர்ந்து ஏற்படும் தாமதத்தை கண்டித்து, பல்கலைக்கழக வளாகத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. இதில் 100 க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற ஊழியர்கள் பங்கேற்றனர். புதுச்சேரி காலாபட்டு பகுதியில் இயங்கி வரும் தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர்கள் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. கடந்த சில மாதங்களாக இவர்களுக்கு ஓய்வூதியம் மற்றும் பிற நல நிதிகள் வழங்கப்படுவதில்…

Read More

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் சீண்டல் பரபரப்பு – நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் போராட்டம்!

புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பிம்ஸ் (PIMS) மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 10-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தக் கல்லூரியின் செவிலியர் பிரிவில் பயிலும் மாணவிகள் மருத்துவமனைப் பிரிவில் பயிற்சிக்காகச் செல்லும் போது, எக்ஸ்ரே பிரிவில் பணிபுரியும் இரண்டு டெக்னீசியன்கள் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். புகார் கிடைத்ததையடுத்து, கல்லூரியின்…

Read More

புதுச்சேரியில் பள்ளிகள் அருகில் ரெஸ்டோ பார் திறப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

புதுச்சேரி நகர்ப்பகுதியில் அரசு பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில் புதிதாக ரெஸ்டோ பார் ஒன்று திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் சாலையில் குடியிருப்பு மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே புதியதாக ரெஸ்டோ பார் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய ரெஸ்டோ பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், மேலும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேரு போராட்டத்திற்கு…

Read More

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக நிர்வாகிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்யையும் குறிவைத்து அவதூறு கருத்துகளை திட்டமிட்டுப் பரப்பி வரும் பாஜகவினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனையும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்யையும் குறிவைத்து இழிவுப்படுத்துவதுடன் அவதூறுக் கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்பி வரும் பாஜகவினரை கண்டித்தும், பாலியல் கொடுமைகளுக்கும், பெண்ணுரிமைக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும், மாணவர்களின் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பதைக் கண்டித்துப் போராடிய புதுவைப் பல்கலைக்கழக மாணவர்களைக்…

Read More

புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம்!

புதுச்சேரி அரசு பள்ளியில் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பேரணியாக சென்று சட்டபேரவை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு பள்ளிகளில் 300 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பல வருடங்களாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுப்படனர். தொடர்ந்து இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஆசிரியர்களை பணி…

Read More

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் மதுக்கடை திறப்புக்கு எதிராக மக்கள் சாலை மறியல்!

புதுவையில் ரெஸ்டோ பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! வில்லியனூரில் பாரதிநகர், ஆரியப்பாளையம் பகுதியில் புதிய மதுபான கடை (ரெஸ்டோ பார் ) ஒன்று திறக்கப்படுவதாக தகவல் வந்ததையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுவால் இளைஞர்கள், குடும்பங்கள், சமூக அமைதி ஆகியவை பாதிக்கப்படும் எனக் கூறி நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியல் செய்து கடும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, காவல்…

Read More

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மீண்டும் மாணவர் போராட்டம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் ஒருவர் விடுதி வார்டனாக தொடர்வதை கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். வார்டன் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நிலையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Read More

புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசின் ஓய்வூதிய மசோதாவை கண்டித்து, அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு எதிரான ஓய்வூதியத் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8-வது ஊதியக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், மேலும் குழுவின் வரம்பு குறிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு…

Read More

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் விடுவிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது-புதுவை பல்கலைக்கழகம் அறிக்கை.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தை நோக்கி எதிர்ப்பு பேரணியில் புறப்பட்டனர். பிற்பகல் 2.45 மணியளவில் தொடங்கி, 3.10 மணியளவில் கட்டிடத்தை அடைந்த மாணவர்கள் சிலர் கட்டிடத்தின் பக்கவாட்டு வாயில்களூடாக நுழைந்தனர். நிர்வாகம் மற்றும் சிறப்பு காவல் அதிகாரிகள் மாணவர்களை அமைதியாக வெளியே அழைத்து, கட்டிடத்திற்கு வெளியே போராட்டத்தை தொடருமாறு கேட்டனர். ஆனால் மாணவர்கள் கோரிக்கையை ஏற்காமல், உள்ளே போராட்டத்தை தொடர்ந்தனர். 100 மீட்டர் உள்ளகப் பிரதேசத்தில் எந்தவித போராட்டங்களிலும் ஈடுபடாதிருப்பது குறித்த உயர்நீதிமன்ற…

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு – சிபிஎம், திமுக, விசிகவினர் கலைவாணனுடன் IPS சந்திப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் பேராசிரியர் மாதவய்யா மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் நேற்று நடத்திய போராட்டத்தின் போது, போலீசார் மாணவர்களை தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை கண்டித்து, சிபிஎம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து இன்று காலை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் IPS அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும்…

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராடிய மாணவர்கள் மீது தடியடி! 24 மாணவர்கள் கைது!

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை நிர்வாகம் மூடி மறைப்பதாக குற்றம்சாட்டி, பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நள்ளிரவில் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர் அழுதபடி அளித்த ஆடியோ இணையத்தில் வைரலானது. அதில், துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் ஆபாசமாகப் பேசுவதோடு, நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும், மறுத்தால் இன்டெர்னல்…

Read More