சென்னையில் திடீர் கனமழை: தி.நகர், நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிப்பு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில், சென்னையில் இன்று மாலை பல்வேறு பகுதிகளில் திடீரென கனமழை பெய்தது. குறிப்பாக நுங்கம்பாக்கம், தி.நகர், எழும்பூர், மேற்கு மாம்பலம், கோடம்பாக்கம், அசோக்நகர், சைதாப்பேட்டை உள்ளிட்ட பகுதிகள் மழையால் அதிகம் பாதிக்கப்பட்டன. வானிலை ஆய்வு மையம் முன்கூட்டியே ‘இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு’ என எச்சரித்திருந்த நிலையில், மாலை நேர போக்குவரத்து உச்சத்தில் மழை ஆரம்பித்தது காரணமாக பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகினர். திடீரென மழை தீவிரமடைந்ததால் பல சாலைகளில்…

Read More

தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை

தமிழகத்தில் அடுத்த சில நாட்களில் மழை அதிகரிக்கும் நிலையில், சென்னையிலும் இன்று மற்றும் நாளை மிதமான மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென் இலங்கை மற்றும் தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவாகியுள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் தாக்கத்தால் மாநிலம் முழுவதும் மழை செயல்பாடு தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று (14.11.2025) தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக திருநெல்வேலி…

Read More

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு நாளை ஆரஞ்சு அலர்ட்!

தமிழகத்தில் 8 மாவட்டங்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தேனி, திண்டுக்கல், திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோவை, மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் காரைக்கால் பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம்…

Read More