காரைக்கால் – சபரிமலை கோவில் அன்னதானத்திற்கு அனுப்பப்பட்ட பொருட்கள்!
காரைக்காலில் இருந்து ஸ்ரீஐயப்ப தர்மா சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானத்தில் அன்னதானம் செய்ய தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்களை அனுப்பி வைத்தனர். புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் உள்ள ஐயப்ப பக்தர்கள் ஒருங்கிணைந்த ஸ்ரீஐயப்ப தர்மா சேவா சங்கம் சார்பில் சபரிமலை சன்னிதானம் மற்றும் எரிமேலி ஆகிய இடங்களில் வரும் 10ஆம் தேதி முதல் அடுத்த மாதம் பத்தாம் தேதி வரை என 30 நாட்கள் ஐயப்ப பக்தர்களுக்கு அன்னதானம் அளிக்கும் வகையில் அதற்கு தேவையான…

