புதுவையில் அடுத்தடுத்து இரண்டு புயல்… பேனர்கள் அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு…
புதுச்சேரியில் கட்டவுட், பேனர்கள் வைக்க 15 நாட்களுக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவிப்பு.
புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது …
வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை தொடர்ந்து புதுவை முழுவதும் தற்போது அடை மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 15 நாட்களுக்கு அக்டோபர் 26ஆம் தேதி மற்றும் நவம்பர் 5ஆம் தேதி வங்காள விரிகுடாவில் அடுத்தடுத்து இரண்டு தனி தனி குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியில் உருவாக்கப்படும் அபாயம் உள்ளது என்று வானிலை குறித்த எச்சரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து சூறாவளி புயலாக வலுவடைந்து வங்காள விரிகுடா கடற்கரை நோக்கி நகர வாய்ப்பு உள்ளது என்றும் அப்பொழுது அதிகளவு மழையுடன் மணிக்கு சுமார் 53ப் கிலோமீட்டர் வேகத்தில் காற்றும் வீசக்கூடும் என்றும் இதனால் புதுவை மற்றும் ஏனாம் பகுதிகளில் பாதிப்பிற்கு உள்ளாகும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதில் கட்டவுட் பேனர்கள் பதாகைகள் ஆகியவை காற்றின் தாக்கத்தில் சேதம் அடைந்து பறந்து விழக்கூடிய வாய்ப்புகள் வெகுவாய் உள்ளது. அவ்வாறு நேர்ந்தால் பாதசாரிகள் மற்றும் பயணிகளுக்கு அபாயகரமான விபத்துக்கள் மற்றும் காயங்கள் ஏற்படுவதுடன் போக்குவரத்து மற்றும் அவசரகால மீட்பு பாதைகள் இடையூறு மற்றும் மின் இணைப்புகள் மற்றும் தகவல் தொடர்பு உள்கிட்ட அமைப்பு உட்பட பொது மற்றும் தனியார் சொத்துகளுக்கு சேதம் ஆகியவை நேரிட வாய்ப்புள்ளது என்பதாலும் அனைத்து விதமான பேனர்கள் கட்டவுட்டுகள் பதாகைகள் போன்றவை பேரிடர் மேலாண்மை சட்டத்தின் படி பேனர்கள் இன்று முதல் 15 நாட்களுக்கு தடை செய்யப்பட்டுள்ளது. பொதுமக்கள் நலன் உடைமைகளையும் சொத்துகளையும் பாதுகாப்பினின் கருத்தில் கொண்டு அனைத்து தரப்பினருக்கும் முழு ஒத்துழைப்பு அளிக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது .
மேற்படி தடை ஆணையை மீறுவோர் மீது பேரிடர் மேலாண்மை சட்டப் பிரிவின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும்.

