அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்!

அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், ஜி.கே. மணி பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக இருந்து வரும் பொறுப்பிலிருந்து நீக்கப்படுமாறு கோரி சட்டமன்ற பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம் மேற்கொண்டனர்.

போராட்டத்தில் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனை பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக, மற்றும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரை பாமக கொரடா’வாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

போராட்டத்திற்குப் பிறகு வெங்கடேஸ்வரன் செய்தியாளர்களை சந்தித்து, சபாநாயகர் அப்பாவிடம் சட்டமன்ற குழு தலைவர், துணைத் தலைவர் மற்றும் கொரடாவிற்கு தனி இருக்கைகள் வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளோம் என்றும், விரைவில் தனி இடம் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *