ஆந்திர பிரதேசத்தில் கோர விபத்து! பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து! 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்!

ஆந்திர பிரதேசத்தில் 35 பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடும் பனி மூட்டத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள துளசிபாகலு என்ற பகுதியில் மலைப்பாங்கான இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல்கள் வெளியாகின. பேருந்தில் 35 பயணிகள் இருந்ததாகவும் 2 ஓட்டுனர்கள், மற்றும் ஒரு உதவியாளர் இருந்ததாக தெரிய வந்துள்ளது. விபத்து நடந்த பகுதிக்கு மீட்பு குழுவினர் சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *