‘வேள்பாரி’ படப்பிடிப்பு 2026 ஜூனில் தொடக்கம் – நாயகனாக சூர்யா?

தமிழ் சினிமாவின் மிக பிரமாண்டமான படைப்பாளர்களில் ஒருவராகப் பெயர் பெற்றவர் இயக்குநர் ஷங்கர். எந்திரன், சிவாஜி உள்ளிட்ட பல பெரிய திரைப்படங்களை இயக்கி கோலிவுட்டில் தனித்த நிலையை உருவாக்கியவர். சமீபத்தில் அவர் இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ரசிகர்கள் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பைப் பெறாத நிலையில், ஷங்கரின் அடுத்தப்படம் குறித்த தகவல்கள் தற்போது திரைப்பட உலகில் பேச்சு பொருளாகியுள்ளது.

சு. வெங்கடேசன் எம்.பி. எழுதிய வரலாற்று நாவல் வீரயுக நாயகன் வேள்பாரியை திரைப்படமாக உருவாக்க இருப்பதாக முன்னதாகவே ஷங்கர் அறிவித்திருந்தார். அதற்கான முன் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில், வேள்பாரி படத்தைச் சுற்றிய புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. 2026 ஆண்டு ஜூன் மாதத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனத் தகவல் கிடைத்துள்ளது. மேலும் இதில் முக்கிய கதாபாத்திரமான வேள்பாரியாக நடிகர் சூர்யா நடிக்கவிருக்கிறார் என்ற செய்தியும் ரசிகர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.

இப்பற்றி விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ் திரையுலகத்தில் பெரும் அளவிலான வரலாற்று படமாக உருவாகவுள்ள வேள்பாரி மீது ரசிகர்கள் பெரும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *