காரைக்காலுக்கு புதிய மாவட்ட ஆட்சியர்

காரைக்கால் மாவட்டத்தின் 23வது ஆட்சியராக இஷிதா ரதி IAS பொறுப்பேற்றுள்ளார். இதற்கு முன்பு புதுவையில் சப்-கலெக்டராக பணியாற்றி நிர்வாக அனுபவம் பெற்றிருந்தார். மாநில அரசின் உத்தரவின் பேரில் இந்த நியமனம் செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் மாவட்ட ஆட்சியர் ரவிபிரகாஷ், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு துறையின் செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். புதிய நிர்வாக மாற்றம் மாவட்ட வளர்ச்சிக்கு ஊக்கம் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *