பராமரிப்பு பணி: சென்னையின் சில பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

சென்னை:


தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மறுநாள் (15.11.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும்.

அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணி மதியம் 2 மணிக்குள் முடிந்தால், மின் விநியோகம் அதற்கு முன்னரே மீண்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின்தடை ஏற்படும் பகுதிகள்: திருமுல்லைவாயல், லட்சுமிபுரம், பெரியார்நகர், கோனிமேடு, கங்கைநகர், சரத்கண்டிகை, பம்மத்துக்குளம், எல்லம்மன் பேட்டை, எரான்குப்பம் ஆகிய இடங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *