விற்பனைக்கு வைத்த 5 கிலோ கஞ்சா – மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே வாகன நிறுத்தம் பகுதியில் விற்பனைக்கு வைத்து இருந்த 5 கிலோ கஞ்சா மீதான நடவடிக்கையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மதியார் ரஹ்மான் மொல்லா (26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில், கஞ்சா வழக்கு குற்றவாளி மதியார் ரஹ்மான் மொல்லா சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.