அரியாங்குப்பம்–முள்ளோடை வரை 13 கி.மீ. மேம்பாலத்துக்கு ₹650 கோடி நிதி ஒதுக்கீடு

அரியாங்குப்பம் முதல் கடலூர் எல்லையான முள்ளோடை வரை 13 கிலோமீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்க ரூ.650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார்.

புதுச்சேரியில் ரூ.436 கோடி மதிப்பில் உயர்மட்ட வழித்தடம் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முள்ளோடை வரை மேம்பாலம் அமைக்க மத்திய நிதி வழங்க வேண்டும் என கோரினார்.

அதனை ஏற்ற மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அடுத்த ஆண்டுக்குள் அந்த பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெறும் எனவும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *