Say No to Drugs! புதுச்சேரியில் இன்று மாரத்தான் தொடக்கம்
புதுச்சேரி: சமூக சேவகர் சார்லஸ் மார்ட்டின் முன்னெடுப்பில் புதுச்சேரியை போதையற்ற நகரமாக உருவாக்கும் முயற்சியாக ‘போதை வேண்டாம்’ என்ற தலைப்பில் மாரத்தான் ஓட்டம் இன்று நடைபெறுகிறது.
புதுச்சேரி கடற்கரை சாலை காந்தி சிலையிலிருந்து தொடங்கும் இந்த ஓட்டம், ‘Say No to Drugs’ எனும் செய்தியை மக்களிடம் பரப்புவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக 5 கி.மீ. தூரத்திற்கு இந்த மாரத்தான் நடைபெற இருக்கிறது.
இந்நிகழ்வில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்ளிட்டோர் ஆயிரக்கணக்கில் பங்கேற்க உள்ளனர். போதைப் பழக்கத்திலிருந்து இளைஞர்களை பாதுகாக்கவும், சமுதாயத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் இம்மாதிரியான நிகழ்ச்சிகள் பெரிதும் உதவும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.

