தீபாவளிக்கு ரூ.570 மதிப்பிலான இலவச மளிகை தொகுப்பு வழங்கப்படும் – புதுச்சேரி முதல்வர் முதல்வர் ரங்கசாமி

காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு கிராமத்தைச் சேர்ந்த சிவராமனுக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் முருகானந்தம், செல்வகுமார், ராஜேஷ், ராஜேஷ், குணசேகர், ஞானவேல் மற்றும் 17 மீனவர்கள் கடந்த 7ஆம்‌ தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர்.
அதிகாலை விசைப்படகு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, படகு பழுதடைந்தது. பழுது நீக்கும் பணியை மேற்கொண்டபோது இலங்கை கடற்படையினர் திடீரென வந்து 17 மீனவர்களையும் விசைப்படகையும் கைப்பற்றினர்.
கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசைப்படகையும் உடனடியாக மீட்டு தர வேண்டும் என மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
குறிப்பாக, கடந்த 15 நாட்களுக்கு முன்பு இதே கிராமத்தைச் சேர்ந்த விசைப்படகும் 12 மீனவர்களும் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டிருந்தனர். ஒரு மாதத்திற்குள் ஒரே கிராமத்தில் மொத்தம் 29 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது மீனவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.காரைக்கால் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *