பிரபல ரவுடி கொலையில் கைது செய்யப்பட்ட முத்து மீண்டும் கைது – பயங்கர ஆயுதங்களுடன் சிக்கினார்!

பிரபல ரவுடி ஐயப்பன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ரவுடி முத்துவை, லாஸ்பேட்டை போலீசார் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர்.

புதுச்சேரி வானரபேட்டை பகுதியை சேர்ந்த ஐயப்பன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருகே கடத்தி சென்று கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முத்து உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்திருந்தனர்.

சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த முத்து, கருவடிக்குப்பம் பகுதியில் சொகுசு காரில் ஆயுதங்களுடன் சுற்றியபோது, வாகன சோதனையில் ஈடுபட்ட லாஸ்பேட்டை போலீசார் அவரை பிடித்தனர். விசாரணையில் முரண்பட்ட பதில்களைக் கூறிய அவர், காரை நிறுத்தாமல் தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.

போலீசார் விரட்டியபோது, முத்து காரை விட்டு தப்பி ஓடும் போது கீழே விழுந்து காயமடைந்தார். தொடர்ந்து விசாரணை முடிவில், அவரை காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *