Confed கைத்தறி ஊழியருக்கு உதவிய JCM மக்கள் மன்றத்தினர்!
புதுவை முத்தியால்பேட்டையில் கலையரசி என்ற கைத்தறி ஊழியர் Confedல் பணியாற்றி வந்தார். கால் முறிவு ஏற்பட்டு சிகிச்சை மேற்கொண்டு வந்த நிலையில் மேல் சிகிச்சைக்கு ஏழ்மை காரணமாக சிகிச்சை செய்ய இயலாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். Confed கைத்தறி நெசவாளர்களை சமூக சேவகர் சார்லஸ் மார்டின் சந்தித்த போது அவரிடம் சிகிச்சைக்காக உதவி கோரப்பட்டது. அவரது கோரிக்கையை ஏற்ற சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நிதியுதவி அளித்து உதவினார்.

அதன் பின்னர் கலையரசிக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு குணமாகி வருகிறார். இந்த நிலையில் அவரை முத்தியால்பேட்டை தொகுதி JCM மக்கள் மன்ற நிர்வாகி அனிதா நேரில் சந்தித்து விரைவில் குணமடைய ஆறுதலையும் கூறி உதவி செய்தார்.

தனக்கு கால் குணமடைவதற்கு காரணமாக இருந்த சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கும் JCM மக்கள் மன்றத்தினருக்கும் கைத்தறி ஊழியர் கலையரசியின் குடும்பத்தினர் நன்றி தெரிவித்தனர்.

