பொங்கலுக்கு பிறகு பாதயாத்திரை – LJK தலைவர் அறிவிப்பு

புதுவை : புதுவையில் லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, பொங்கலுக்கு பிறகு 60 நாட்கள் புதுவை முழுவதும் பாதயாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

புதுவை மக்களின் பிரச்சனைகளை நேரடியாக அறிந்து, அவர்களது கோரிக்கைகளை கேட்கும் நோக்கில் இந்த பாதயாத்திரை நடத்தப்படுவதாக அவர் கூறினார். மேலும், பாதயாத்திரையின் போது மக்களை சந்தித்து கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்திட்டங்களை விளக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.

பாதயாத்திரை தொடங்கும் முன், கட்சியின் தேர்தல் அறிக்கை வெளியிடப்படும் என்றும், அதனை அடிப்படையாகக் கொண்டு மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும் என்றும் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கூறினார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் லட்சிய ஜனநாயக கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் கட்சி பொறுப்பாளர்கள் பலர் உடன் இருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *