புதுவையில் கிறிஸ்துமஸ் கேக் மிக்சிங் விழா : சமூகச் சேவகர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் தொடக்குவிழா

புதுவை:
கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு புதுவையில் கேக் மிக்சிங் நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் சமூகச் சேவகர் ஜோஸ் சார்லஸ் மாட்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கேக் மிக்சிங் விழாவைத் தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் திராட்சை, பேரிச்சம்பழம், அத்திப்பழம் உள்ளிட்ட பலவிதமான உலர்பழங்களை சேர்த்து கேக் மிக்சிங் செய்யப்பட்டது. விழாவில் கலந்து கொண்ட ஜோஸ் சார்லஸ் மாட்டின் தாமும் உலர்பழங்களை கலந்து கேக் மிக்சிங் செயலில் பங்கேற்றார்.

இந்த கலவையால் தயாரிக்கப்படும் கேக்குகள் கிரிஸ்மஸ் பண்டிகை முன்னிட்டு தயாராக்கப்பட்டது, புதுவை முழுவதும் பல்வேறு தரப்பு மக்களிடம் பகிர்ந்து வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. பண்டிகை மகிழ்ச்சியை பகிர்வதற்கான இந்நிகழ்ச்சி பெரும் வரவேற்பை பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *