உடல்நலக் குறைவு காரணமாக உயிரிழந்த ரோபோ சங்கரின் குடும்பத்திற்கு நடிகர்கள் தனுஷ், கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் ஆறுதல் தெரிவித்து வருகின்றனர்.
சின்னத்திரையில், காமெடி பேச்சாளராக ஜொலித்தவர் ரோபோ சங்கர். தனது திறமையாலும், அயராத முயற்சியாலும் வெள்ளித்திரையிலும் காமெடி நடிகராக வலம் வந்தார். சென்னை வளசரவாக்கத்தில் வசித்து வந்த இவர், சமீபகாலமாக மஞ்சள்காமாலை நோயால் பாதிக்கப்பட்டு, அதிலிருந்து மீண்டு வந்தார்.
தொடர்ந்து, திரைப்படங்களிலும், சின்னத்திரை நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று வந்தார். இந்நிலையில், உணவுக்குழாய் மற்றும் சிறுநீரக பாதிப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த அவர், நேற்றிரவு காலமானார். ரோபோ சங்கரின் மறைவு திரையுலகினர் மற்றும் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், ரோபா சங்கருக்கு இப்படி ஒரு நிலைமையா என்று பிரபக நடிகரும், இயக்குநருமான டி.ராஜேந்தர் இரங்கல் தெரிவித்துள்ளார். தான் இயக்கப் போகும் புதிய படத்திற்கு ரோபோ சங்கரை டி.ராஜேந்தர் ஒப்பந்தம் செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோபோ சங்கரின் மறைவிற்கு நடிகர்கள் தனுஷ், கமல்ஹாசன், சிம்பு உள்ளிட்ட திரையுலகினரும், அரசியல் பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.