வெள்ளவாரி வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து கொடுத்த ஜே.சி.எம். மக்கள் மன்றம் – பொதுமக்கள் நன்றி

காமராஜர் நகர் தொகுதியில் கழிவுநீர் நிறைந்த வெள்ளவாரி வாய்க்காலை, ஜே.சி.எம். மக்கள் மன்றம் தூர்வாரி சீரமைத்து கொடுத்துள்ளது.

புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் நகர், தேவகி நகர் வழியாக வெள்ளவாரி வாய்க்கால் செல்கிறது. கருவடிக்குப்பம் வெள்ளவாரி வாய்க்காலில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.

அதேபோல், காமராஜர் சாலை உப்பனாறு வாய்க்காலிலும் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளன. உப்பனாறு வாய்க்கால் மேம்பாலத்தை காமராஜர் சாலை மற்றும் மறைமலையடிகள் சாலையுடன் இணைக்கும் பணிகள் நடந்தும் வரும் நிலையில், அங்கு பொக்லைன் இயந்திரம் மூலமாக தூர்வாரும் பணி கடந்த சில மாதங்களாக தேங்கி கிடக்கின்றன.

அதேபோல், காமராஜர் சாலை உப்பனாறு வாய்க்காலில் குப்பைகளும் தேங்கி கிடக்கிறது. தூர்வாரும் பணியுடன் குப்பைகளையும் அகற்ற வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதற்கிடையில், வெள்ளவாரி வாய்க்காலில் மண் சரிந்து போக்குவரத்து சாலை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டது.

இந்நிலையில், காமராஜர் நகர் தொகுதியில் கழிவுநீர் நிறைந்த வெள்ளவாரி வாய்க்காலை, ஜே.சி.எம். மக்கள் மன்றம் தூர்வாரி சீரமைத்து கொடுத்துள்ளது. மேலும், வாய்க்கால் ஓரங்களில் மண் மூட்டைகள் அடுக்கப்பட்டு மண் சரிவை தடுக்கும் வகையில் தடுப்பணைகள் அமைக்கப்பட்டன. இதனையடுத்து, இப்பணியை முன்னெடுத்த சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டினிக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *