LJK மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா – திருநங்கை சமூகத்துடன் கொண்டாட்டம்

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியில் உள்ள அன்னலட்சுமி திருநங்கை சமூகத்துடன் இணைந்து, லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் , ஜோஸ் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி மாநில மகளிர் அணி சார்பில் பொங்கல் விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் திருநங்கைகளுடன் சேர்ந்து பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட்டு, அவர்களுடன் அன்பும் ஒற்றுமையும் பகிர்ந்து கொள்ளப்பட்டது. நிகழ்ச்சியின் போது திருநங்கைகளுக்கு புடவை, மளிகைப் பொருட்கள் மற்றும் காலண்டர் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

Read More

பாதுகாப்பு காரணமாக சதுரகிரி கோவிலுக்குச் செல்ல தடை

விருதுநகர் மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பிரசித்தி பெற்ற சதுரகிரி கோவில் அமைந்துள்ளது. வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்த கோவிலுக்கு, மாதந்தோறும் குறிப்பிட்ட நாட்களிலும், மழை பாதிப்பு இல்லாத சாதாரண நாட்களிலும் பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக மாலப்பகுதியில் தொடர் மழை பெய்து வருகிறது. மலைப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஓடைகள் மற்றும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சதுரகிரி மலைப்பாதையில்…

Read More

டாஸ்மாக் கடைகள் 3 நாட்கள் இயங்காது: அரசு அறிவிப்பு

தமிழகம் முழுவதும் இயங்கும் டாஸ்மாக் மதுபான கடைகள் மூன்று நாட்கள் கட்டாயமாக மூடப்பட்டிருக்க வேண்டும் என கடை மேற்பார்வையாளர்கள், விற்பனையாளர்கள் மற்றும் உதவி விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அந்த அறிவிப்பின் படி, ஜனவரி 16-ஆம் தேதி (திருவள்ளுவர் தினம்), ஜனவரி 26-ஆம் தேதி (குடியரசு தினம்) மற்றும் பிப்ரவரி 1-ஆம் தேதி (வடலூர் வள்ளலார் நினைவு தினம்) ஆகிய நாட்களில் டாஸ்மாக் கடைகள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது. விதிமுறைகளை மீறினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More

சென்னையில் மர்மமாக சாகும் காகங்கள் – பீதியில் மக்கள்

சென்னை அடையாறு இந்திரா நகர் பூங்காவில் கடந்த சில நாட்களாக காகங்கள் மர்மமான முறையில் இறந்து வருகின்றன. வானில் பறந்துகொண்டிருந்த காகங்கள் திடீரென கீழே விழுந்து உயிரிழப்பதால் பூங்காவிற்கு வரும் மக்கள் அச்சமடைந்துள்ளனர். பூங்கா காவலாளி குட்டி கூறுகையில், நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு முன்பே காகங்கள் விழுந்து இறக்கத் தொடங்கியதாகவும், தினந்தோறும் அதன் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார் . தகவல் அறிந்த மாநகராட்சி அதிகாரிகள், செத்துப்போன காகங்களை சேகரித்து தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல்…

Read More

ஒரே பாறை, உலக சாதனை: 3,000 கி.மீ. பயணத்தில் உருவான மகா சிவலிங்கம்

பீகாரில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘விராட் ராமாயணக் கோயில்’ திட்டத்தின் முக்கிய கட்டமாக, 33 அடி உயரம் கொண்ட பெரிய சிவலிங்கம் பீகாரை சென்றடைந்துள்ளது. இந்த சிவலிங்கம், தமிழகத்தின் மகாபலிபுரத்தில் இருந்து சுமார் 3,000 கிலோமீட்டர் தூரம் பயணித்து அங்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நவம்பர் 21 அன்று மகாபலிபுரத்தில் தொடங்கிய இந்தப் பயணம், 96 சக்கரங்கள் கொண்ட சிறப்பு டிரக் மூலம் மெதுவாக கொண்டு செல்லப்பட்டது. சேதம் ஏற்படாமல் இருக்க, தினமும் 60 கி.மீ. மட்டுமே பயணிக்கப்பட்டது….

Read More

ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசே நடத்த வேண்டும் – உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை உயர்நீதிமன்ற கிளை, தமிழகத்தில் நடைபெறும் பாரம்பரிய ஜல்லிக்கட்டு போட்டிகளை அரசு மேற்பார்வையில் நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. 15ஆம் தேதி நடைபெறவிருந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டை கிராம நிர்வாகம் நடத்த அனுமதி கோரி மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ஜல்லிக்கட்டு போட்டிகளை தனிநபர்கள் அல்லது உள்ளூர் குழுக்கள் நடத்துவதால் பல்வேறு சிக்கல்கள் உருவாகுகின்றது என்பதைக் கருத்தில் கொண்டு, அரசே நேரடியாக பொறுப்பேற்று போட்டிகளை நடத்துவது சிறந்தது என நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதன் அடிப்படையில், அணிவகுப்பு, அவனியாபுரம், பாலமேடு மற்றும்…

Read More

சென்னை விமான நிலையத்தில் விரைவில் ஸ்மார்ட் ட்ராலிகள்

சென்னை விமான நிலையம் இனி ஸ்மார்ட் ட்ராலிகளுடன் பயணிகளை வரவேற்க தயாராகி வருகிறது. இந்த புதிய தொழில்நுட்ப வசதி, பயணிகளுக்கு விமான நிலையத்திற்குள் கடைகளில் ஷாப்பிங் செய்யவும், உணவகங்களில் சாப்பிடவும் உதவும். இந்த ஸ்மார்ட் ட்ராலிகள் , பயணிகளுக்கு ஒரு புதிய அனுபவத்தை வழங்கும் . இவை சிறிய, தொழில்நுட்பம் நிறைந்த வண்டிகள். இவற்றில் ஒரு திரை பொருத்தப்பட்டிருக்கும். பயணிகள் தங்கள் போர்டிங் பாஸை இந்த திரையில் ஸ்கேன் செய்ய வேண்டும். அப்படி ஸ்கேன் செய்தவுடன், விமானம்…

Read More

சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் கூட்ட நெரிசல் ஏற்படாமல் இருக்க புதிய முறை அமல்!

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (CMRL) பயணிகள் எதிர்கொள்ளும் கூட்ட நெரிசலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய நடவடிக்கைகளை அமல்படுத்தியுள்ளது. குறிப்பாக, காலை மற்றும் மாலை நேரங்களில் ஏற்படும் அதிகப்படியான கூட்டத்தை சமாளிக்க, தானியங்கி கட்டண வசூல் (AFC) கேட்கள் மற்றும் கூடுதல் கட்டண வசூல் கவுண்டர்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபோல், அண்ணா நகர் கிழக்கு, ஷெனாய் நகர் உள்ளிட்ட முக்கிய நிலையங்களிலும் விரைவில் கூடுதல் கேட்கள் அமைக்கப்பட உள்ளன. தியாகராய கல்லூரி மெட்ரோ ரயில்…

Read More

தமிழகத்தில் பொங்கல் பரிசு நாளை முதல் விநியோகம்

பொங்கல் பரிசுத்தொகுப்பு உடன் ரூ.3,000 பரிசுத்தொகை விநியோகத்தை தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நாளை தொடங்கி வைக்கிறார். சென்னை ஆலந்தூரில் உள்ள நியாயவிலை கடையில் பொங்கல் பரிசு தொகுப்பை முதல்வர் ஸ்டாலின் பொதுமக்களுக்கு வழங்க உள்ளார். அதன் பின்பு மற்ற பகுதிகளிலும் பொங்கல் தொகுப்பு விநியோகம் செய்யப்படுகிறது. பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் தமிழகம் முழுவதும் அணைத்து வீடுகளுக்கும் வழங்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

Read More

இலங்கை கடற்படையினரால் 3 பேர் கைது

காரைக்கால் அடுத்த கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தை சேர்ந்த ராஜா என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் கடந்த 29ம் தேதி காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து 11 மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க சென்றனர். அவர்கள் இன்று அதிகாலை மீன் பிடித்து கொண்டிருந்த போது 11 காரைக்கால் மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த நிலையில் கைது செய்யப்பட்ட மீனவர்களை விடுவிக்க மத்திய மற்றும் மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்…

Read More

தச்சங்குறிச்சியில் முதல் ஜல்லிக்கட்டு

தமிழர்களின் கலாச்சார – பாரம்பரியத்தை பறைசாற்றும் ஜல்லிக்கட்டு போட்டிகள் இந்த ஆண்டும் தமிழ்நாடு முழுவதும் விமர்சையாக நடைபெற தயாரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழ்நாட்டில் இந்த ஆண்டிற்கான முதல் ஜல்லிக்கட்டு புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் வருகின்ற ஜனவரி 3ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அந்த போட்டியில் பங்கேற்க உள்ள காளையர்களுக்கும் மாடுபிடி வீரர்களுக்கும் புனித விண்ணேற்பு அன்னை ஆலயத்தில் டோக்கன் விநியோகிக்கும் பணி தொடங்கியது. வீரர்கள் டோக்கன்களை பெற முண்டியடித்ததால் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது….

Read More

புதுவையில் தொடரும் விபத்துக்கள் – மக்கள் அச்சம்

புதுவையில் தொடர் சாலை விபத்துகள் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. புதுவை தவளக்குப்பம் அடுத்த அபிஷேகப்பாக்கம் சேத்திலால் நகரை சேர்ந்த விக்னேஷ், சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்த இவர், ஊருக்கு வந்திருந்த நிலையில், நண்பர் தனுஷுடன் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, எதிர்திசையில் வந்த கேரளாவை சேர்ந்த சஞ்சய் குமாரின் பைக்குடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் மூவரும் படுகாயமடைந்து அரசு மருத்துவமனைக்கு அனுப்பப்பட்ட நிலையில், விக்னேஷ் மருத்துவமனைக்கு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்….

Read More

LJK தலைவரின் மகளிருக்கான வாக்குறுதிகள் விளக்கம்!

லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் ஆலோசனைப்படி, உழவர்கரை தொகுதிக்குட்பட்ட உழவர்கரை பகுதி பெண்களுடன் சந்திப்பு நடத்திய கட்சியின் மகளிர் அணி தலைவி பிரபா தேவி லட்சிய ஜனநாயக கட்சியின் மகளிர் நலனுக்கான வாக்குறுதிகள் மற்றும் LJKவில் மகளிருக்கான முக்கியத்துவம் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். இதனைத் தொடர்ந்து, அதே தொகுதிக்குட்பட்ட ஜவஹர் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், லட்சிய ஜனநாயக கட்சியின் ஆறு முக்கிய மகளிர் திட்டங்கள் குறித்து அப்பகுதி மகளிர் குழு பெண்களிடம்…

Read More

PAN-ஆதார் இணைப்புக்கு இன்றே கடைசி நாள் – வருமான வரித் துறை எச்சரிக்கை

PAN எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க இன்றே (31.12.25) கடைசி நாள் என வருமான வரித் துறை அறிவித்துள்ளது. இதுவரை PAN-ஆதார் இணைப்பை மேற்கொள்ளாதவர்கள், இன்றைக்குள் ரூ.1,000 தாமதக் கட்டணம் செலுத்தி ஆதார் எண்ணை PAN எண்ணுடன் இணைக்க வேண்டும் என வருமான வரித் துறை அறிவுறுத்தியுள்ளது. குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் PAN-ஆதார் இணைப்பை செய்யத் தவறினால், PAN எண் செல்லாது (Inactive) என அறிவிக்கப்படும் என்றும், இதனால் வருமான வரி தொடர்பான சேவைகள், வங்கி பரிவர்த்தனைகள் உள்ளிட்ட…

Read More

புத்தாண்டு கொண்டாட்டம் முன்னிட்டு சென்னையில் விரிவான போக்குவரத்து மாற்றங்கள் – காவல்துறை அறிவிப்பு

புத்தாண்டு கொண்டாட்டத்தை முன்னிட்டு, சென்னையில் இன்று இரவு முதல் நாளை காலை வரை முக்கிய பகுதிகளில் போக்குவரத்து கட்டுப்பாடுகள் மற்றும் மாற்றங்கள் அமல்படுத்தப்படுவதாக சென்னை காவல்துறை அறிவித்துள்ளது. அதன்படி, காமராஜர் சாலையில் போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை இன்று இரவு 8 மணி முதல் காலை 6 மணி வரை வாகனப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்படும். மேலும், அனைத்து மேம்பாலங்களிலும் இன்று இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை வாகனங்கள்…

Read More

9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் – தமிழக அரசு உத்தரவு

தமிழக அரசில் 9 ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை உள்ளடக்கிய பணியிடமாற்றங்களை மேற்கொண்டு அரசு உத்தரவு வெளியிட்டுள்ளது. அதன்படி, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக பணியாற்றி வந்த சத்யபிரத சாகு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் முதன்மை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார். நில நிர்வாக ஆணையராக இருந்த பழனிசாமி, கூட்டுறவுத்துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை செயலாளராக மாற்றப்பட்டுள்ளார். போக்குவரத்து மற்றும் சாலைப் பாதுகாப்பு ஆணையராக பணியாற்றிய கஜலட்சுமி, நில நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார்….

Read More

தூய்மை பணியை தனியாருக்கு ஒப்படைப்பதற்கு எதிர்ப்பு – அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்கள் கைது

சென்னை அண்ணா அறிவாலயத்தை முற்றுகையிட முயன்ற தூய்மை பணியாளர்களின் போராட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.தூய்மை பணிகளை தனியாருக்கு ஒப்படைக்கும் அரசின் முடிவை கண்டித்து, திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தை நோக்கி தூய்மை பணியாளர்கள் பேரணியாக சென்றனர். அப்போது போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி கைது செய்ய முயன்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தூய்மை பணியாளர்கள் சாலையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர். மேலும், கைது செய்ய மறுத்து சாலையில் வாகனங்களின் அடியில் படுத்து உருண்டு தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்….

Read More

Recap of 2025: அரசியல் மாற்றங்கள், பேரிடர்கள், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் – இந்தியாவையும் உலகையும் உலுக்கிய ஆண்டு

2025 ஆண்டு இந்தியாவுக்கும் உலகுக்கும் பல்வேறு வகையில் மறக்க முடியாத ஆண்டாக அமைந்தது. அரசியல் களத்தில் புதிய கட்சிகள், அதிர்ச்சியூட்டிய குற்றச் சம்பவங்கள், இயற்கை பேரிடர்கள், பாதுகாப்பு மற்றும் சைபர் அச்சுறுத்தல்கள் என பல நிகழ்வுகள் மக்கள் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின. அரசியல்: புதிய கட்சிகள், புதிய அரசியல் போக்கு 2025 ஆம் ஆண்டில் தமிழ் திரையுலக நடிகர் விஜய் அரசியலில் முழுமையாக களமிறங்கி, புதிய அரசியல் கட்சியை தொடங்கினார். அவரது அரசியல் பயணம் தமிழக…

Read More

பொங்கல் பரிசுத் தொகுப்பு: ரேஷன் அட்டைதாரர்களுக்கு 2.22 கோடி குடும்பங்கள் பயன்

தமிழகத்தில் வரவுள்ள பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, ரேஷன் அட்டைதாரர்களுக்கு அரசு சார்பில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்கள் பயன்பெற உள்ளனர். இதற்காக மொத்தமாக 22,291 டன் பச்சரிசி மற்றும் சர்க்கரை ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. பொங்கல் பரிசுத் தொகுப்பில், பச்சரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கப்பட உள்ள நிலையில், பொங்கல் வேட்டி மற்றும் சேலை கொள்முதல் பணிகள் 85…

Read More

சென்னையில் ஆபரணத் தங்கம் விலையில் கடும் சரிவு

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் குறிப்பிடத்தக்க அளவில் சரிவு ஏற்பட்டுள்ளது. சவரனுக்கு ரூ.3,360 குறைந்ததால், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ரூ.1,00,800க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலையும் ரூ.420 குறைந்து, இன்று ரூ.12,600 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. தங்க விலையில் ஏற்பட்டுள்ள இந்த திடீர் குறைவு, நகை வாங்குவோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே, வெள்ளி விலையும் குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.23 குறைந்து, இன்று ரூ.258க்கு…

Read More

ஒரு சிகரெட் ரூ.72 உயர்வு.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள கலால் சட்டத்திருத்தத்தால், புகையிலைப் பொருட்களின் விலை கணிசமாக உயரக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சட்டத்திருத்தத்தின் காரணமாக, தற்போது ரூ.18க்கு விற்பனை செய்யப்படும் ஒரு சிகரெட்டின் விலை ரூ.72 வரை உயர வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேபோல், மெல்லும் புகையிலைக்கு விதிக்கப்படும் வரியும் தற்போதுள்ள 25 சதவீதத்திலிருந்து 100 சதவீதமாக உயர்த்தப்படலாம் என கூறப்படுகிறது. இதன் மூலம் புகையிலைப் பொருட்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக…

Read More

கரூர் விஜய் பிரச்சார கூட்டம் வழக்கு: டெல்லி சிபிஐ அலுவலகத்தில் விசாரணை

கரூர் விஜய் பிரச்சார கூட்டத்தின் போது 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான வழக்கில், டெல்லியில் உள்ள மத்திய புலனாய்வு அமைப்பு (CBI) அலுவலகத்தில் விசாரணை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த வழக்கின் விசாரணைக்காக, த.வெ.க. (தமிழக வெற்றி கழகம்) தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா, டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக த.வெ.க. பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்திடமும் சிபிஐ அதிகாரிகள் டெல்லி அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டதாக தகவல்கள்…

Read More

வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4.42 லட்சம் பேர் விண்ணப்பம்

தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் புதியதாக பெயர் சேர்க்க இதுவரை 4.42 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக தேர்தல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. வரும் தேர்தல்களை முன்னிட்டு, தகுதி பெற்ற புதிய வாக்காளர்கள் அதிக அளவில் விண்ணப்பித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஆன்லைன் மற்றும் நேரடி முறைகளில் விண்ணப்பங்கள் பெறப்பட்டு வரும் நிலையில், சில பகுதிகளில் படிவங்கள் சரியாக பெறப்படாதது மற்றும் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, ஊரக பகுதிகளில் படிவம் கொடுப்பதில் குழப்பங்கள் நீடிப்பதால்,…

Read More

மீண்டும் கீழடி அகழாய்வு: 11-ஆம் கட்ட பணிகளுக்கு மத்திய அரசு அனுமதி

சிவகங்கை மாவட்டம் கீழடியில் நடைபெற உள்ள 11-ஆம் கட்ட அகழாய்வு பணிகளுக்கு மத்திய அரசு அதிகாரப்பூர்வ அனுமதி வழங்கியுள்ளது. உலகளவில் தமிழர் நாகரிகத்தின் தொன்மையை வெளிப்படுத்திய முக்கியமான ஆய்வு தளமாக கீழடி கருதப்படுகிறது. இதற்கு முன் நடைபெற்ற அகழாய்வுகளில், நகர்ப்புற திட்டமிடல், சுடுமண் பாத்திரங்கள், கட்டிட அமைப்புகள், எழுத்துச் சான்றுகள் உள்ளிட்ட பல முக்கியமான தொல்லியல் ஆதாரங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இவை சங்ககால தமிழர் நாகரிகம் மிக உயர்ந்த நிலையில் இருந்ததை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளன. தற்போது ஜனவரி…

Read More

நெடுந்தீவு அருகே மீன்பிடித்த போது கைது – ராமேஸ்வரம் மீனவர்களுக்கு சிறை

ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த மூன்று மீனவர்கள், நெடுந்தீவு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற ராமேஸ்வரம் மீனவர்களை, எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் குற்றம் சாட்டி இலங்கை கடற்படை கைது செய்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட மூன்று மீனவர்களையும் யாழ்ப்பாணம் சிறையில் அடைக்க இலங்கை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சம்பவம், ராமேஸ்வரம் மற்றும் சுற்றுவட்டார மீனவர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. தொடர்ந்து நடைபெறும் கைது நடவடிக்கைகள்…

Read More

கேப்டன் விஜயகாந்த்: திரையுலகிலிருந்து அரசியல் வரை – ஒரு போராளியின் பயணம்

தமிழ் திரையுலகிலும் தமிழக அரசியலிலும் தனித்துவமான முத்திரை பதித்தவர் கேப்டன் விஜயகாந்த். நடிகர், அரசியல்வாதி, மக்கள் தலைவன் என பல அடையாளங்களுடன் வாழ்ந்த அவரது வாழ்க்கை, எளிய மக்களின் நம்பிக்கையாகவும் போராட்டக் குரலாகவும் அமைந்தது. 1952 ஆகஸ்ட் 25ஆம் தேதி மதுரை மாவட்டத்தில் பிறந்த விஜயகாந்த், ஆரம்பத்தில் சினிமா மீது கொண்ட ஆர்வத்தின் காரணமாக தமிழ் திரையுலகில் காலடி வைத்தார். 1979ஆம் ஆண்டு வெளியான இனிக்கும் இளமை திரைப்படத்தின் மூலம் அறிமுகமான அவர், 1980–90களில் ஆக்‌ஷன் ஹீரோவாக…

Read More

மலேசியாவிலும் ‘TVK’ முழக்கம் – ரசிகர்களிடையே உற்சாகம்

மலேசியாவிலும் ‘TVK’ முழக்கம் – அரங்கம் முழுவதும் உற்சாக அலை மலேசியாவில் தற்போது நடைபெற்று வரும் பிரம்மாண்டமான பொது நிகழ்ச்சியில் நடிகர் விஜய் பங்கேற்று வருகிறார். ஆயிரக்கணக்கான ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் திரண்டுள்ள இந்த நிகழ்ச்சி, பெரும் உற்சாக சூழலில் நடைபெற்று வருகிறது. நிகழ்ச்சி அரங்கில் நடிகர் விஜய் தோன்றியதுமே, ரசிகர்கள் “TVK… TVK…” என முழக்கங்களை எழுப்பி வருகின்றனர். இந்த முழக்கங்கள் அரங்கம் முழுவதும் எதிரொலித்து, நிகழ்ச்சியின் சூழலை மேலும் உற்சாகமாக மாற்றியுள்ளது. விஜயின் அரசியல்…

Read More

LJK | முருகன் கோவில் திருப்பணிக்கு ரூ.1 லட்சம் நன்கொடை

புதுவை உழவர்கரை தொகுதியில் உள்ள ரெட்டியார்பாளையம் புதுநகர் ஸ்ரீசக்திவேல் முருகன் ஆலயத்தின் திருப்பணிகளுக்காக ரூ.1 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டது. இந்த நன்கொடையை ஒரு லட்சம் ரூபாய் நன்கொடை வழங்கினார் LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின். முருகன் கோவிலின் திருப்பணிகள் சிறப்பாக நடைபெற வேண்டும் என்ற நோக்கில் இந்த உதவி வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நன்கொடை வழங்கும் நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், பகுதி பொதுமக்கள் மற்றும் பலர் கலந்து கொண்டு, ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு நன்றியை தெரிவித்தனர். இந்த…

Read More

புது வரலாறு படைத்த ஹர்மன்ப்ரீத் கெளர்!

சர்வதேச மகளிர் டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய மைல்கல்லை இந்திய அணியின் கேப்டன் ஹர்மன்ப்ரீத் கெளர் பதிவு செய்துள்ளார். கேப்டனாக அவர் தலைமையில் இந்திய மகளிர் அணி 77 வெற்றிகளை பெற்றுள்ளதன் மூலம், டி20 சர்வதேச போட்டிகளில் அதிக வெற்றிகள் பெற்ற கேப்டன் என்ற சாதனையை ஹர்மன்ப்ரீத் கெளர் கைப்பற்றியுள்ளார். இதுவரை இந்த சாதனையை ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் மெக் லானிங் வைத்திருந்தார். அவர் தலைமையில் ஆஸ்திரேலியா அணி 76 வெற்றிகளை பதிவு செய்திருந்தது. தற்போது…

Read More

போராட முயன்ற இடைநிலை ஆசிரியர்கள் கைது.

தமிழக அரசு பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி பணியில் சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு வகை ஊதியமும், அதே ஆண்டு ஜூன் 1-ம் தேதி நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு வேறு வகை ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டதால், ஒருநாள் வித்தியாசத்தால் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைவு ஏற்பட்டுள்ளது. இந்த ஊதிய முரண்பாட்டால் சுமார் 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமையை நீக்கி, ‘சம வேலைக்கு சம ஊதியம்’ வழங்க வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் நீண்ட…

Read More

ஜனவரி 20ம் தேதி தமிழக சட்டப்பேரவை கூடுகிறது

2026ஆம் ஆண்டின் முதல் தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஜனவரி 20ஆம் தேதி தொடங்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான ஆளுநர் ஒப்புதலை தொடர்ந்து, சட்டப்பேரவை கூட்டம் ஜனவரி 20ஆம் தேதி காலை 9.30 மணிக்கு கூடும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். புதிய ஆண்டின் முதல் கூட்டத்தொடராக நடைபெறும் இந்த சட்டப்பேரவை அமர்வில், முக்கிய அரசியல் மற்றும் நிர்வாக விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், மாநிலத்தின் வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் மற்றும் பொருளாதார நிலை…

Read More

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு: சவரன் ரூ.1,03,120-க்கு விற்பனை

சென்னையில் இன்று ஆபரணத் தங்கம் விலையில் கணிசமான உயர்வு ஏற்பட்டுள்ளது. ஒரு சவரன் தங்கம் ரூ.560 உயர்ந்து ரூ.1,03,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.70 உயர்ந்து ரூ.12,890-க்கு விற்பனையாகி வருகிறது. கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது தங்க விலையில் ஏற்பட்ட இந்த உயர்வு, நகை வாங்குவோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது. இதனிடையே, வெள்ளி விலையும் உயர்வை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.9 உயர்ந்து ரூ.254-க்கு விற்பனையாகி வருகிறது. சர்வதேச சந்தை நிலவரம், அமெரிக்க…

Read More

இடியாப்பம் விற்பனைக்கு இனி உரிமம் கட்டாயம்

சைக்கிள் மற்றும் இருசக்கர வாகனங்களில் இடியாப்பம் விற்பனை செய்யும் வியாபாரிகள், இனி உரிய உரிமம் பெற்ற பின்னரே விற்பனை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது. உணவின் தரம் மற்றும் பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்த உரிமத்தை ஆன்லைன் மூலம் இலவசமாக பெறலாம் எனவும் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பெறப்படும் உரிமம் ஆண்டுக்கு ஒருமுறை புதுப்பிக்கப்பட வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. சில பகுதிகளில் தரமற்ற இடியாப்பங்கள்…

Read More

LJKவில் இணைந்த மாற்றுக் கட்சியினர்

காரைக்கால் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செயலாளர், பாஜக தெற்கு பூத் தலைவர் உள்ளிட்ட மாற்றுக் கட்சியினர், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களை நேரில் சந்தித்து, தங்களை அதிகாரப்பூர்வமாக LJK கட்சியில் இணைத்துக் கொண்டனர். இந்த சந்திப்பின் போது, LJK கட்சியின் கொள்கைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் விளக்கமளித்தார். மேலும், கட்சியின் வளர்ச்சிக்கும் மக்கள்சேவைக்கும் புதிய உறுப்பினர்களின் பங்களிப்பு முக்கியமானதாக இருக்கும் என…

Read More

மலேசியாவில் நடைபெறும் ‘தளபதி கச்சேரி’ விழாவுக்கு கடும் கட்டுப்பாடுகள்

கோலாலம்பூர்:மலேசியாவில் வரும் டிசம்பர் 27ஆம் தேதி நடைபெற உள்ள ‘தளபதி கச்சேரி’ விழாவை முன்னிட்டு, விழா நடைபெறும் மைதானத்தில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பாதுகாப்பு மற்றும் ஒழுங்குமுறை காரணங்களுக்காக இந்த நிபந்தனைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன்படி, 5 வயதுக்கு குறைவான குழந்தைகளுக்கு விழா மைதானத்திற்குள் அனுமதி வழங்கப்படாது. மேலும், ஒருமுறை மைதானத்திற்குள் நுழைந்து வெளியே சென்றால், மீண்டும் உள்ளே செல்ல அனுமதி கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக, உணவுப் பொருட்கள், மது வகைகள் (ஆல்கஹால்),…

Read More

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை உயர்வு

சென்னை:சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று உயர்ந்துள்ளது. ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.160 உயர்ந்து, ரூ.1,02,560-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.20 உயர்ந்து, ரூ.12,820-க்கு விற்பனையாகிறது. இதனிடையே, வெள்ளி விலையும் உயர்வு கண்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.1 உயர்ந்து, ரூ.245-க்கு விற்பனையாகி வருகிறது. தங்கம் மற்றும் வெள்ளி விலைகளில் ஏற்பட்ட இந்த மாற்றம், நகை வாங்குவோரிடையே கவனத்தை ஈர்த்துள்ளது.

Read More

ஓடும் ரயிலில் சட்டக்கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை: காவலர் பணியிடை நீக்கம்

சென்னை / கோவை: சென்னையிலிருந்து கோவைக்கு பயணித்த சட்டக்கல்லூரி மாணவிக்கு, ஓடும் ரயிலில் பாலியல் தொல்லை அளித்ததாக கூறப்படும் காவலர் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். கோவை ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்தில் காவலராக பணியாற்றி வரும் சேக் முகமத், பாதுகாப்பு பணிக்காக சென்னைக்கு சென்று விட்டு, கடந்த சனிக்கிழமை சென்னை-கோவை இன்டர்சிட்டி ரயிலில் கோவைக்கு திரும்பியுள்ளார். அதே ரயிலில், சென்னையில் சட்டக்கல்லூரியில் பயிலும் கோவையைச் சேர்ந்த மாணவி பயணம் செய்துள்ளார். ரயில் காட்பாடி அருகே வந்தபோது, மாணவியின்…

Read More

MGR | எம்ஜிஆர் நினைவு தினம்: மெரினாவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மரியாதை

சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக நிறுவனத் தலைவருமான எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை மெரினாவில் அமைந்துள்ள அவரது நினைவிடத்தில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கட்சியினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்த நிகழ்வில், எம்ஜிஆரின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி அஞ்சலி செலுத்திய அதிமுகவினர், அவரது கொள்கைகள் மற்றும் மக்கள் நலத் திட்டங்களை தொடர்ந்து முன்னெடுத்து செல்ல உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இதில் முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், மாவட்ட…

Read More

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் – படக்குழு அறிவிப்பு

சென்னை: ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘பராசக்தி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி மாற்றப்பட்டுள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதற்கான காரணங்களையும் படக்குழு விளக்கியுள்ளது. சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில், சிவகார்த்திகேயனுடன் ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் ஆகாஷ் பாஸ்கரன் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இது அவரின் 100-வது திரைப்படம் என்பதும் குறிப்பிடத்தக்கது….

Read More

தந்தை பெரியாரின் நினைவு தினத்தையொட்டி மரியாதை செலுத்திய முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: தந்தை பெரியாரின் நினைவு தினத்தை முன்னிட்டு, சென்னை அண்ணா சாலையில் அமைந்துள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது, தந்தை பெரியாரின் உருவப்படத்திற்கு மலர்தூவி, அவரது புகழுக்கு முதல்வர் அஞ்சலி செலுத்தினார். சமூக சீர்திருத்தம், சுயமரியாதை, பகுத்தறிவு போன்ற கொள்கைகளால் தமிழ்சமூகத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய தந்தை பெரியாரின் பங்களிப்புகளை நினைவுகூரும் வகையில் இந்த மரியாதை நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலரும்…

Read More

போலி மருந்து விவகாரத்தில் அதிகாரிகள் அதிரடி: முன்னாள் IFS அதிகாரி கைது

ஓசூர்: போலி மருந்துகள் தயாரித்து விற்பனை செய்ததாக தொடர்புடைய வழக்கில், முன்னாள் IFS அதிகாரி சத்தியமூர்த்தியை, ஓசூர் அருகே CBCID போலீசார் கைது செய்துள்ளனர். போலி மருந்து விவகாரம் தொடர்பாக நடைபெற்று வரும் விசாரணையின் ஒரு பகுதியாக, அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி நடவடிக்கையில் இந்த கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வழக்கில், GST அலுவலக கண்காணிப்பாளர் பரிதா என்பவரிடமும் தொடர்ந்து தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. போலி மருந்து தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு தொடர்புடைய ஆவணங்கள்,…

Read More

சென்னையில் தங்கம், வெள்ளி விலை உயர்வு

சென்னை: சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. சவரனுக்கு ரூ.240 உயர்ந்து, ஒரு சவரன் தங்கம் ரூ.1,02,400க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், தங்கத்தின் கிராம் விலை ரூ.30 உயர்ந்து, ஒரு கிராம் தங்கம் ரூ.12,800க்கு விற்பனையாகிறது. வெள்ளி விலையும் உயர்வடைந்துள்ளது. கிராமுக்கு ரூ.10 உயர்ந்து, ஒரு கிராம் வெள்ளி ரூ.244க்கு விற்பனை செய்யப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பில் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக தங்கம், வெள்ளி விலைகள் உயர்ந்துள்ளதாக வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

Read More

கூடுவாஞ்சேரியில் போராட்டம்: செவிலியர்கள் வலுக்கட்டாயமாக கைது – போலீஸ் நடவடிக்கைக்கு கண்டனம்

சென்னை அருகே கூடுவாஞ்சேரியில் நடைபெற்ற போராட்டக் களத்திற்கு வந்த செவிலியர்களை போலீசார் வலுக்கட்டாயமாக கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அகிம்சை முறையில் போராட்டம் நடத்த வந்த செவிலியர்கள் மீது போலீசார் கடுமையாக நடந்து கொண்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. கைது நடவடிக்கையின் போது, கழிவறைக்கு கூட செல்ல அனுமதிக்காமல் போலீசார் நடந்துகொண்டதாக செவிலியர்கள் ஆதங்கம் தெரிவித்தனர். மனிதாபிமானம் இல்லாத இந்த அணுகுமுறை ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும், அமைதியான முறையில் போராடும் தங்களை இப்படித்தான்…

Read More

கீழடி, பொருநை அருங்காட்சியகங்களை பிரதமர் மோடி நேரில் பார்வையிட வேண்டும் – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்

நெல்லையில் நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் பேசிய தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கீழடி மற்றும் பொருநை அருங்காட்சியகங்களின் வரலாற்று முக்கியத்துவத்தை வலியுறுத்தி முக்கிய கருத்துகளை முன்வைத்தார். தமிழர் நாகரிகத்தின் தொன்மையும், அதன் பண்பாட்டு மரபுகளும் உலகிற்கு வெளிப்படும் வகையில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகங்களை பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள், குறிப்பாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உள்ளிட்டோர் நேரில் வந்து பார்வையிட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். கீழடி அகழாய்வு, தமிழர் நாகரிகம் சங்க காலத்திற்கு முன்பே…

Read More

சென்னையில் 49-வது புத்தகக் கண்காட்சி: ஜனவரி 8 முதல் 21 வரை நந்தனம் YMCA திடலில்

சென்னை:சென்னையில் நடைபெற உள்ள 49-வது புத்தகக் கண்காட்சி, நந்தனம் YMCA திடலில் ஜனவரி 8ம் தேதி தொடங்கி 21ம் தேதி வரை நடைபெறுகிறது. இந்த புத்தகக் கண்காட்சியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தக ரசிகர்கள் மற்றும் வாசகர்கள் பெருமளவில் கலந்து கொள்ளும் இந்த கண்காட்சி, தினசரி காலை 11 மணி முதல் இரவு 8.30 மணி வரை பொதுமக்களுக்கு திறந்திருக்கும். தமிழ், ஆங்கிலம் உள்ளிட்ட பல மொழிகளிலான நூல்கள், கல்வி, இலக்கியம், குழந்தைகள்…

Read More

இந்திய அணி 9 தொடர்களை வென்று சாதனை.

ஆமதாபாத் : இந்தியா – தென் ஆப்பிரிக்கா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி ஆமதாபாத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணியின் கேப்டன் மார்க்ரம் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனை தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகளை இழந்து 231 ரன்கள் குவித்தது. இதனையடுத்து 232 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய தென் ஆப்பிரிக்கா…

Read More

நெல்லை ரெட்டியார்பட்டியில் அருங்காட்சியகம்: இன்று திறந்துவைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் ரெட்டியார்பட்டியில் அமைந்துள்ள பொற்கொடை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (டிசம்பர் 20) திறந்துவைக்கிறார். 13 ஏக்கர் நிலப்பரப்பில் 54,296 சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த பொற்கொடை அருங்காட்சியகம், ரூ.56.36 கோடி செலவில் தமிழக அரசால் உருவாக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் பண்பாட்டு, வரலாற்றுச் சிறப்புகளை எடுத்துரைக்கும் வகையில் இந்த அருங்காட்சியகம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பொற்கொடைப் பொருட்கள், தொன்மையான வரலாற்றுச் சான்றுகள் மற்றும் கலைப் பண்பாட்டு அடையாளங்களை பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம்,…

Read More

வாக்காளர் பட்டியல் நீக்கத்தில் ‘முகவரி இல்லாதவர்கள்’ எண்ணிக்கை கவலைக்கிடம்: ப.சிதம்பரம்

சென்னை:தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களின் விவரங்கள் குறித்து காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ப.சிதம்பரம் கவலை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள கருத்தில், வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டவர்களில் 26,32,672 பேர் இறந்தவர்கள் என்றும், 3,39,278 பேர் இரட்டைப் பதிவுகள் கொண்டவர்கள் என்றும் குறிப்பிட்டார். இந்த இரு காரணங்களையும் ஒரு அளவுக்கு ஏற்றுக்கொள்ளலாம் என அவர் தெரிவித்தார். ஆனால், 66,44,881 பேர் ‘முகவரி இல்லாதவர்கள்’ எனக் கூறி நீக்கப்பட்டிருப்பது தான் பெரும் நெருடலாக உள்ளது என…

Read More

LJK | லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை சந்தித்த உப்பளம் தொகுதி JCM மக்கள்

புதுச்சேரி உப்பளம் தொகுதியை சேர்ந்த JCM மக்கள் மன்ற நிர்வாகி ஆறுமுகம், லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்தார். இந்த சந்திப்பு நிகழ்வின்போது, JCM மக்கள் மன்றத்தின் துணைத் தலைவர் ரத்தினமும் உடனிருந்தார். சந்திப்பின் போது, சமூக மற்றும் மக்கள் நல தொடர்பான விவகாரங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் நடைபெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரியாதை சந்திப்பு, கட்சி மற்றும் மக்கள் மன்றத்திற்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் என…

Read More

சென்னையில் பிட்புல், ராட்வீலர் நாய்கள் வளர்ப்பில் புதிய கட்டுப்பாடுகள்

பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு, சென்னையில் பிட்புல் மற்றும் ராட்வீலர் இன நாய்களை புதிதாக வாங்கி வளர்ப்பதற்கு சென்னை மாநகராட்சி தடை விதித்துள்ளது. இந்த முடிவு, சென்னை மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, நாளை முதல் இந்த இரண்டு இன நாய்களையும் புதியதாக வாங்கி வளர்ப்பது அனுமதிக்கப்படாது. இந்த தடையை மீறி பிட்புல் அல்லது ராட்வீலர் இன நாய்களை புதிதாக வளர்ப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், ரூ.1 லட்சம்…

Read More

சென்னையில் ஆபரணத் தங்கம் விலை குறைவு: சவரன் ரூ.99,040-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று கணிசமாக குறைந்துள்ளது. ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ.480 குறைந்து ரூ.99,040-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராம் அடிப்படையில் தங்கத்தின் விலையும் ரூ.60 குறைந்து, ஒரு கிராம் ரூ.12,380-க்கு விற்கப்படுகிறது. தங்க விலை குறைந்துள்ளதால், நகை வாங்க திட்டமிட்டிருந்த வாடிக்கையாளர்கள் மத்தியில் மகிழ்ச்சி காணப்படுகிறது. சர்வதேச சந்தை நிலவரம் மற்றும் டாலர் மதிப்பின் மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் தங்கத்தின் விலையில் இம்மாற்றம் ஏற்பட்டுள்ளதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Read More

இன்று வெளியாகிறது வரைவு வாக்காளர் பட்டியல்: பெயர் இல்லையெனில் என்ன செய்ய வேண்டும்?

SIR பணிகளைத் தொடர்ந்து, தமிழ்நாட்டுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் இன்று (டிசம்பர் 19) வெளியிடப்படுகிறது. இதில் உங்கள் பெயர் இருக்கிறதா? இல்லை என்றால் என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். தேர்தல் ஆணையத்தின் https://electoralsearch.eci.gov.in/ என்ற இணையதளத்திற்குச் சென்று உங்களுடைய வாக்காளர் அடையாள எண் (EPIC) அல்லது உங்களுடைய தனிப்பட்ட விவரங்களை அளித்தால் விவரங்கள் திரையில் தோன்றும். அதில் உங்களுடைய பெயர், தந்தை பெயர், மாவட்டம், தொகுதி, வாக்குச்சாவடி இடம், வாக்குச்சாவடி தொகுதி எண் ஆகியவை…

Read More

பாதியிலே நிறுத்தப்பட்ட அரசு வீடுகள்: நரிக்குறவர் சமூக மக்கள் வேதனை

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் புறவழிச் சாலையில் அமைந்துள்ள திருவள்ளுவர் நகர் பகுதியில் வசித்து வரும் நரிக்குறவர் பழங்குடி சமூக மக்களுக்கு, தமிழக அரசின் இலவச வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வீடுகள் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. எனினும், இந்த வீடுகளின் கட்டுமானப் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டதால், பயனாளிகள் நீண்ட காலமாக வீடுகள் இன்றி தவித்து வருவதாக கூறப்படுகிறது. கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்கக் கோரி மாவட்ட நிர்வாகம், நகராட்சி, வட்டாட்சியர் உள்ளிட்ட…

Read More

திருப்பரங்குன்றம் மலை தீபத்தூண் சம்பவம்: அண்ணாமலை வருத்தம்

மதுரை திருப்பரங்குன்றம் மலை தீபத்தூணில் தீபம் ஏற்ற அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து, பக்தர் ஒருவர் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இந்த சம்பவத்தில் உயிரிழந்த பக்தரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்த அண்ணாமலை, இவ்விவகாரத்தில் நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார். சம்பவம் தொடர்பாக உண்மை நிலவரம் வெளிவரும் வரை அனைவரும் அமைதியும் பொறுமையும் காக்குமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டார். இந்த துயரச்…

Read More

ரெட்டியார்பாளையத்தில் லட்சிய ஜனநாயக கட்சி தலைமை அலுவலகம் திறப்பு

புதுவை : புதுவை ரெட்டியார்பாளையம் பகுதியில் லட்சிய ஜனநாயக கட்சியின் (LJK) தலைமை அலுவலகம் சிறப்பு பூஜைகளுடன் இன்று திறந்து வைக்கப்பட்டது. கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் குத்துவிளக்கேற்றி அலுவலகத்தை அதிகாரப்பூர்வமாக திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து பிள்ளையார் பூஜையுடன் அலுவலக திறப்பு விழா இனிதே நடைபெற்றது. அலுவலக திறப்பு விழாவிற்கு வருகை தந்த கட்சித் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினுக்கு சட்டமன்ற உறுப்பினர் சிவசங்கரன் சால்வை அணிவித்து வரவேற்றார். இந்த நிகழ்ச்சியில் லட்சிய ஜனநாயக…

Read More

விஜய் மக்கள் சந்திப்பு: காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள்

ஈரோடு: த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்கும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியை முன்னிட்டு, காவல்துறை சார்பில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி, நிகழ்ச்சி நடைபெறும் போது தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் பார்வை தடுப்புகள் அமைக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், பிரசார வாகனத்தில் முக்கிய நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என்றும், மக்களுக்கும் பிரசார வாகனத்திற்கும் குறைந்தபட்சம் 50 அடி இடைவெளி பராமரிக்கப்பட வேண்டும் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. நிகழ்ச்சி நடைபெறும் திடலில், தெளிவாக…

Read More

இன்று தங்கம் விலையில் சிறிய சரிவு: சவரன் ரூ.98,800

சென்னை: தங்கம் விலையில் இன்று சற்று குறைவு பதிவாகியுள்ளது. ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.165 குறைந்து ரூ.12,350-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதன் அடிப்படையில், சவரன் (8 கிராம்) தங்கத்தின் விலை ரூ.1,320 குறைந்து ரூ.98,800 ஆக விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை ரூ.4 குறைந்து ரூ.211-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. ஒரு கிலோ வெள்ளி ரூ.4 ஆயிரம் குறைந்து ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டு…

Read More

அதிகாரிகளின் வீடுகளில் இருந்த ஆர்டர்லிகள் திரும்பப் பெறல்.

சென்னை: அதிகாரிகளின் வீடுகளில் பாதுகாப்பு மற்றும் தனிப்பணிகளில் ஈடுபட்டு வரும் ஆர்டர்லி காவலர்கள் இனி அந்தப் பணிகளில் இருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று தமிழக பொறுப்பு டிஜிபி அபய் குமார் சிங் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், அதிகாரிகளின் இல்லங்களில் நியமிக்கப்பட்டு தனிப்பணிகளை மேற்கொண்டு வந்த காவலர்கள், தங்களது முதன்மை காவல் பொறுப்புகளுக்கு மீண்டும் மாற்றப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், பொதுப் பாதுகாப்பு மற்றும் துறை சார்ந்த முக்கிய பணிகளில் காவல் துறையின் மனிதவளத்தைச்…

Read More

ஈரோட்டில் நாளை மறுநாள் விஜய் பிரசார பொதுக்கூட்டம்: மைதானம் சீரமைக்கும் பணிகள் தீவிரம்

ஈரோடு: ஈரோடு மாவட்டம் விஜயமங்கலம் சரளை பகுதியில் உள்ள சுங்கச்சாவடி அருகே, நாளை மறுநாள் (வியாழக்கிழமை) த.வெ.க. சார்பில் மக்கள் சந்திப்பு பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கட்சித் தலைவர் விஜய் கலந்து கொண்டு உரையாற்றுகிறார். விஜயபுரி அம்மன் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் இந்த பொதுக்கூட்டம் நடைபெறவுள்ள நிலையில், 25 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கூட்டத்துக்கு அனுமதி கோரியபோது, போலீஸ் துறை சார்பில் 84 கேள்விகள் எழுப்பப்பட்டன. அவற்றுக்கான விளக்கங்கள்…

Read More

கோவில் நிலத்தில் அங்கன்வாடி கட்டிடம்? பூமி பூஜைக்கு எதிர்ப்பு!

புதுவை கதிர்காமம் தொகுதிக்குட்பட்ட சண்முகாபுரம் சொக்கநாதன்பேட் பகுதியில் சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதி மூலமாக புதிதாக அங்கன்வாடி கட்டிடம் கட்டுவதற்காக டெண்டர் விடப்பட்டது. இதையடுத்து, கட்டுமான பணிக்கான பூமிபூஜை நடத்த பந்தல் அமைக்கும் பணி நேற்று காலை நடந்தது. ஒப்பந்ததாரர், உழவர்கரை நகராட்சி அதிகாரிகள், தொகுதி நிர்வாகிகள் இதில் ஈடுபட்டனர். அப்போது, அப்பகுதி பொதுமக்கள் அங்கு வந்து, அங்கன்வாடி கட்டிடம் கட்டப்படும் இடம் கோயிலுக்கு சொந்தமான இடம் என்றும், இங்கு கட்டிடம் கட்டக்கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர்….

Read More

சென்னையில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் – இன்று 71 இடங்களில் ஏற்பாடு

சென்னையில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு, பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் நோக்கில் மழைக்கால சிறப்பு மருத்துவ முகாம்கள் இன்று (டிசம்பர் 15) நடத்தப்பட்டு வருகின்றன. நகரில் உள்ள 15 மண்டலங்களிலும் இந்த சிறப்பு மருத்துவ முகாம்கள் ஒரே நேரத்தில் நடைபெறுகின்றன. மழைக்காலத்தில் பரவும் காய்ச்சல், வைரஸ் தொற்று, சளி, இருமல் உள்ளிட்ட நோய்களுக்கு உடனடி சிகிச்சை மற்றும் ஆலோசனை வழங்கும் வகையில் இந்த முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக இன்று 71 இடங்களில் வடகிழக்கு பருவமழைக்கான சிறப்பு மருத்துவ முகாம்கள்…

Read More

வாகன சோதனையில் ஈடுபட்ட பெண் போலீஸை ஆட்டோவில் கடத்த முயற்சி – மயிலாப்பூரில் பரபரப்பு

சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில் அருகே, நேற்று முன்தினம் பெண் போலீஸ் ஒருவர் வாகன சோதனை பணியில் ஈடுபட்டிருந்தார். அந்த நேரத்தில், ஒருவழிப் பாதையில் இருந்து வேகமாக வந்த ஒரு ஆட்டோவை அவர் நிறுத்த முயன்றார். ஆட்டோவை ஓட்டிய நபர் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. முதலில் வாகனத்தை நிறுத்துவது போல நடித்து, திடீரென பெண் போலீஸை கட்டிப்பிடித்து ஆட்டோவில் ஏற்றி கடத்த முயன்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால் அதிர்ச்சியடைந்த பெண் போலீஸ் கூச்சலிட்டதையடுத்து, அருகில் இருந்த பொதுமக்கள்…

Read More

ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சத்தை எட்டும் அபாயம் – நகை வாங்குவோர் கவலை

சென்னையில் தங்கத்தின் விலை மீண்டும் வேகமாக உயர்ந்து வருவதால் நகை வாங்குவோர் அதிர்ச்சியடைந்துள்ளனர். சமீபத்தில் அமெரிக்க மத்திய பெடரல் வங்கி வட்டி விகிதத்தை குறைத்தது இந்த திடீர் விலை உயர்வுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. வட்டி விகிதம் குறைக்கப்படும்போது, முதலீட்டாளர்கள் அரசு பத்திரங்கள் மற்றும் சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்வதை குறைத்து, பாதுகாப்பான முதலீடாக கருதப்படும் தங்கத்தின் மீது அதிக கவனம் செலுத்துவது வழக்கம். இதன் காரணமாக தங்கத்தில் முதலீடு அதிகரித்து, அதன் விலை உயர்ந்து வருவதாக…

Read More

போலி மருந்து விவகாரத்தில் சிபிஐ விசாரணை மட்டுமே உண்மையை வெளிக்கொண்டு வரும் – ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:போலி மருந்து விவகாரத்தில் எத்தனை SIT குழுக்கள் அமைத்தாலும், முழுமையான வெளிப்படைத்தன்மை கிடைக்காது என்றும், சிபிஐ விசாரணை நடத்தினால் மட்டுமே உண்மை வெளிவரும் என்றும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். புதுச்சேரியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், நடிகர் விஜய் புதுச்சேரி குறித்து புரிதல் இல்லாமல் கருத்து தெரிவித்துள்ளார் என விமர்சனம் செய்தார். புதுச்சேரியைப் பற்றி தெளிவான புரிதல் இல்லாத நிலையில், அவருடன் கூட்டணி குறித்து அவசரமாக முடிவு எடுக்க…

Read More

சாதாரண குடும்பத்தில் பிறந்தவன்; சராசரி மக்களின் சிரமங்கள் எனக்கு தெரியும் – ஜோஸ் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:மக்களுக்கு நல்லது செய்யும் நோக்கத்துடன் தான் அரசியல் கட்சியை தொடங்கியுள்ளதாகவும், சாதாரண மனிதர்களின் வாழ்க்கைச் சிரமங்கள் தனக்கு நன்கு தெரியும் என்றும் லட்சிய ஜனநாயக கட்சியின் தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்தார். பாண்டி மெரினா கடற்கரையில் நடைபெற்ற கட்சி தொடக்க விழாவில் உரையாற்றிய அவர், “நாங்கள் பணத்துடன் பிறந்தவர்கள் அல்ல. என் தந்தை ரப்பர் தோட்டத் தொழிலாளி. எங்கள் குடும்பத்தின் தினசரி வாழ்வாதாரம் வெறும் 10 ரூபாய்தான். ஆட்டோவும் பேருந்திலும் பள்ளிக்குச் சென்றவன் நான். படிப்படியாக…

Read More

தனியார் பேருந்து டயர் வெடித்து எதிர் திசையில் இருசக்கர வாகனத்தில் வந்தவர் உயிரிழப்பு!

திண்டிவனம் அருகே தனியார் டிராவல்ஸூக்கு சொந்தமான பேருந்தின் முன்பக்க டயர் வெடித்து சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் எதிர்திசையில் பாய்ந்ததில் இருசக்கர வாகனத்தில் வந்த ஒருவர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்தார். மேலும், தனியார் பேருந்தில் பயணித்த 25 பேர் காயமடைந்தனர். திருச்சியில் இருந்து சுமார் 25 பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்னை நோக்கி தனியார் சொகுசு பேருந்து சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் திண்டிவனம் அடுத்த கேணிப்பட்டு அருகே பேருந்து நெருங்கியபோது…

Read More

த.வெ.க. அலுவலகத்துக்கு வந்த பா.ம.க.  வழக்கறிஞர் பாலு! திடீர் விசிட் ஏன் ?

பா.ம.க. செய்தித்தொடர்பாளரும் வழக்கறிஞருமான கே. பாலு இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் தலைமை அலுவலகத்திற்கு வந்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில் தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளின் கூட்டணி எந்தவிதத்தில் இருக்கப்போகிறது என்ற கேள்வி ஒருபுறம் எழுந்துள்ள நிலையில், பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழக அலுவலகத்திற்கு பா.ம.க. வழக்கறிஞர் பாலுவின் திடீர் விசிட் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பை வலியுறுத்தி, பாட்டாளி மக்கள்…

Read More

விஜயை முதல்வராக ஏற்றுக்கொள்வோரை அரவணைப்போம் – தவெக முக்கிய தீர்மானங்கள் வெளியீடு

பனையூர்:தமிழகவெற்றிக்கழகத்தின் (தவெக) மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாநில நிர்வாகிகள் கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில், எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் மற்றும் தேர்தல் தயாரிப்பை முன்னிட்டு நான்கு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திமுக ஆட்சியை மாற்றி புதிய தமிழகத்தை அமைக்க வேண்டும் கூட்டத்தில் பேசப்பட்ட முக்கிய அம்சமாக, ஊழல் அதிகரித்து வரும் திமுக ஆட்சியை மாற்றுவது காலத்தின் தேவையாக உள்ளது என்று வலியுறுத்தப்பட்டது. புதியதோர் தமிழகத்தை உருவாக்க தவெக தலைவர் விஜயை முதல்வராக ஏற்றுக்கொண்டு…

Read More

முதன்முறை ஐ.நா சபையில் அறிவிக்கப்பட்ட கட்சி

“நான் ஜோஸ் சார்லஸ் மார்ட்டின்,லட்சிய ஜனநாயகக் கட்சியின் தலைவர்”. இந்தியாவின் புதுவை யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த ஒரு தமிழன் என ஐ.நா மன்றத்தில் தன்னை அறிமுகப்படுத்திய சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின். சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின்,  சுவிட்சர்லாந்து ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் மேடையில் உரையாற்றினார். மனித உரிமைகளின் முக்கியத்துவம், அது உலகளவில் வலுப்படுத்தப்பட வேண்டிய அவசியம் மற்றும் கல்வியின் சக்தி குறித்து தனது உரையில் விரிவாக பேசினார். அவ்வுரையின் போது,…

Read More

சிம்பு நடிக்கும் ‘அரசன்’ படம் – படப்பிடிப்பு அதிகாரப்பூர்வமாக தொடங்கியது!

சிம்புவின் ‘தக் லைப்’ திரைப்படத்திற்குப் பிறகு உருவாகும், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கும் புதிய படத்தில் சிம்பு கதாநாயகனாக நடித்துவருகிறார். ‘அரசன்’ என்று படத்துக்கு பெயரிடப்பட்டுள்ள நிலையில் இத்திரைப்படம் வடசென்னையை மையமாகக் கொண்ட கேங்ஸ்டர் கதையாக உருவாகிறது. இதில் சமுத்திரக்கனி, கிஷோர், ஆண்ட்ரியா, இயக்குநர் நெல்சன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.கலைப்புலி எஸ். தாணு தயாரிக்கும் இந்த படத்தில், சிலம்பரசன் இளமையாகவும், முதுமையாகவும் சேர்ந்த இரண்டு வேறுபட்ட தோற்றங்களில் நடிப்பார் எனக் கூறப்படுகிறது….

Read More

சேதமடைந்த சமூகநலக்கூடம் – நேரில் பார்வையிட்ட JCM மக்கள் மன்ற நிர்வாகிகள்

திருநள்ளாறு தொகுதிக்குட்பட்ட இளையங்குடி கிராமத்தில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அவர்களின் அறிவுறுத்தலின்படி அப்பகுதியில் மக்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்த JCM மக்கள் மன்ற நிர்வாகிகள். இளையங்குடி பகுதியில் சமுதாய நலக்கூடம் மிக மோசமான நிலையில் உள்ளது. அங்கு வசிக்கும் மக்களுக்கு ஆபத்து ஏற்படும் விதத்தில் மிகவும் சேதமடைந்து காணப்படுகிறது. எனவே அப்பகுதி மக்களின் நலனை கருத்தில் கொண்டு விரைந்து நடவடிக்கை எடுக்கும்படி சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சார்பில் திருநள்ளாறு தொகுதி JCM…

Read More

இண்டிகோ விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்

டெல்லியிலிருந்து சென்னை நோக்கி வந்த இண்டிகோ விமானத்தில் வெடிகுண்டு இருப்பதாக அச்சுறுத்தல் தகவல் வந்ததால் விமானத்துறையில் பரபரப்பு நிலவியது. இன்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு புறப்பட்ட இந்த விமானத்தில் நடுவழியில் விமானத்துறைக்கு வந்த தகவல் பாதுகாப்பு அமைப்புகளை எச்சரிக்கையாக்கியது. உடனடியாக தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, விமானம் எந்த பிரச்சனையும் இல்லாமல் சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கியவுடன் அனைத்து பயணிகளும் ஒழுங்காக வெளியேறச் செய்யப்பட்டு, விமானத்தில் உள்ள சாமான்கள் மற்றும் பிரிவுகள் முழுவதும்…

Read More

கோவையில் செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம்!

கோவை மாவட்டம், தடாகம் பகுதியில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளுக்கு ரூபாய் 900 கோடி அபராதம் விதிக்க டெல்லியில் உள்ள எரிசக்தி ஆராய்ச்சி நிறுவனம் (டெரி) ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்து உள்ளது.செங்கல் சூளைகளுக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிக்கை நகல் அனுப்பி வருகிறது.கோவை மாவட்டம் சின்ன தடாகம், வீரபாண்டி, நஞ்சுண்டாபுரம், சோமயம்பாளையம், பன்னிமடை உள்ளிட்ட பகுதிகளில் செயல்பட்டு வந்த செங்கல் சூளைகளால் மலையடிவாரம் அருகே உள்ள ஓடைகள் நீர் வழித்தடங்கள் சட்டவிரோதமாக 1.10 கோடி…

Read More

தமிழக வெற்றி கழக கூட்டத்திற்கு கடும் நிபந்தனைகள்!

தமிழக வெற்றி கழகத்தின் கூட்டத்திற்கு புதுவை காவல்துறை வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்துள்ளது. புதுவையைச் சேர்ந்த ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி என்றும் க்யூ ஆர் கோடு அனுமதி சீட்டு உள்ளவர்களுக்கு மட்டுமே அனுமதி என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது. மேலும் அண்டை மாநிலமான தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு அனுமதி இல்லை எனவும் கர்ப்பிணி பெண்கள், குழந்தைகள் முதியோருக்கு அனுமதியில்லை என காவல்துறை தெரிவித்துள்ளது. குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளையும் பாதுகாப்பு வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும் என தமிழக வெற்றி…

Read More

“ஹர ஹர சிவாய நம ஓம்”! விண்ணை பிளந்த பக்தர்கள் கோஷம்! – காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோவில் கும்பாபிஷேகம்!

உலக பிரசித்தி பெற்ற காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயில் குடமுழுக்கு, வாண வேடிக்கைகள் மற்றும் 70க்கும் மேற்பட்ட சிவாச்சாரியார்களுடன் வாத்தியங்கள் முழங்க, புனித நீர் தெளிக்கப்பட்டு இன்று அதிகாலை சிறப்பாக நடைபெற்றது. கோவில் திருப்பணிகள் ரூ.29 கோடி மதிப்பீட்டில் பழமை மாறாமல் நடைபெற்றன. பஞ்சபூத தலங்களில் நிலத்திற்கு உரியதாக போற்றப்படும் காஞ்சிபுரம் ஏலவார்குழலி சமேத ஏகாம்பரநாதர் கோவில், சுமார் 3500 ஆண்டுகள் பழமையானது. 17 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த கோவிலில் குடமுழுக்கு விழா நடைபெற்றது. இன்று அதிகாலை 5:45…

Read More

பழனி – திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம்! ஆயிரக்கணக்கில் குவிந்த பக்தர்கள்!

பழனியில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி மலையடிவாரத்தில் உள்ள திருஆவினன்குடி கோயிலில் கடந்த 4ஆம் தேதி யாகசாலை பூஜையுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இந்த நிலையில், இன்று அதிகாலை 4 மணிக்குச் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க 6ஆம் கால யாகசாலை வேள்விகள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து, புனித கலசங்கள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு, குழந்தை வேலாயுத சுவாமி கருவறை விமானம்,…

Read More

தமிழ்நாடு பாழாகிவிடும் – வைகோ கடும் விமர்சனம்!

கட்சி நிர்வாகி இல்ல திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் தமிழ்நாடு அரசை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடிந்து பேசியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கொரட்டூரில் மதிமுக கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டில் போதை பழக்கங்கள் அதிகமாகி உள்ளதாக பேசினார். தொடர்ந்து பேசிய வைகோ தமிழகத்தின் பல்வேறு குற்ற சம்பவங்கள் நடைபெறுவதற்கு போதைப் பழக்கம் தான் காரணம் எனவும் தமிழ்நாட்டில் போதை பழக்கவழக்கங்கள்…

Read More

TVK Protest | தருமபுரி போராட்டத்தில் காவலரை கடித்த த.வெ.க. தொண்டர் கைது!

தருமபுரி மாவட்டம் பாலக்கோடு பகுதியில் தனியார் பார் திறக்கப்பட்டதை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தினர் 100க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது ஆளும் திமுக அரசை கண்டித்து கண்டன முழக்கங்களை எழுப்பினர். மேலும் தனியார் பார் நுழைவுவாயிலை முற்றுகையிட்ட போராட்டக்காரர்களுக்கும் காவலர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பின்னர் போராட்டக்காரர்களை காவல்துறையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் அடைத்தனர். இந்த நிலையில், காவலர்கள் போராட்டக்காரர்களை தடுக்க முயன்றபோது போராட்டத்தில் ஈடுபட்டிருந்த த.வெ.க. தொண்டர் ஒருவர் தலைமை காவலர் அருள்…

Read More

மதுரையில் புதிய மேம்பாலத்திற்கு ‘வீரமங்கை வேலுநாச்சியார்’ பெயர் – முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு

மதுரை மேலமடை சந்திப்பு சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர் சூட்டப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். வரலாற்று பெருமை மிக்க சுதந்திரப் போராட்ட வீராங்கனையான வேலுநாச்சியாரின் தியாகத்தையும், வீரத்தையும் நினைவுகூரும் வகையில் இந்த பெயரிடல் தீர்மானிக்கப்பட்டுள்ளது. புதிய மேம்பாலம் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து, மேலமடை மற்றும் நகரின் முக்கிய பகுதிகளுக்கு இடையேயான போக்குவரத்தை சீர்செய்யும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான பயணிகள் தினமும் பயன்படுத்தும் இந்த சாலையில்…

Read More

ஏர் இந்தியா விமானத்திற்கு நடுவானில் வெடிகுண்டு மிரட்டல்… பரபரப்பு!

டெல்லியில் இருந்து ஹைதராபாத் நோக்கி பயணம் செய்த ஏர் இந்தியா விமானத்திற்கு பறக்கும் நடுவே வெடிகுண்டு இருப்பதாக அறியப்பட்ட மிரட்டல் தகவல் பரவியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. வெடிகுண்டு எச்சரிக்கை செய்தி கிடைத்ததைத் தொடர்ந்து, விமான போக்குவரத்து துறை அவசர நடவடிக்கை எடுத்தது. ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானம் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டு, பயணிகள் அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் முழுவதும் பாதுகாப்பு படையினரால் தீவிரமாக சோதனை செய்யப்பட்டு, வெடிகுண்டு எதுவும் இல்லையென அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்….

Read More

சென்னை விமானநிலையத்தில் இருந்து IndiGo விமான சேவை மீண்டும் தொடங்கியது !

சென்னை: சென்னை விமானநிலையத்தில் இருந்து இன்று முதல் IndiGo விமான சேவைகள் மீண்டும் இயங்கத் தொடங்கியது. விமான சேவை மீண்டும் செயல்படத் தொடங்கியதால் , பல பயணிகள் தங்கள் பயணத்துக்கு சென்று சேரும் ஆவலுடன் இருந்தனர். அந்த நிலையில், சேவை நடமாட்டம் பல பயணிகளுக்கு சற்று நிம்மதியையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது. ஆனால், அனைத்து விமானங்களும் செயலிழக்கவில்லை; இன்றைய தினத்தில் மட்டும் 48 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன என்று விமானநிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். பயணிகள் சிலர், “இடையூறு ஏற்பட்டாலும்…

Read More

திருவண்ணாமலை திருக்கார்த்திகை விழா: பரணி தீபம் ஏற்றம் – பக்தர்கள் கூட்டம் கொட்டம்

திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் நடைபெற்று வரும் திருக்கார்த்திகை தீபத்திருவிழாவின் 10ஆம் நாளை முன்னிட்டு அதிகாலையில் பரணி தீபம் சிறப்பாக ஏற்றப்பட்டது. ஏகன் அனேகனாக மாறும் தத்துவத்தை பிரதிபலிக்கும் இந்த பரணி தீபம், கருவறையில் ஏற்றப்பட்ட தீபத்தினை கொண்டு ஐந்து மடக்குகளில் ஏற்றப்பட்டு மரபுச் சடங்குகள் மிகுந்த பக்தி பரவசத்துடன் நடைபெற்றது. அதிகாலை கோவில் நடை திறந்த பின்னர் அண்ணாமலையார் மற்றும் உண்ணாமுலை அம்பிகைக்கு சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் நடந்தன. காலை 4 மணியளவில் கருவறையிலிருந்து கொண்டு வரப்பட்ட…

Read More

சென்னையில் மெட்ரோ ரயில் பாதியில் நின்றதால் பயணிகள் அவதி : சுரங்கப்பாதை வழியாக வெளியேற்றம்

சென்னை:சென்னை விமான நிலையத்திலிருந்து விம்கோ நகர் நோக்கி சென்ற மெட்ரோ ரயில், திடீரென பாதி வழியில் நின்றதால் பயணிகள் கடும் அவதியை எதிர்கொண்டனர். இன்று காலை ஏற்பட்ட இந்த சம்பவம், குறிப்பாக பணிக்காக பயணம் செய்தவர்களுக்கு பெரும் இடையூறை ஏற்படுத்தியது. மெட்ரோ ரயில் திடீரென நின்றதற்கு தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. ரயில் சுரங்கப் பாதை பகுதியில் இருந்தபோது கோளாறு ஏற்பட்டதால், ரயிலின் கதவுகள் திறக்காமல் பயணிகள் சில…

Read More

இலங்கை கண்டியில் பெரும் மண்சரிவு: 14 வீடுகள் புதைந்துள்ளது உயிர் தப்பிய இளைஞர்

இலங்கையின் கண்டி மாவட்டத்தில் உள்ள அலவத்துகொடை நகரின் ரம்புக்கேஹெல்ல மலைப் பகுதியில் நேற்று முன்தினம் இரவு ஏற்பட்ட பாரிய மண்சரிவு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. தொடர்ச்சியான கனமழையால் மலைச்சரிவு உருவாகி பல வீடுகள் மண்ணில் புதைந்ததாக மக்கள் தெரிவித்துள்ளனர். மண்சரிவில் இருந்து இறுதி நொடியில் உயிர் தப்பிய ரஷிம் என்ற இளைஞர், அந்த திகிலான தருணத்தைப் பற்றி பேசும் போது,“பெரிய சத்தமொன்று கேட்க, நான் கதவைத் திறந்தேன். அடுத்த நொடியில் பூகம்பம் போல குலுங்கியது. என் கண்முன்னே…

Read More

கனமழை பாதிப்பு: டெல்டா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்

தென்மேற்கு வங்கக்கடலில் உருவான டிட்வா புயலின் தாக்கத்தால் கடந்த மாதம் 27-ந்தேதி முதல் இலங்கையில் இரண்டு நாட்கள் கனமழை பொழிந்தது. இதனால் அந்நாட்டு பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கி, சில இடங்களில் நிலச்சரிவுகளும் ஏற்பட்டிருந்தன. இலங்கையில் பாதிப்பை ஏற்படுத்திய புயல் பின்னர் தமிழக கடலோரங்களை நோக்கி நகர்ந்தது. அதன் விளைவாக 28-ந்தேதி முதல் தென் தமிழக மாவட்டங்கள், கடலோர பகுதிகள் மற்றும் காவிரி டெல்டா மாவட்டங்களில் இடையறாத கனமழை பெய்தது. மணிக்கு 55 முதல் 75 கிலோமீட்டர்…

Read More

தங்கம் விலை தொடர்ந்து உயர்வு: சவரன் ரூ.94,400-ஐ எட்டியது!

சென்னை:சர்வதேச சந்தை நிலவரங்களில் ஏற்பட்ட மாற்றங்களின் தாக்கமாக, தங்கம் விலை நாட்டில் மீண்டும் உயர்ந்துள்ளது. குறிப்பாக தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி விலைகள் ஏற்ற-இறக்க நிலையை சந்தித்து வருகின்றன. நவம்பர் 24-ஆம் தேதி சென்னை சந்தையில் 22 காரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.11,520 எனவும், சவரன் ரூ.92,160 எனவும் விற்பனையானது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.171 ஆக இருந்தது. அதன்பிறகு, நவம்பர் 25-ஆம் தேதி தங்கம் விலையில் திடீர் உயர்வு…

Read More

அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமாசெய்தார்

அதிமுகவின் முக்கிய மூத்த தலைவர்களில் ஒருவரான கே.ஏ. செங்கோட்டையன், 1977 முதல் இதுவரை ஒன்பது முறை சட்டப்பேரவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்ட அனுபவம் மிக்கவர். முதலாவது சத்தியமங்கலம் தொகுதியிலும், அதன் பின் தொடர்ந்து எட்டு முறை கோபிச்செட்டிபாளையம் தொகுதியிலும் அவர் வெற்றி பெற்றுள்ளார். அதிமுக ஆட்சி காலங்களில் வனத்துறை, போக்குவரத்து, வேளாண்மை, தகவல் தொழில்நுட்பம், வருவாய் என பல்வேறு துறைகளில் அமைச்சராக பணியாற்றியுள்ளார். ஜெயலலிதா மறைவுக்கு பின், அவர் கட்சியின் அமைப்பு செயலாளராக இருந்தாலும், பின்னர் எடப்பாடி பழனிசாமி…

Read More

த.வெ.க வில் இணையும் செங்கோட்டையன் ?

அரசியல் வட்டாரங்களில் புதிய பரபரப்பை ஏற்படுத்தும் வகையில், அ.தி.மு.க-வில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க) அலுவலகத்துக்கு வர உள்ளார் என்ற தகவல் பரவியுள்ளது. அவர் நவம்பர் 26 அல்லது 27 ஆம் தேதிகளில் விஜயம் செய்யக்கூடும் என நம்பப்படுகிறது. முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் அண்மையில் அ.தி.மு.க.விலிருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவர் எங்கு அரசியல் முடிவு எடுக்கப் போகிறார் என்ற கேள்வி எழுந்திருந்தது. இந்த நிலையில், த.வெ.க. தலைமை அலுவலகத்தில் அவர்…

Read More

Gen Z இளைஞர்கள் அமைதியானவர்கள் அல்ல; மாற்றத்தை உருவாக்கப் போகும் சக்தி அவர்களே – த.வெ.க தலைவர் விஜய்

காஞ்சிபுரம் : தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய், காஞ்சிபுரத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் உரையாற்றி, இன்றைய Gen Z இளைஞர்கள் தமிழக அரசியலை வடிவமைக்கும் முக்கிய சக்தி உள்ளவர்கள் என்று கூறியுள்ளார் . கூட்டத்தில் மக்கள் பங்கேற்று உற்சாகக் குரல்களில் அவரை வரவேற்றனர். Gen Z kids தற்குறிகள் அல்ல, ஆச்சரிய குறி. உங்கள் அரசியலை மாற்றப் போகும் ஆச்சரிய குறி அவர்கள்தான், என்று விஜய் உரையின் தொடக்கம் முதலே இளைஞர்களை நோக்கி திறம்படப்…

Read More

கவிஞர் ஈரோடு தமிழன்பன் காலமானார் : இலக்கிய உலகில் துயரச்செய்தி

புகழ்பெற்ற கவிஞர் ஈரோடு தமிழன்பன் (வயது 92) உடல்நலக் குறைவால் இன்று காலமானார். தமிழ் இலக்கியத் துறையில் தனித்துவமான குரலாக விளங்கிய இவர், கவிதை, புதுக்கவிதை, மேடைப் பேச்சு என பல்வேறு துறைகளில் அழியாத தடம் பதித்திருந்தார். “வணக்கம் வள்ளுவ”நாடகத்திற்காக சாகித்ய அகாடமி விருது பெற்ற இவர், மரபுக் கவிதை முதல் புதுக்கவிதை வரை பல வடிவங்களில் ஆழமான படைப்புகளை வழங்கியவர். சமூகத்தில் நிலவும் பிரச்சினைகள், மனிதநேயப் பார்வை, பெண்கள் உரிமை, சமத்துவம் போன்ற கருத்துக்களை தன்னுடைய…

Read More

திமுக நிர்வாகி சுட்டுக்கொலை : தமிழ்நாட்டில் சட்ட ஒழுங்கு சீரழிந்துவிட்டதாக அன்புமணி கண்டனம்

சென்னை: சேலம் மாவட்டம் கருமந்துறை அருகிலுள்ள கிராங்காடு கிராமத்தில் திமுக கிளைச் செயலாளர் ராஜேந்திரன் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவத்தை பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் கண்டித்துள்ளார். ராஜேந்திரன் உயிரிழந்தது அதிர்ச்சியளிப்பதாக அவர் கூறியுள்ளார். மேலும், துயரத்தில் இருக்கும் அவரது குடும்பத்தினருக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபங்களையும் தெரிவித்தார். ராஜேந்திரன் மற்றும் அதே கிராமத்தைச் சேர்ந்த அவரது உறவினர்களான ராஜமாணிக்கம், பழனிசாமி ஆகியோருக்கிடையே நில சம்பந்தப்பட்ட…

Read More

முதல்வர் ஸ்டாலின் கடிதம்: கோவை – மதுரை மெட்ரோ திட்டங்களை மீள் பரிசீலனை செய்ய பிரதமருக்கு வேண்டுகோள்

கோவை மற்றும் மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை நிறுவுவதற்கான விரிவான திட்ட அறிக்கைகள் (DPR) குறித்து மீண்டும் பரிசீலனை செய்ய வேண்டும் எனக் கோரி, பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டின் நகரப் போக்குவரத்து வளர்ச்சியில் கோவை மற்றும் மதுரை முக்கிய நகரங்களாகும். இந்நகரங்களில் மக்கள் தொகை மற்றும் வாகன நெரிசல் அதிகரித்து வருவதால், மெட்ரோ ரயில் சேவை மிக அவசியமானதாக தமிழக அரசு வலியுறுத்தி வருகிறது. இதனை முன்னிட்டு,…

Read More

ராமேசுவரம் அதிர்ச்சி: ஒருதலைக் காதல் கொடூரமாக முடிந்தது

ராமேசுவரம் அருகே உள்ள சேரான்கோட்டை கிராமத்தில் நடந்த பிளஸ்-2 மாணவி ஷாலினி கொலைச் சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூரக் கொலையில் தொடர்புடைய மீனவர் முனியராஜ் 21 (வயது) கைது செய்யப்பட்ட பின்னர், அவர் அளித்த வாக்குமூலம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷாலினி 17 (வயது) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முனியராஜ் சில மாதங்களாக ஒருதலைப்பட்சமாக காதலித்து…

Read More

SIR படிவத்துடன் எந்த ஆவணங்களும் சேர்க்கத் தேவையில்லை” – தேர்தல் ஆணையம் மீண்டும் தெளிவுபடுத்தல்

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப் பணியில் பயன்படுத்தப்படும் SIR | எஸ்ஐஆர் படிவங்களைச் சமர்ப்பிக்கும் போது, குடிமக்களிடம் எந்த வகையான ஆதார ஆவணங்களையும் கேட்க தேவையில்லை என்று தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் மறுபடியும் விளக்கம் அளித்துள்ளார். தமிழ்நாட்டின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும், இம்மாதம் 4 ஆம் தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்தப்பணி நடைபெற்று வருகிறது. வீடு வீடாகச் சென்று படிவங்களை வழங்கி, அவற்றை நிரப்பி பெறும் பணியில் வாக்குச்சாவடி…

Read More

2048-ல் சென்னை முழுமையாக மாறும்… விரிவான போக்குவரத்து திட்டம் வெளியீடு

சென்னை நகரம் அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளில் பெரிய மாற்றத்தை நோக்கி நகர்கிறது. 2048 வரை நகரின் போக்குவரத்து தேவைகளை பூர்த்தி செய்யும் நோக்கில், சென்னை மாநகரப் போக்குவரத்து ஆணையம் (CUMTA) விரிவான போக்குவரத்து திட்டம் (Comprehensive Mobility Plan – CMP) ஒன்றை உருவாக்கி வருகிறது. இதற்கான அதிகாரப்பூர்வ தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. மெட்ரோ – LRT – RRTS: சென்னைக்கு புதிய போக்குவரத்து வலையமைப்பு புதிய CMP திட்டம், சென்னையின் தினசரி பயணத்தை எளிதாக்க பல்வேறு…

Read More

தமிழ்: தொன்மையும் உலகளாவிய பெருமையும் தாங்கும் மொழி

முன்னுரை  கல் தோன்றி மண் தோன்றா காலத்திதே வாளோடு முன் தோன்றிய மூத்த குடி” என்ற வரி, தமிழர்களின் கதையை காலத்துக்கும் மேல் உயர்த்திக்காட்டும் பெரும் சான்றாகும். மனித நாகரிகத்தின் ஆரம்ப காலத்திலேயே உருவெடுத்து, ஆயிரம் ஆண்டுகள் தாண்டியும் உயிரோடு வளர்ந்து வரும் மொழி “அது தமிழ்”. தமிழரின் பண்பாடு என்றல் சங்க புலவர் கணியன் பூங்குன்றனார் கூற்றுப்படி “யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்பதே ஆகும். அதாவது எந்த நாட்டிலிருந்து வந்தவர்களாக இருந்தாலும் அவர்களை வரவேற்று…

Read More

ஜனநாயகன் கிளைமாக்ஸ் குறித்து விஜய் கொடுத்த ஸ்பெஷல் இன்புட்ஸ்!

நடிகர் விஜய் நடித்திருக்கும் ஜனநாயகன் திரைப்படம் இன்னும் இரண்டு மாதங்களில் திரையரங்குகளைச் சூடேற்ற உள்ள நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் குறித்து நடிகர் விஜய் தனிப்பட்ட முறையில் இயக்குநர் ஹெச். விநோதுடன் கலந்துரையாடியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. படம் முடிந்தவுடன் ரசிகர்கள் திரையரங்கில் இருந்து மகிழ்ச்சியுடன் வெளியேற வேண்டும் என்பதே விஜயின் முக்கிய விருப்பமாக கூறப்படுகிறது. ஜனநாயகன் படத்தின் படப்பிடிப்புகள் அனைத்தும் முடிவடைந்து, போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், கிளைமாக்ஸ் காட்சியை இன்னும் உணர்ச்சிகரமாக மாற்றும் முயற்சியில்…

Read More

திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் விமானம் அவசர தரையிறக்கம்

திருச்சி–புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் நேற்று மதியம் 1 மணியளவில் அம்மா சத்திரம் அருகே சிறிய ரக பயிற்சி விமானம் திடீரென அவசரமாக தரையிறங்கியதால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், முன்பக்க இறக்கை உடைந்ததாலும், எரிபொருள் லீக் ஆனதாலும் பைலட் அவசரமாக விமானத்தை நெடுஞ்சாலையில் பாதுகாப்பாக தரையிறக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. பைலட் – பயிற்சி பெறுபவர் இருவரும் பாதுகாப்பாக மீட்பு விமானம் தரையிறங்கிய உடனே அப்பகுதி மக்கள் தகவல் தெரிவித்ததை அடுத்து…

Read More

RR கேப்டன் ஆகும் ஜடேஜா? – ராஜஸ்தான் ராயல்ஸ் முடிவு என்ன?

2026ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இதற்கான மினி ஏலம் டிசம்பர் 14, 15 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதை முன்னிட்டு அனைத்து அணிகளும் தீவிரமாகத் தயாராகி வருகின்றன. சில முக்கிய வீரர்கள் அணிகள் மாறும் நிலை ஏற்பட்டிருப்பதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதில் அதிகம் பேசப்படும் விஷயம் — ரவீந்திர ஜடேஜா மற்றும் சஞ்சு சாம்சன் இடையேயான டிரேட் விவகாரம். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேலாண்மையுடன் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக சஞ்சு…

Read More

பராமரிப்பு பணி: சென்னையின் சில பகுதிகளில் நாளை மறுநாள் மின்தடை

சென்னை: தமிழ்நாடு மின்பகிர்மானக் கழகம் (TANGEDCO) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, சென்னையில் பராமரிப்பு பணிகளுக்காக நாளை மறுநாள் (15.11.2025, சனிக்கிழமை) காலை 9 மணி முதல் மதியம் 5 மணி வரை சில பகுதிகளில் மின் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படும். அறிவிப்பில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, பராமரிப்பு பணி மதியம் 2 மணிக்குள் முடிந்தால், மின் விநியோகம் அதற்கு முன்னரே மீண்டும் வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள்: திருமுல்லைவாயல், லட்சுமிபுரம், பெரியார்நகர், கோனிமேடு, கங்கைநகர், சரத்கண்டிகை,…

Read More