ISRO | டிசம்பர் 24ம் தேதி இஸ்ரோவின் LVM3 ராக்கெட் விண்ணில் பாய்கிறது
ஸ்ரீஹரிகோட்டா:
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் LVM3 ராக்கெட் டிசம்பர் 24ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது.
அமெரிக்காவுக்குச் சொந்தமான ஒரு முக்கிய செயற்கைக்கோளை சுமந்து செல்லும் இந்த LVM3 ராக்கெட், டிசம்பர் 24ம் தேதி காலை 8.54 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இஸ்ரோவின் கனரக ஏவுகணையான LVM3 மூலம் சர்வதேச அளவிலான விண்வெளி ஒத்துழைப்பு மேலும் வலுப்பெறும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த ஏவுதல் வெற்றியடைந்தால், உலக விண்வெளி துறையில் இந்தியாவின் தொழில்நுட்ப திறனை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் முக்கிய நிகழ்வாக இது அமையும். மேலும், வணிக அடிப்படையிலான செயற்கைக்கோள் ஏவுதலில் இஸ்ரோவின் நம்பகத்தன்மையை அதிகரிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

