H-1B விசாவுக்கு தடை: டிரம்ப் அறிவிப்பு – இந்தியாவில் 32 ஆயிரம் பேரை பணியமர்த்திய அமெரிக்க நிறுவனங்கள்

H-1B விசாவிற்கு தடை விதிக்க இருப்பதாக முன்னாள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அறிவித்துள்ளார். இதனால் வெளிநாட்டு தொழில்நுட்ப நிபுணர்களின் அமெரிக்க வேலைவாய்ப்புகள் பாதிக்கப்படும் சூழல் உருவாகியுள்ளது.

இதற்கிடையே, Meta, Apple, Google, Amazon, Microsoft, Netflix உள்ளிட்ட முன்னணி அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்கள், இந்தியாவில் மொத்தம் 32 ஆயிரம் பேரை பணியில் அமர்த்தியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன் மூலம், 32 ஆயிரம் இந்தியர்கள் அமெரிக்காவிற்கு சென்று வேலை செய்வதற்குப் பதிலாக, இந்தியாவிலிருந்தே அமெரிக்க நிறுவனங்களுக்கு சேவை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

இந்த 32 ஆயிரம் பேர் அமெரிக்காவிற்குச் சென்றிருந்தால், அந்நாட்டில் வருமானம் ஈட்டி, அங்கே வருமான வரி செலுத்தி, தினசரி செலவுகள் உள்ளிட்ட பல வழிகளில் அமெரிக்க பொருளாதாரத்தில் பங்களித்திருப்பார்கள். ஆனால் தற்போது அவர்கள் இந்தியாவிலேயே இருந்து வேலை செய்வதால், அவர்களின் வருமானம் இந்திய பொருளாதாரத்தில் சுழன்று, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவாக அமைகிறது என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

H-1B விசா தொடர்பான எதிர்கால முடிவுகள், உலகளாவிய தொழில்நுட்ப வேலைவாய்ப்புகளில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *