இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினற்கு LJK சார்பில் நிதி உதவி

காரைக்கால் மாவட்டத்தை சேர்ந்த 11 மீனவர்கள் நேற்று முன்தினம் ஆழ்கடலில் மீன்பிடித்து கொண்டிருந்த போது இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பத்தினரை லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

காரைக்கால் மாவட்டம் கீழகாசாகுடிமேடு பகுதியில் மீனவர்களின் குடும்பத்தினரை சந்தித்த அவர் கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை மீட்க சட்ட ரீதியான நடவடிக்கைகளை லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் மேற்கொள்ளப்படும் என உறுதி அளித்தார்.

அப்போது தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கைகளை பிடித்து மீனவர்களின் குடும்பத்தினர் கண்ணீர் விட்டு அழுதனர்.

எங்களின் ஒரே நம்பிக்கை நீங்கள் மட்டும் தான் என அழுதனர்.

தொடர்ந்து 11 மீனவர்களின் குடும்பங்களுக்கும் அவர்களின் குடும்பத்துக்கு தேவையான மளிகை பொருட்கள் மற்றும் 10 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கினார் லட்சிய ஜனநாயக கட்சி தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *