சிலிண்டர் தட்டுப்பாடு- விறகு அடுப்புக்கு மாறிய பிரபலமான உணவகம்

புதுச்சேரியில் நேற்று முதல் வணிக நிறுவனங்களில் சிலிண்டர் ஆனது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது விநியோகமும் நிறுத்தப்பட்டுள்ளது… இந்த நிலையில் பல்வேறு உணவகங்கள் சிலிண்டர் கட்டுப்பாட்டு காரணமாக மூடும் அபாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் புதுச்சேரி புஷி வீதியில் அமைந்துள்ள பிரபல உணவகத்தில் பாரம்பரிய முறைப்படி விறகு அடுப்பில் உணவுகளை தயாரித்து வருகின்றனர்.

மட்டன், சிக்கன் பிரியாணி, யாரால்,காரக்குழம்பு,சாம்பார், கூட்டு பொரியல் உள்ளிட்ட கடல் உணவுகளும் தயார் செய்யப்பட்டு வருகிறது.

சிலிண்டர் அடுப்பில் செய்வதோடு விறகடுப்பில் செய்வது ருசியாகவும், தரமாக இருப்பதாக ஹோட்டல் பணிபுரியும் சமையல் நிபுணர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *