புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினர் கண்டன பேரணி!

மகளிருக்கான 33% இட ஒதுக்கீடு மசோதாவிற்கு எதிராக வாக்களித்து தோல்வி அடைய செய்ததை கண்டித்து புதுச்சேரியில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாஜக மகளிர் அணியினர் கண்டன பேரணியில் ஈடுபட்டனர்.

மக்களவையில் 33% மகளிர் இட ஒதுக்கீடு, தொகுதி மறுவரையறை மற்றும் யூனியன் பிரதேச சட்டங்கள் தொடர்பான 131-வது அரசியலமைப்பு திருத்த மசோதா தொடர்பான 3 முக்கிய மசோதாக்களுக்கு வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. இதில் தேவையான மூன்றில் இரண்டு பங்கு (2/3) பெரும்பான்மை கிடைக்காததால் 3 மசோதாக்கள் தோல்வியடைந்தன.

இந்நிலையில், பெண்களுக்கான 33% மசோதாவுக்கு எதிராக வாக்களித்து தொல்வி அடைய செய்த காங்கிரஸ், திமுக மற்றும் இண்டி கூட்டணி கட்சிகளை கண்டித்து புதுச்சேரியில் பாஜக மகளிர் அணி சார்பில் கண்டன பேரணி நடத்தப்பட்டது.


சுதேசி பஞ்சாலை அருகில் இருந்து தொடங்கி அண்ணா சிலை அருகே நிறைவடைந்தது. பேரணியில் பாஜக மாநிலத் தலைவர் ராமலிங்கம், சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்று கையில் பதாகைகளை ஏந்தி காங்கிரஸ் மற்றும் திமுகாவிற்கு எதிராக கண்டன முழுக்கங்களை எழுப்பினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *