Women Premier League | WPL-ல் ஜெமிமா கேப்டன் | சர்வதேச டி20-வில் ஒரே ஓவரில் 5 விக்கெட் சாதனை
WPL: மகளிர் பிரீமியர் லீக் (WPL) தொடரில் டெல்லி கேபிடல்ஸ் (DC) அணியின் புதிய கேப்டனாக இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனை ஜெமிமா ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதுவரை DC அணியின் கேப்டனாக செயல்பட்டு வந்த ஆஸ்திரேலிய வீராங்கனை மெக் லேனிங், சமீபத்தில் நடைபெற்ற ஏலத்தில் UP வாரியர்ஸ் அணியால் வாங்கப்பட்டதை தொடர்ந்து இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த நியமனம், டெல்லி கேபிடல்ஸ் அணியின் எதிர்வரும் சீசனுக்கான தயாரிப்பில் முக்கிய திருப்பமாக கருதப்படுகிறது. இந்திய வீராங்கனைக்கு கேப்டன் பொறுப்பு வழங்கப்பட்டதற்கு கிரிக்கெட் வட்டாரங்களில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.
சாதனை: இந்தோனேசியா மற்றும் கம்போடியா அணிகளுக்கு இடையேயான முதல் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டி, இந்தோனேசியாவின் பாலி நகரில் நடைபெற்றது. இந்த போட்டியில், இந்தோனேசிய வீரர் கெடே ப்ரியன்டனா, ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி, சர்வதேச டி20 கிரிக்கெட் வரலாற்றில் புதிய சாதனை படைத்துள்ளார்.
ஒரே ஓவரில் 5 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற வரலாற்றுச் சாதனையை கெடே ப்ரியன்டனா பதிவு செய்ததுடன், சர்வதேச கிரிக்கெட் அரங்கில் இந்தோனேசிய அணியின் பெயரையும் உயர்த்தியுள்ளார்

