எத்தியோப்பியா: பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

அடிஸ் அபாபா: அதிகாரப்பூர்வ பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் உற்சாகமான வரவேற்பும், உயரிய அரச மரியாதையும் வழங்கப்பட்டது.

எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள விமான நிலையத்திற்கு நேரில் வந்த அந்நாட்டு பிரதமர் அபி அஹமது, பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு மிக உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது.

பிரதமர் நரேந்திர மோடி, இரு நாடுகளுக்கிடையேயான அரை நூற்றாண்டுக்கு மேலான நட்புறவையும், ஜோர்டான் நாட்டுக்கு நேர்முகம் (டிச. 15) சென்றடைந்த பின்னணியிலும், அந்த விருது வழங்கப்பட்டதாக எத்தியோப்பிய அரசு தெரிவித்துள்ளது. உலகத் தலைவர்களிலேயே முதன்முறையாக பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கி எத்தியோப்பியா பெருமை கொள்கிறது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த வரவேற்பு நிகழ்ச்சியில் இரு நாடுகளின் உயரதிகாரிகள் கலந்து கொண்டனர். பின்னர், பிரதமர் மோடி மற்றும் பிரதமர் அபி அஹமது இடையே இருதரப்பு உறவுகள், வர்த்தகம், முதலீடு, வளர்ச்சி ஒத்துழைப்பு உள்ளிட்ட பல்வேறு முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற உள்ளது.

இந்த பயணம் இந்தியா-எத்தியோப்பியா உறவுகளை மேலும் வலுப்படுத்தி, இரு நாடுகளுக்கும் இடையேயான நீண்டகால நட்புறவை புதிய உயரத்திற்கு கொண்டு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *