கூடலூரில் அரசு பேருந்தை தாக்க முயன்ற காட்டு யானை!

கூடலூர் அருகே கரியசோலை பகுதியில், இரவு நேரத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை காட்டு யானை தாக்க முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

நெல்கிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கூடலூரிலிருந்து தேவலா வழியாக அரசு பேருந்து கரியமலை பகுதியை நோக்கி சென்றபோது, வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய யானை, தனது குட்டியை பாதுகாக்கும் நோக்கில் பேருந்தை தாக்க முயன்றது.

பயணிகள் ஹார்ன் ஒலியை கேட்டு ஓட்டுனர் சாதுரியமாக பேருந்தை இயக்கி யானையிலிருந்து பாதுகாப்பாக விலகினார். இந்த பரபரப்பான காட்சிகளை பயணிகள் வீடியோ பதிவு செய்து சமூக ஊடகங்களில் வெளியிட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *