புதுச்சேரி நகராட்சி ஊழியர்கள் வாரிசுகளின் உண்ணாவிரதப் போராட்டம் தொடர்ச்சி: 3 பெண்கள் மருத்துவமனையில் அனுமதி

புதுச்சேரி: புதுச்சேரி நகராட்சியில் பணியின் போது உயிரிழந்த ஊழியர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, உள்ளாட்சி துறை அலுவலகம் முன்பு நடைபெற்று வரும் உண்ணாவிரதப் போராட்டம், இரவு நேரத்திலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

நீண்ட நேரமாக உணவு தவிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டதால் உடல்நலக் குறைவு ஏற்பட்ட மூன்று பெண்கள், அரசு ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்கள் கடும் பொருளாதார சிரமங்களை எதிர்கொண்டு வருவதாகவும், உடனடியாக வாரிசுகளுக்கு வேலை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் வலியுறுத்தினர்.

போராட்டம் தொடர்ந்தும் தீவிரமடைந்து வரும் நிலையில், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *