ராமேசுவரம் அதிர்ச்சி: ஒருதலைக் காதல் கொடூரமாக முடிந்தது

ராமேசுவரம் அருகே உள்ள சேரான்கோட்டை கிராமத்தில் நடந்த பிளஸ்-2 மாணவி ஷாலினி கொலைச் சம்பவம், மாவட்டம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அந்த கொடூரக் கொலையில் தொடர்புடைய மீனவர் முனியராஜ் 21 (வயது) கைது செய்யப்பட்ட பின்னர், அவர் அளித்த வாக்குமூலம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஷாலினி 17 (வயது) அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்-2 படித்து வந்தார். மீனவர் குடும்பத்தைச் சேர்ந்த இவரை, அதே கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் முனியராஜ் சில மாதங்களாக ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்து, பள்ளிக்கு செல்லும் வேளைகளில் பின்தொடர்ந்து தொந்தரவு செய்து வந்ததாக கூறப்படுகிறது.

அன்று காலையில் வழக்கம்போல பள்ளிக்குச் சென்ற ஷாலினியை, முனியராஜ் மீண்டும் தடுத்துள்ளார். காதலை ஏற்குமாறு வற்புறுத்த, அதற்கு ஷாலினி உயர்கல்விக்கு செல்ல வேண்டும் என்பதால் தன்னைத் தொடர்ந்து வர வேண்டாம் என்று எச்சரித்ததோடு, மீண்டும் தொல்லை கொடுத்தால் பெற்றோர் மூலம் போலீசில் புகார் செய்யப் போவதாகவும் சொல்லியிருக்கிறார்.

இதனால் கோபமடைந்த முனியராஜ், கையில் இருந்த இரண்டு கத்திகளால் ஷாலினியின் கழுத்தில் பலத்த குத்துக்கள் கொடுத்து, கொலை செய்ததாக விசாரணையில் ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும், ஷாலினி மீது கொண்ட காதலுக்காக தனது நெஞ்சில் அவளின் பெயரையே பச்சைக்குத்தியதையும் வாக்குமூலத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

கைது செய்யப்பட்ட முனியராஜ், ராமேசுவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி, வரும் 3-ம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்க உத்தரவிட்டதால், அவர் ராமநாதபுரம் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த சம்பவம், மாணவிகளுக்கு மீது நடைபெறும் காதல் தொல்லைகள் பற்றிய கவலைகளை மீண்டும் வெளிப்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *