வில்லியனூரில் JCM மக்கள் மன்ற அலுவலகத்தை திறந்து வைத்த சமூக சேவகர் சார்லஸ் மார்டின்

புதுச்சேரி:வில்லியனூர் பகுதியில் JCM மக்கள் மன்ற அலுவலகம் திறப்பு விழா இன்று சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. வில்லியனூர் புறவழிச்சாலையில் சமூக சேவகர் சார்லஸ் மார்டினை வரவேற்க மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகமாக வரவேற்பு அளித்தனர். பின்னர், வில்லியனூர் JCM மக்கள் மன்ற தலைவர் பூக்கடை ரமேஷ் தலைமையில் 500க்கும் மேற்பட்டோர் இருசக்கர வாகனங்களில் பேரணியாக இணைந்து, சார்லஸ் மார்டினை மக்கள் மன்ற அலுவலகத்திற்குக் கொண்டுசென்றனர். அதன் பிறகு நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சமூக…

Read More

குப்பை கொட்டுவதை புகைப்படம் எடுத்து அனுப்பினால் 2000 ரூபாய் சன்மானம்

அரும்பார்த்தபுரம் புறவழிச்சாலையில் குப்பைகள் மற்றும் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியானதை தொடர்ந்து உள்ளாட்சி துறையின் உத்தரவின் பேரில் உழவர்கரை நகராட்சி கடந்த வாரம் அங்கு கொட்டப்பட்ட குப்பைகளை கிரீன் வாரியர் நிறுவனம் மூலம் அகற்றி கட்டிட கழிவுகளை சமன் செய்து குப்பைகள் கொட்டுவதை தவிர்க்கும் வகையில் அப்பகுதிகளில் குப்பைகள் கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கை பலகை வைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அப்பகுதியில் வாகனங்கள் மூலம் குப்பைகள் கொட்டப்படுவதாக புகார் வந்ததை தொடர்ந்து உடனடியாக அவற்றை சுத்தம் செய்யும்…

Read More

14 ஆண்டுகளாக பேருந்து வசதி இன்றி தவிக்கும் கோர்க்காடு கிராம மக்கள்!

புதுச்சேரி வில்லியனூர் அருகே உள்ள கோர்க்காடு கிராமம் கடந்த 14 ஆண்டுகளாக பேருந்து சேவையின்றி பெரும் இன்னலுக்கு உள்ளாகி வருகின்றனர்.சுமார் 4,000 குடும்பங்கள் வசிக்கும் இந்த பகுதியில் பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் மூன்று கிலோமீட்டர் தூரம் நடந்து சென்று மட்டுமே பேருந்து சேவையைப் பயன்படுத்த வேண்டிய நிலை தொடர்கிறது. இரவு நேரங்களில் தெருவிளக்குகள் இல்லாததால், பேருந்திலிருந்து இறங்கி நடந்து செல்லும் மக்கள் நாய்களின் தொல்லையும் சமூகவிரோதிகளின் அச்சுறுத்தல்களும் எதிர்கொள்கின்றனர். இதுகுறித்து பலமுறை…

Read More

புதுச்சேரி தனியார் மருத்துவக் கல்லூரியில் பாலியல் சீண்டல் பரபரப்பு – நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் திடீர் போராட்டம்!

புதுச்சேரி கனகசெட்டிகுளம் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் பிம்ஸ் (PIMS) மருத்துவக் கல்லூரி வளாகத்தில், 10-க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்தக் கல்லூரியின் செவிலியர் பிரிவில் பயிலும் மாணவிகள் மருத்துவமனைப் பிரிவில் பயிற்சிக்காகச் செல்லும் போது, எக்ஸ்ரே பிரிவில் பணிபுரியும் இரண்டு டெக்னீசியன்கள் தொடர்ந்து பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக மாணவிகள் புகார் அளித்துள்ளனர். புகார் கிடைத்ததையடுத்து, கல்லூரியின்…

Read More

கோயிலில் தொலைந்த 4 பவுன் தாலி செயினை கண்டுபிடித்த மேஸ்திரிக்கு பாராட்டுகள்!

புதுச்சேரி பாகூர் வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோயிலில் நடைபெற்ற ஐப்பசி பவுர்ணமி அன்னாபிஷேக விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில் கடலூர் மஞ்சகுப்பத்தைச் சேர்ந்த பாலசுந்தரத்தின் மனைவி கீதா தரிசனம் முடித்துவிட்டு வெளியே வந்தபோது, அவரின் கழுத்திலிருந்த 4 பவுன் தாலி செயின் காணாமல் போனது தெரியவந்தது. இதையடுத்து அவர் உடனடியாக கோயில் வளாகத்தில் இருந்த பக்தர்கள் மற்றும் பாதுகாப்பு பணியிலிருந்த காவலர்களிடம் தகவல் தெரிவித்தார். அனைவரும் இணைந்து நகையைத் தேடும் பணியில்…

Read More

பகலில் பெயிண்டர் – இரவில் வாழை திருடன்! புதுச்சேரி போலீசாரின் சோதனையில் சிக்கினார்

புதுச்சேரி கூனிச்சம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த சண்முகம் என்பவர் தனது தோட்டத்தில் அடிக்கடி வாழைத்தார் திருட்டு நடைபெறுவதாக காவல்துறையில் புகார் அளித்தார். இதையடுத்து திருக்கனூர் போலீசார் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் செட்டிபட்டு, சோம்பட்டு உள்ளிட்ட பல கிராமங்களிலும் விவசாய நிலங்களில் இருந்து வாழைத்தார்கள் அடிக்கடி திருடப்படுவதாக தகவல் கிடைத்தது. இதனைத் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி சோதனையிட்டபோது, அதில் வாழைத்தார்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. வாகன ஓட்டியை கைது செய்து விசாரித்ததில்,…

Read More

வீராம்பட்டினம் ஜீவரத்தினம் பெண்கள் நடுநிலைப் பள்ளியில் தூய்மை பணியில் JCM மக்கள் மன்றம்!

வீராம்பட்டினம் ஜீவரத்தினம் பெண்கள் நடுநிலைப் பள்ளி வளாகத்தில் இன்று, பள்ளி மாணவிகளும் JCM மக்கள் மன்றம் நிர்வாகிகளும் இணைந்து தூய்மை பணியில் சிறப்பாக ஈடுபட்டனர். பள்ளி வளாகம் முழுவதும் உள்ள குப்பைகள், உலர்ந்த இலைகள் மற்றும் கழிவுகள் அனைத்தும் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்பட்டன. இந்தப் பணிகள் அனைத்தும் எங்களின் மாண்புமிகு தலைவர் JCM SIR அவர்களின் வழிகாட்டுதலின்படி மேற்கொள்ளப்பட்டன.அவரின் சமூக நல நோக்கங்களும், மக்களுக்கான அர்ப்பணிப்பும் எங்களுக்கெல்லாம் ஒரு ஊக்கமாக இருந்து வருகின்றன. மேலும், எங்கள் JCM…

Read More

முன்னாள் அமைச்சர் ப. கண்ணனின் 2ஆம் ஆண்டு நினைவு நாள் – JCM மக்கள் மன்றம் மரியாதை

புதுச்சேரி:முன்னாள் அமைச்சர், சபாநாயகர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றிய ப. கண்ணனின் 2ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி மரியாதை நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்வில், சமூக சேவகர் சார்லஸ் மார்டின் சார்பில், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் புதுச்சேரி வைஷியால் வீதியில் உள்ள கண்ணனின் இல்லத்திற்கு சென்று அவரது உருவப்படத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். அதனைத் தொடர்ந்து, கண்ணனின் மகன் விக்னேஷ் கண்ணனிடம் ரீகன் ஜான்குமார் சந்தித்து உரையாடினார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான…

Read More

பல ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லை – புதுச்சேரி அரசு கல்லூரி பேராசிரியர்கள் உள்ளிருப்பு போராட்டம்

புதுச்சேரி:புதுச்சேரி அரசு கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள், கடந்த 15 ஆண்டுகளாக பதவி உயர்வு மற்றும் ஊதிய உயர்வு வழங்கப்படாததை கண்டித்து, தாகூர் கலைக்கல்லூரி வளாகத்தில் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். புதுச்சேரி அரசின் கீழ் புதுச்சேரி, காரைக்கால், மாஹே மற்றும் ஏனாம் ஆகிய பிராந்தியங்களில் மொத்தம் 7 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இதில் சுமார் 350 பேராசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் 2002 முதல் 2018 வரை டெல்லி யூனியன்…

Read More

புதுச்சேரி அரசு மருத்துவமனை – கொசு உற்பத்தி மையமாக மாறியதா? பொதுமக்கள் அதிருப்தி!

புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனை மற்றும் இந்திரா காந்தி மருத்துவக் கல்லூரி சுற்றுப்புறம் தற்போது கொசு உற்பத்தி மையமாக மாறி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவமனைக்கு எதிரே அமைந்துள்ள நீர்நிலைத் தொட்டிகள் சரிவர பராமரிக்கப்படாததால், அதில் கழிவுநீர் தேங்கி நிற்கிறது. இதனால், கொசுக்கள் பெருகி டெங்கு, மலேரியா போன்ற நோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. சுகாதாரத்துறை டெங்கு மற்றும் மலேரியா ஒழிப்பு பிரச்சாரங்களை பெயரளவில் மட்டுமே மேற்கொள்கிறது என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது.பொதுமக்களின் கூற்றுப்படி, சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு…

Read More

புதுச்சேரியில் விடுதலை நாள் கொண்டாட்டம்: தேசியக் கொடியேற்றி அணிவகுப்பு மரியாதை ஏற்றார் முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி:புதுச்சேரி விடுதலை நாள் விழாவை முன்னிட்டு, மாநில முதல்வர் என். ரங்கசாமி அவர்கள் இன்று காலை கடற்கரை மைதானத்தில் தேசியக் கொடியை ஏற்றி, காவல்துறை மற்றும் தேசிய மாணவர் படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். இந்த விழாவில் சபாநாயகர் செல்வம், துணை சட்டப்பேரவை தலைவர் ராஜவேலு, உள்துறை அமைச்சர் நமசிவாயம், எதிர்க்கட்சி தலைவர் சிவா, திமுக எம்.எல்.ஏக்கள், தலைமை செயலாளர்கள், மற்றும் காவல்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்று விழாவை சிறப்பித்தனர். விழா நிகழ்வில், மாணவர்கள் மற்றும்…

Read More

தமிழகத்துக்கு மழை வாய்ப்பு – வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது!

அடுத்த 24 மணி நேரத்தில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக, தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் மிதமான காற்றோட்டம் மற்றும் மேகங்கள் உருவாகி வருகின்றன. இந்த காலநிலை மாற்றத்தின் தாக்கத்தால், வரும் நவம்பர் 7 வரை,தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், மேலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வானிலை நிபுணர்கள் தெரிவித்ததாவது,…

Read More

கல்லறை திருநாளை முன்னிட்டு புதுச்சேரியில் சுத்தம் மற்றும் அலங்காரப் பணிகள் தீவிரம்!

புதுச்சேரி: கல்லறை திருநாளை (All Souls Day) முன்னிட்டு கிறிஸ்தவர்களின் நினைவிடங்களில் சுத்தம் செய்தல், வண்ணம் பூசுதல் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கிறிஸ்தவர்களின் நம்பிக்கையில், மரணம் என்பது முடிவல்ல, புதிய வாழ்வின் தொடக்கம் என்ற எண்ணத்தை நினைவூட்டும் ஒரு நாள் இதுவாகும். ஆண்டுதோறும் நவம்பர் 2ஆம் தேதி கல்லறை திருநாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நாளில், மக்கள் தங்களது முன்னோர்களின் கல்லறைகளுக்கு சென்று மலர்கள், மெழுகுவர்த்திகள் மற்றும் வாசனை திரவியங்களால் அலங்கரித்து, அவர்களின் ஆன்மாக்களுக்காக பிரார்த்தனை…

Read More

புதுச்சேரியில் விடுதலை நாள் இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை சிறப்பாக நடைபெற்றது

புதுச்சேரியில் நவம்பர் ஒன்றாம் தேதி நடைபெற உள்ள விடுதலை நாள் கொண்டாட்டத்திற்கான இறுதி கட்ட அணிவகுப்பு ஒத்திகை நிகழ்ச்சி இன்று புதுச்சேரி கடற்கரை சாலையில் நடைபெற்றது. பிரான்ஸ் ஆதிக்கத்திலிருந்து புதுச்சேரி 1954 ஆம் ஆண்டு நவம்பர் ஒன்றாம் தேதி முறைப்படி இந்திய ஆட்சி பரப்போடு இணைந்தது. இந்நாளை புதுச்சேரியின் விடுதலை நாளாக புதுச்சேரி அரசு ஆண்டுதோறும் கொண்டாடுகிறது. வரும் ஒன்றாம் தேதி புதுச்சேரி மாநிலம் முழுவதும் விடுதலை நாள் கோலாகலத்துடன் கொண்டாடப்பட உள்ளது. இந்த நிகழ்வில் முதலமைச்சர்…

Read More

புதுவை மாநிலத்தை மிரட்டும் மோன்தா புயல்! ஏனாமில் கடைகள் வணிக நிறுவனங்கள் மூடல்!

‘மோன்தா’ புயல் காரணமாக புதுவை மாநிலத்தின் ஏனாம் பகுதியில் இன்று பகல் 12 மணிக்குள் கடைகள், வணிக நிறுவனங்களை மூட புதுவை அரசு சார்பில் உத்தரவு வெளியிடப்பட்டது. ஆந்திராவில் புயல் கரையை கடக்கும்போது 90 – 100 கி.மீ. வேகத்தில் காற்று வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்த நிலையில் புதுவை அரசு இந்த நடவடிக்கையை எடுத்தது. மேலும், ஏனாம் அருகே புயல் கரையை கடக்க உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு ஏனாம் மண்டல…

Read More

புதுச்சேரி – லாஸ்பேட்டையில் காவல்நிலையம் முன் வெட்டப்பட்ட ரவுடி உயிரிழப்பு!

புதுச்சேரியில் நேற்று முன்தினம் லாஸ்பேட்டை புறக்காவல் நிலையம் வாயில் முன்பு மர்மநபர்களால் வெட்டப்பட்ட ரவுடி ஜாக்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக ஜாக்பால் வெட்டப்பட்ட பிறகு, இரண்டு சிறுவர்கள் உட்பட 4 பேரை போலீசார் கைது செய்திருந்தனர். இந்த நிலையில் கீழே தவறி விழுந்ததில் 2பேருக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி காலாப்பட்டு சிறையில் அடைத்தனர். அடிக்கடி இன்ஸ்டாகிராமில் மாஸாக முகத்தை காட்டி ரீல்ஸ்…

Read More

புதுச்சேரியில் விவசாயிடம் லஞ்சம் பெற்ற மின்துறை இளநிலை பொறியாளர் அதிரடி கைது!

புதுச்சேரியில் விவசாயிடம் லஞ்சம் பெற்ற மின்துறை இளநிலை பொறியாளரை லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடியாக கைது செய்து விசாரணைக்காக அழைத்துச் சென்றனர் புதுச்சேரி,செல்லிபட்டு கிராமத்தை சேர்ந்தவர் விவசாயி பூபதி ராஜா இவர் தனது விவசாய நிலத்திற்கு மின் இணைப்பு வேண்டி வாதனூர் பகுதியில் உள்ள மின்துறை இளநிலை பொறியாளர் அலுவலகத்தில் விண்ணப்பித்திருந்த நிலையில் மின் இணைப்பு வழங்க மின்துறை இளநிலை பொறியாளர் ராஜேந்திரன் 30 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். இதுகுறித்து லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு விவசாயி பூபதிராஜா…

Read More

புதுச்சேரி லாஸ்பேட்டையில் காவல்நிலையம் முன் வெட்டப்பட்ட ரவுடி உயிரிழப்பு!

புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியில் காவல் நிலையம் வாயிலில் மர்ம நபர்களால் வெட்டப்பட்டு முகம் சிதைந்த நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த ரவுடி ஜாக்பால் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். நேற்று முன்தினம் நண்பரின் மகனின் பிறந்தநாள் விழாவுக்காக சென்றிருந்தபோது மர்ம கும்பல் வெறிச்செயலை அரங்கேற்றி விட்டு தப்பிய நிலையில் நான்கு பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தனர். ஜாக்பால் உயிரிழந்த நிலையில் தற்போது இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டுள்ளது.

Read More

படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம்!

அரியாங்குப்பம் அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். புதுச்சேரி அடுத்த நோணாங்குப்பம் சுண்ணாம்பாற்றில் புதுச்சேரி அரசு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் படகு குழாம் செயல்பட்டு வருகிறது. இங்கு வரும் சுற்றுலா பயணிகள் சுண்ணாம்பாற்றில் பல்வேறு வகையான படகுகளில் பயணம் செய்து பேரடைஸ் பீச்சுக்குசென்று ஆனந்தமாக மகிழ்ந்து மீண்டும் படகில் படகு குழாமுக்கு வருவது வழக்கம். இதனால் வாரந்தோறும் சனி, ஞாயிறு மட்டுமின்றி தொடர் விடுமுறை தினங்களிலும்…

Read More

புதுவையில் அடுத்தடுத்து இரண்டு புயல்… பேனர்கள் அகற்ற மாவட்ட ஆட்சியர் உத்தரவு…

புதுச்சேரியில் கட்டவுட், பேனர்கள் வைக்க 15 நாட்களுக்கு தடை.. மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் அறிவிப்பு. புதுச்சேரியில் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது …வடகிழக்கு பருவ மழை தொடங்கியதை தொடர்ந்து புதுவை முழுவதும் தற்போது அடை மழை பெய்து கொண்டு வருகிறது. இந்த நிலையில் இந்திய வானிலை ஆய்வு மையம் அடுத்த 15 நாட்களுக்கு அக்டோபர் 26ஆம் தேதி மற்றும் நவம்பர் 5ஆம் தேதி வங்காள விரிகுடாவில் அடுத்தடுத்து இரண்டு தனி தனி குறைந்த காற்றழுத்த தாழ்வு…

Read More

புதுச்சேரியில் பட்டப்பகலில் ரவுடி முகத்தை வெட்டிய மர்ம நபர்கள்! 4 பேர் கைது!

புதுச்சேரியில் காதல் விவகாரத்தில் ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக ரவுடியை ஓட ஓட விரட்டி காவல் நிலைய வாசலில் வைத்து சரமாரியாக வெட்டியதில் முகம் சிதைந்த நிலையில் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய 4பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புதுச்சேரி லாஸ்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ரவுடி ஜாக்(எ) ஜாக்பால்(23), இவர் மீது கொலை,கொலை முயற்சி,அடிதடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளது.இந்நிலையில் ரவுடி…

Read More

பேனர்கள் வைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும்! – உழவர்கரை நகராட்சி ஆணையர் எச்சரிக்கை!

திறந்தவெளியில் அனுமதியில்லாத பேனர்களால் ஆபத்து ஏற்படும்பட்சத்தில் சம்மந்தப்பட்டவர் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும் என உழவர்கரை நகராட்சி ஆணையர் சுரேஷ்ராஜ் எச்சரித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் – உழவர்கரை நகராட்சி வெளிப்புற ஊடக சாதனம் துணை விதிகள்படி உழவர்கரை நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பேனர் விளம்பரம் வைப்பதற்கு உரிய அனுமதி பெற்று வைக்கப்பட வேண்டும். மேலும் அனுமதி பெறாமல் வைக்கப்படும் பேனர்களை அப்புறப்படுத்தவும் மற்றும் அதனை வைப்பவர்கள் மீது அபராதம் விதிக்கவும் வழிவகை உள்ளது. எதிர்வரும்…

Read More

புதுவையில் வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் அவதி!

புதுச்சேரி சோலை நகர் பகுதியில் கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் மழைநீர் சாலைகளில் தேங்கி வீடுகளுக்குள் செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. புதுச்சேரி முத்தியால்பேட்டையில் இருந்து சோலை நகர் வழியாக குருச்சிக்குப்பம் பகுதி வரை உள்ள கழிவுநீர் வாய்க்கால் தூர்வாரப்படாததால் கழிவு நீர் வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பாப்பம்மாள் கோவில் வீதி, எல்லை மாரியம்மன் கோவில் வீதி உள்ளிட்ட பகுதிகளில் மழைநீரோடு கழிவுநீரும் கலந்து குடியிருப்புகளை சூழ்ந்து கொள்வதால் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். புதுவை…

Read More

காரைக்காலில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்தது வரும் கனமழை!

காரைக்காலில் நள்ளிரவு முதல் கொட்டி தீர்த்தது வரும் கனமழை : கடந்த 24 மணி நேரத்தில் 9.3 சென்டிமீட்டர் மழை பதிவு: தொடர் மழையால் பொதுமக்கள் கடும் அவதி: பல்வேறு பகுதியில் மின்வெட்டு பாதிப்பு. வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுப்பெற வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் தெற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெற உள்ளதால் இன்று தமிழகத்தில்…

Read More

புதுவை சபாநாயகருக்கு எதிராக திடீரென போர்க்கொடி தூக்கிய முன்னாள் பாஜக நிர்வாகி!

புதுவை சபாநாயகர் செல்வத்துக்கு எதிராக அவரது ஆதரவாளர் போர்க்கொடி தூக்கி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பா.ஜ.க. மாநில இளைஞரணி பொருளாளராகவும், அரியாங்குப்பம் மாவட்ட பொருளாளராகவும் இருந்தவர் முருகன். சபாநாயகர் செல்வத்தின் தீவிர ஆதரவாளரான இவர் கடந்த சட்டப்பேரவை தேர்தலில் தேர்தல் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் தற்போது அவர் சபாநாயகருக்கு எதிராக தனது ஆதரவாளர்களுடன் போர்க்கொடி தூக்கியுள்ளார். இது குறித்து அவர் தனது ஆதரவாளர்களுடன் செய்தியாளர்களிடம் பேசிய அவர் “சபாநாயகருக்கு கட்சியில் சேர்ந்த நாளில் இருந்து உண்மையாக உழைத்துள்ளேன்….

Read More

புதுவை – அமைச்சர் ஜான் குமார் விழிப்புணர்வு காணொலி வைரல்!

புதுச்சேரியில் சமீப காலமாக குடிநீர் சரியில்லை என குற்றச்சாட்டு எழுந்து வரும் நிலையில், மழைநீர் சேகரிப்பதன் அவசியம் மற்றும் சேகரிக்கும் முறை குறித்து அமைச்சர் ஜான்குமார் வெளியிட்டுள்ள விழிப்புணர்வு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரியில் சமீப காலமாக பல்வேறு பகுதிகளில் குடிநீர் சரியில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டு வைத்து வருகின்றனர். இந்நிலையில் வட கிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில், மழைநீரை சேகரிப்பதன் அவசியம் மற்றும் சேகரிப்பு முறை குறித்து அமைச்சர் ஜான்குமார் வெளியிட்டுள்ள…

Read More

வங்ககடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதி!

தமிழ்நாடு மற்றும் புதுவையில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பரவலாக இரு மாநிலங்களிலும் அவ்வப்போது மழைபொழிந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த சில தினங்களுக்கு தமிழ்நாடு மற்றும் புதுவையில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. தென்கிழக்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று (21.10.2025) காலை 5:30 மணியளவில் தென்மேற்கு வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை மையம்…

Read More

காவலர்கள் நினைவு தினம் – புதுவை முதல்வர் ரங்கசாமி மரியாதை!

புதுவையில் கொட்டும் மழையில் நடைபெற்ற காவலர் நினைவு தினத்தில் கலந்து கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி மழையில் நனைந்தபடி போலீசாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டு பணியின் போது உயிர் நீத்த காவலர்களுக்கு 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க மலர் தூவி மரியாதை செலுத்தினார். புதுவையில் ஆண்டுதோறும் அக்டோபர் 21-ம் தேதி காவலர் நினைவு தினம் ‌கடைபிடிக்கப்படுகிறது. அந்த வகையில் இன்று கோரிமேடு ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற காவலர் நினைவு தினத்தில் சிறப்பு அழைப்பாளர்களாக முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம்,…

Read More

எஸ்.எஸ்.பி லட்சுமி சௌஜன்யா தீபாவளி வாழ்த்து!

புதுச்சேரி மாவட்ட காவல் மேலாளர் எஸ்.எஸ்.பி. லட்சுமி சௌஜன்யா அவர்கள் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு வாழ்த்து வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில், மக்கள் அனைவரும் தீபாவளி பண்டிகையை மகிழ்ச்சியுடன், ஆனால் பாதுகாப்பாகக் கொண்டாட வேண்டும் எனவும், பட்டாசுகளை வெடிக்கும் போது குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார். மேலும், போக்குவரத்து விதிகளைப் பின்பற்றி, பண்டிகை நாட்களில் விபத்துகளைத் தவிர்க்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தினார்.

Read More

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தீபாவளி வாழ்த்து

புதுவை மக்களுக்கு துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தீபாவளி வாழ்த்து தெரிவித்துள்ளார். “ஒளிமயமான தீபாவளி பண்டிகையை ஒட்டி இந்திய மக்கள் அனைவருக்கும் குறிப்பாக, புதுச்சேரி மக்களுக்கு எனது அன்பான “தீபாவளி“ நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தீபாவளி பண்டிகை நாட்டு மக்களிடையே ஒற்றுமையை – சகோரத்துவத்தை பலப்படுத்துகிறது. இந்த தீபாவளி நம் அனைவரது வாழ்விலும் ஒளிமயமான எதிர்காலத்தை, மகிழ்ச்சியைக் கொண்டு வருவதாக அமையட்டும்.உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக மாறும் லட்சியப் பாதையில் இந்தியா பயணித்துக் கொண்டு இருக்கிறது….

Read More

புதுவை முதல்வர் ரங்கசாமி தீபாவளி வாழ்த்து!

புதுவை மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை தெரிவித்து முதல்வர் ரங்கசாமி அறிக்கை வெளியிட்டுள்ளார்.பல்வேறு சமூகப் பின்னணிகளை கொண்ட மக்களை ஒன்றிணைத்தல், கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாத்தல், உள்ளூர் வணிகங்களுக்கு வருவாய் ஈட்டுவதற்கான வாய்ப்புகளை வழங்குதல், ஆன்மிகச் சிந்தனைகளைப் பிரதிபலித்தல் போன்ற உள்ளார்ந்த பண்புகளை இந்தியப் பண்டிகைகள் கொண்டுள்ளன. அத்தகைய பண்டிகைகளில் தீபாவளி முக்கியமான ஒன்றாகும். தீபாவளிப் பண்டிகை நாடு முழுவதும் பரவலாகக் கொண்டாடப்படுவதற்கு, இருளை நீக்கி ஒளியும், தீமையை அழித்து நன்மையும், அறியாமையை அகற்றி அறிவும் மேலோங்கும் என்ற ஆழமான…

Read More

தமிழ்நாட்டு கிட்னி திருட்டு கும்பல் புதுச்சேரியில் காட்டி வருகிறதா?

தமிழ்நாட்டை அதிர்ச்சிக்குள்ளாக்கிய கிட்னி திருட்டு விவகாரத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தற்போது கிட்னி திருட்டு நடைபெற்று வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. ஏழை மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்களின் கிட்னிக்கு சில ஆயிரம் ரூபாய் கொடுத்துவிட்டு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வாயிலாக பல கோடி ரூபாய் சுருட்டிய கும்பல் கடந்த சில வாரங்களுக்கு முன் தமிழ்நாட்டில் சிக்கியது. இச்சம்பவத்தில் அரசு மற்றும் தனியார் மருத்துவமனை அதிகாரிகள் ஊழியர்கள் ஏஜென்ட்களுக்கு தொடர்பு உள்ளதாகவும் தனியார் மருத்துவமனைகளை நடத்தும் அரசியல்வாதிகளும்…

Read More

அங்கன்வாடி பணி அறிவிப்பு ரத்து – மகளிர் மேம்பாட்டுத்துறை அறிவிப்பு!

புதுச்சேரியில் அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள் பதவிக்கு கௌரவ ஊதிய அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு கடந்த 30.09.25 அன்று வெளியிடப்பட்டது. தொழில்நுட்ப பிழை காரணமாக விண்ணப்பதாரர்களால் வலைதளத்தை அணுக முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் பிரச்சனையை சரி செய்யும் பணியில் துறை சார்ந்தவர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி திட்டமிட்டபடி முடியாத காரணத்தால் செப்டம்பர் 30 அன்று வெளியான அறிக்கை ரத்து செய்யப்பட்டது. பணிகள் சீரான பின்னர் விண்ணப்பங்கள் ஏற்கப்படும். புதிய அறிவிப்பு வெளியிடப்படும். விண்ணப்பித்த நபர்கள்…

Read More

புதுச்சேரியில் பள்ளிகள் அருகில் ரெஸ்டோ பார் திறப்பு – பொதுமக்கள் சாலை மறியல்!

புதுச்சேரி நகர்ப்பகுதியில் அரசு பள்ளி மற்றும் குடியிருப்பு பகுதியில் புதிதாக ரெஸ்டோ பார் ஒன்று திறக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். உருளையான்பேட்டை தொகுதிக்குட்பட்ட திருவள்ளூர் சாலையில் குடியிருப்பு மற்றும் பெண்கள் அரசு மேல்நிலைப் பள்ளி அருகே புதியதாக ரெஸ்டோ பார் திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புதிய ரெஸ்டோ பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து, உடனடியாக மூட வலியுறுத்தி அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர், மேலும் தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் நேரு போராட்டத்திற்கு…

Read More

தீபாவளி பண்டிகைக்கு மறுநாள் அரசு விடுமுறை – முதலமைச்சர் ரங்கசாமி அறிவிப்பு!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அரசு அலுவலகங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கு தீபாவளி அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் தீபாவளி அடுத்த தினமும் விடுமுறை அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வந்த நிலையில், தீபாவளி மறுநாள் அக்டோபர் 21-ந்தேதி செவ்வாய்க்கிழமை கூடுதல் விடுமுறை விடப்படுவதாக முதலமைச்சர் ரங்கசாமி அறிவித்துள்ளார்.

Read More

புதுச்சேரியில் இரவு மழை பெய்ததால் மக்கள் சிரமத்திற்குள்ளாகினர்!

புதுச்சேரியில் இரவு 8 மணி முதல் சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக பெய்த மழையின் காரணமாக தீபாவளிக்கு பொருட்கள் வாங்க கடைக்கு சென்ற மக்கள் சிரமத்திற்குளாகினார். மேலும் மழையால் புதுச்சேரியில் குளிர்ச்சியான சூழல் நிலவியது. வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில், இன்று மாலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு வந்த நிலையில், இரவு சுமார் 8…

Read More

போக்குவரத்து நெரிசலால் ஸ்தம்பித்த புதுச்சேரி!

தீபாவளி பண்டிகைக்கு தேவையான பொருட்கள் வாங்க பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் மக்கள் படையெடுத்து,வருவதால் புதுச்சேரி நகரமே கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது,பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸார் ரோந்து பணியிலும் ஈடுபட்டனர். தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் பண்டிகைக்கு தேவையான புத்தாடைகள் மற்றும் பட்டாசு உள்ளிட்ட தேவையான பொருட்களை வாங்குவதற்காக புதுச்சேரிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து பொதுமக்கள் படையெடுத்து வருகின்றனர். பொதுமக்களின் படையெடுப்பால் நகரப் பகுதி முழுவதும் மனித தலைகளாவே…

Read More

புதுச்சேரி உழவர்கரை நகராட்சி அறிவிப்பு!

தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகள் வெடிப்பதினால் உருவாகும் குப்பைகளை சாலைகளில் அப்படியே விடுவதினால் தெருக்கள் முழுவது அசுத்தமாக இருப்பதோடு அவை காற்றில் பறந்து கால்வாய்களில் விழ்ந்து சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. மேலும் அவற்றை சுத்தம் செய்ய வரும் தூய்மைபணியாகளுக்கு சிரமம் ஏற்படும் என்பதால் பொதுமக்கள் அனைவரும் பட்டாசுகள் வெடித்த பின்பு உருவாகும் குப்பைகளை தண்ணீர் ஊற்றி அனைத்து அதனை தொட்டிகளில் சேகரித்து வைத்திருந்து தங்கள் பகுதிகளில் குப்பைகள் சேகரிக்க வரும் தூய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. தவறினால் அபராதம்…

Read More

JCM மக்கள் மன்றம் சார்பில் பாசிக் ஊழியர்களுக்கு தீபாவளி பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன!

புதுச்சேரியில் JCM மக்கள் மன்றம் சார்பில் விரைவில் மூடப்பட உள்ள பாசிக் நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி பரிசு தொகுப்பு மற்றும் பரிசு தொகையை மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் வழங்கினார். புதுச்சேரி அரசு சார்பு நிறுவனமான பாசிக்கை மூட அரசு அறிவிப்பு வெளியிட்டு வரும் டிசம்பர் 25ம் தேதிக்குள் மூட மூடிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அங்கு பணி புரியும் ஊழியர்கள் மற்றும் அவர்களின் குடும்பம் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்நிலையில் விரைவில் மூடப்பட உள்ள பாசிக்…

Read More

தீபாவளி பரிசுக்கு அரசு பணத்தை செலவழிக்க கூடாது – மத்திய நிதி அமைச்சகம்

தீபாவாளி பண்டிகை பரிசு பொருட்களுக்கு அரசின் பணத்தை செலவழிக்க கூடாது என மத்திய நிதி அமைச்சகம் அரசு துறைகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. புதுவை முதல்வர் ரங்கசாமி மற்றும் எம்.எல்.ஏக்கள் அரசு நிதியில் பரிசு பொருட்களை வழங்குவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் நிதியமைச்சகத்தில் இருந்து அறிக்கை! புதுச்சேரியில் ரங்கசாமி முதல்வராக இருக்கும்போது எல்லாம், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி சுயேட்சை என பாகுபாடு பார்க்காமல் அரசு செலவில் தீபாவளி பண்டிகையின் போது 500 பட்டாசு பாக்ஸ் மற்றும் 500 ஸ்வீட் பாக்ஸ்களை…

Read More

புதுச்சேரிக்கு ஒரு வழி பாதை மிகவும் தேவை! – சமூக சேவகர் சார்லஸ் மார்டின் வலியுறுத்தியுள்ளார்!

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி கதிர்காமம் சாலையில் போக்குவரத்து நெரிசலில் சிக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் இது குறித்து பலர் கருத்துகளையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் இது குறித்து சமூக சேவகர் சார்லஸ் மார்டின் கருத்து தெரிவித்துள்ளார். “புதுச்சேரியில் ஒருவழிப்பாதை தேவை என்று பலமுறை வலியுறுத்தியிருக்கிறேன். இதனை கண்டுகொள்ளாத புதுச்சேரி அரசின் நிர்வாகச் சீர்கேட்டினால், கதிர்காமம் சாலையில் போக்குவரத்து நெரிசலில் முதலமைச்சர் ரங்கசாமியே சிக்கிக்கொண்டார். எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் திட்டங்களை…

Read More

டிராபிக் ஜாமில் சிக்கிய புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. இது குறித்து அரசு தரப்பில் நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என பல்வேறு தரப்பில் இருந்து அரசுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டு வரும் நிலையில் அரசு கண்டுகொள்ளாமல் இருந்து வருகிறது. இந்த நிலையில், புதுச்சேரி கதிர்காமம் சாலையில் முதல்வர் ரங்கசாமி காரில் சென்றுகொண்டிருந்தபோது போக்குவரத்து நெரிசலில் சிக்கிய காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Read More

புதுச்சேரியில் காற்று மாசுபாடு கண்டறியும் கருவி மூலம் கண்காணிப்பு!

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் காற்றின் மாசுபாட்டை கண்டறிய மாசு கட்டுப்பாடு குழுமம் சார்பில் ஏர் மானிட்டர் இயந்திரங்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. நாடு முழுவதும் வருகிற 20-ஆம் தேதி தீபாவளி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ள நிலையில் பட்டாசு விற்பனையும் சூடு பிடித்துள்ளது. தீபாவளிக்கு நகரம் மற்றும் கிராமப்புறங்களில் அதிக அளவு பட்டாசுகள் வெடிப்பதால் காற்றில் நச்சுப் பொருட்கள் கலந்து காற்று மாசு ஏற்படுகிறது. பட்டாசு வெடிக்கும் போது வெளியாகும் சல்பர்…

Read More

MLA அங்காளன் தலைமையில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் மக்களுக்காக களத்தில் இறங்கினர்

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதன் காரணமாக மரக்கிளைகள் விழுந்து மின் இணைப்புகள் துண்டிக்கப்படாமல் இருக்கவும் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து விளைவிக்காமல் தடுக்கவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மரக்கிளைகளை வெட்டி அகற்றும் பணியில் திருபுவனை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் தலைமையில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் ஈடுபட்டனர். புதுச்சேரி திருபுவனை தொகுதிக்குட்பட்ட மதகடிப்பட்டு, செல்லிப்பட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மின் கம்பங்களில் மரக்கிளைகள் படர்ந்து இருப்பதால் அவ்வப்போது மின் இணைப்பு பாதிக்கப்படுகிறது. மேலும் பருவ மழை தொடங்கி இருக்கக்கூடிய…

Read More

புதுச்சேரி சட்டப்பேரவை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விசிக நிர்வாகிகள்

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனையும், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்யையும் குறிவைத்து அவதூறு கருத்துகளை திட்டமிட்டுப் பரப்பி வரும் பாஜகவினரை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனையும், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய்யையும் குறிவைத்து இழிவுப்படுத்துவதுடன் அவதூறுக் கருத்துகளைத் திட்டமிட்டுப் பரப்பி வரும் பாஜகவினரை கண்டித்தும், பாலியல் கொடுமைகளுக்கும், பெண்ணுரிமைக்கும், ஜனநாயக மாண்புகளுக்கும், மாணவர்களின் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிப்பதைக் கண்டித்துப் போராடிய புதுவைப் பல்கலைக்கழக மாணவர்களைக்…

Read More

போலி சைக்கிள் நிறுவன மோசடி – அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்! – புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை!

போலி சைக்கிள் நிறுவன மோசடியில் சிக்கிய ஒரு அதிகாரி மட்டுமின்றி பல உயர் அதிகாரிகளும், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுக்கும் தொடர்பு உள்ளதாகவும் அவர்கள் மீதும் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுச்சேரி அதிமுக மாநில செயலாளர் அன்பழகன் அறிக்கை வெளியிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “போலி சைக்கிள் நிறுவனத்திடம் 80 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளது காவல்துறைக்கு…

Read More

புதுச்சேரியில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் போராட்டம்!

புதுச்சேரி அரசு பள்ளியில் பணிபுரியும் ஒப்பந்த ஆசிரியர்கள் 100 க்கும் மேற்பட்டோர் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பேரணியாக சென்று சட்டபேரவை அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். புதுச்சேரி அரசு பள்ளிகளில் 300 க்கும் மேற்பட்ட ஒப்பந்த ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் பல வருடங்களாக பணியாற்றி வரும் ஒப்பந்த ஆசிரியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுப்படனர். தொடர்ந்து இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த நிலையில் ஆசிரியர்களை பணி…

Read More

புதுச்சேரியில் தொடங்கிய வடகிழக்கு பருவமழை!

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் புதுச்சேரியில் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்த நிலையில் புதுச்சேரி கடற்கரை சாலை, உப்பளம், நெல்லித்தோப்பு, உருளையான்பேட்டை, ராஜ்பவன் உள்ளிட்ட புதுச்சேரி நகர்ப் பகுதிகளிலும், அதே போல் பாகூர், கண்ணிகோயில், காலாபட்டு, சேதராபட்டு, வில்லியனூர், சோம்பட்டு, மதகடிப்பட்டு உள்ளிட்ட அனைத்து கிராம பகுதிகளிலும் இன்று காலை முதல் விட்டு விட்டு பரவலாக…

Read More

புதுச்சேரி மாநிலம் வில்லியனூர் பகுதியில் மதுக்கடை திறப்புக்கு எதிராக மக்கள் சாலை மறியல்!

புதுவையில் ரெஸ்டோ பாருக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு! வில்லியனூரில் பாரதிநகர், ஆரியப்பாளையம் பகுதியில் புதிய மதுபான கடை (ரெஸ்டோ பார் ) ஒன்று திறக்கப்படுவதாக தகவல் வந்ததையடுத்து, அந்தப் பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். மதுவால் இளைஞர்கள், குடும்பங்கள், சமூக அமைதி ஆகியவை பாதிக்கப்படும் எனக் கூறி நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றிணைந்து சாலை மறியல் செய்து கடும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து, காவல்…

Read More

புதுச்சேரியில்”கோ ப்ரீ சைக்கிள்”மோசடி வழக்கில் ஆய்வாளர் சஸ்பெண்ட்!

புதுச்சேரியில் Go Free Cycles (கோ ப்ரீ சைக்கிள்) என்ற போலி சைக்கிள் நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் 50 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியான சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தியை போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டு சஸ்பெண்ட் செய்துள்ளது. பெங்களூரு தலைமையிடமாக செயல்பட்ட கோ ப்ரீ சைக்கிள் நிறுவனத்தின் புதுச்சேரி கிளை, காமராஜர் சாலையில் இயங்கியதில், வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம் தருவதாக வாடிக்கையாளர்களை கவர்ந்து ரூ.4.5 லட்சம் முதலீடு…

Read More

புதுச்சேரியில் தண்ணீர் கேனில் கரப்பான் பூச்சி!

புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு விநியோகம் செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேன்களில் கரப்பான் பூச்சி மிதக்கும் காட்சி கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் இருந்து, டீலர்கள் மூலம் புதுச்சேரி முழுவதும் தண்ணீர் கேன்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அதன்படி, லெனின் வீதியில் உள்ள விஷ்ணு டிரிங்கிங் வாட்டர் சப்ளை நிறுவனம் இன்று கார்த்திக் காந்தி என்பவரது நிறுவனத்திற்கு தண்ணீர்…

Read More

கழிவறை கட்டும் திட்டத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கைது!

புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூனில், மத்திய அரசின் ஸ்வச் பாரத் தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.60 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டரை கைது செய்துள்ளனர். 2016 முதல் 2021 வரை நடைமுறையில் இருந்த இந்த திட்டத்தில், கழிவறைகள் கட்டப்படாமல் ரூ.59.89 லட்சம் தொகை முறைகேடாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போதைய வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார்….

Read More

புதுச்சேரி கட்டிடத் தொழிலாளர்கள் போராட்டம்!

புதுச்சேரியில் 300க்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தை முற்றுகை செய்து, தீபாவளி போனஸ் ₹6,000 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொழிலாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போனஸ் கிடையாது என்ற தகவல் பரவியதால் பரபரப்பும் ஏற்பட்டது. அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை என்றும், வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

Read More

புதுச்சேரி சுகாதாரதுறை பணியாளர்கள் போராட்டம்!

புதுச்சேரி சுகாதார துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள், மாதமாதம் தாமதமின்றி ஊதியம் வழங்க வலியுறுத்தி, முதலமைச்சர் அறிவித்த ஊதிய உயர்வை வழங்காததை கண்டித்து, இயக்குனர் அலுவலக வாயலில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் பங்கேற்றனர். புதுச்சேரியில் சுமார் 500 ஆஷா பணியாளர்கள் வீட்டுக்குவீடு சென்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட சுகாதார பணிகளில் உதவுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் ரூ.10,000 மாத ஊதியம் பெற்றுவருகின்றனர். கடந்த மார்ச் சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர்…

Read More

புதுச்சேரியில் தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி

உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், புதுச்சேரியில் தீபாவளி நாளன்று பட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்ட அறிவிப்பில், தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன காலை: 7.00 மணி முதல் 8.00 மணி வரை,மாலை: 7.00 மணி முதல் 8.00 மணி வரை அதே நேரத்தில், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டிடங்கள் உள்ளிட்ட அமைதிப்பகுதிகளின் 100 மீட்டர் சுற்றளவில்…

Read More

புதுச்சேரியில் 1986ல் தொடங்கப்பட்ட பாசிக் நிறுவனம் மூடல்!

புதுச்சேரி அரசின் வேளாண் சேவை மற்றும் தொழில் கார்ப்பரேஷன் (பாசிக்) நிறுவனம் 1986ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேளாண் இடுபொருட்கள், விதைகள், செடிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் போன்ற துறைகளில் பாசிக் நிறுவனம் செயல்பட்டு வந்தது. 2006–07 வரை லாபகரமாக இயங்கிய நிறுவனம் பின்னர் நஷ்டத்தை சந்தித்து வந்தது. 2007–08ஆம் ஆண்டில் ரூ.85 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது நிறுவனம் சுமார் ரூ.50 கோடி நஷ்டத்தில் உள்ளது. சுமார் 300 பேருக்கு வேலை வழங்க வேண்டிய நிலையில்,…

Read More

பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு!

பாகூர் அருகே சோரியாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பசுமை தீர்ப்பாயம் தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுப்பதற்கு தடை விதித்து இருந்தது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்….

Read More

40 ஆண்டுகள் பின்னர் கிளிஞ்சல்மேடு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா

காரைக்கால் அருகே கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில், 40 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 1976 ஆம் ஆண்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த தேர் திருவிழாவை மீண்டும் நடத்தும் நோக்கில், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் தயாரிக்கப்பட்டது. பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று ஸ்ரீ எல்லையம்மன் புதிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஏராளமான மீனவ மக்கள் “ஓம்…

Read More

அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்ற 2  கல்லூரி மாணவர்கள் கைது!

அரியாங்குப்பம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக இரு வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால், டிஜிபி உத்தரவின்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அரியாங்குப்பம் பாரதி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்ற ரகசிய தகவலினை அடிப்படையாகக் கொண்டு, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம்…

Read More

பள்ளி மாணவர்களுக்கு JCM மக்கள் மன்றம் சார்பில் தீபாவளிக்கு பட்டாசு பெட்டிகள்

திருபுவனை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி பட்டாசு பெட்டிகள் வழங்கப்பட்டன. திருபுவனை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், பள்ளிச் சிறுவர்களுக்கு பட்டாசு பெட்டிகளை வழங்கி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். JCM மக்கள் மன்றம் சார்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இந்த பட்டாசுகள் வழங்கப்பட்டு, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர்…

Read More

புதுச்சேரியில் குழந்தைகளுக்கு இலவச பாதுகாப்பு கண்ணாடி…

புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வாங்கும் 20,000 குழந்தைகளுக்கு இலவச பாதுகாப்பு கண்ணாடி வழங்கப்படும். முதலில் 5,000 கண்ணாடிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அ. குலோத்துங்கன் கூறியதாவது, தீபாவளி போது வெடிக்கும் பட்டாசுகள் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதற்கெதிராக, அனைத்து பட்டாசு கடைகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கப்படும். இது புதுச்சேரி அரவிந்த் மருத்துவமனை மற்றும் கெராலிங்க் இன்டர்நேஷனல் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. கண்ணாடிகள், துகள்கள், ஒளி தீவிரம், புகை…

Read More

நேரு எம்.எல்.ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெறவும், பாலியல் புகார் விசாரணைக் குழு அமைக்கவும் வலியுறுத்தி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் சேவை இயக்கத் தலைவர் மற்றும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழர் களம், மாணவர் கூட்டமைப்பு, காரைக்கால் மக்கள் போராட்டக் குழு உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் பொதுநல அமைப்புகள்…

Read More

புதுச்சேரியில் சாலை விபத்தில் ஊழியர் பலி!

புதுச்சேரி பத்துக்கண்ணு அருகே செங்கல் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த மினி லாரி, எதிரே வந்த இருசக்கர வாகனத்தை மோதியதில் தனியார் தொழிற்சாலை மேலாளர் ராஜா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வளவனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா, புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக பணியாற்றி வந்தார். திருமணமாகி மூன்று மாத பெண் குழந்தைக்கு தந்தையான அவர், பணி காரணமாக புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. லாரி ஓட்டுனர் விபத்துக்குப் பின்…

Read More

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் கனமழை!

புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், கோயில்கள், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 9 செ.மீ மழை பதிவாகியுள்ள இந்த பகுதியில், சித்தாராம வீதி, பிள்ளையார் கோயில் வீதி, நீரோடம் வீதி, சிக்காரிய வீதி போன்ற பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வினாயகர் கோயில் மற்றும் ஏனாம் காவல் நிலையம் உள்ளிட்ட…

Read More

தீபாவளி முன்னிட்டு புதுச்சேரியில் பட்டாசு குடோன்களில் போலீசார் தீவிர ஆய்வு!

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பட்டாசுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களில் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பண்டிகை காலங்களில் அனுமதிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு மட்டுமே பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா, அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருக்கனூர், கூனிச்சம்பட்டு, சந்தை புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் திருக்கனூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். இதில், அனுமதிக்கப்பட்ட அளவில் மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா மற்றும் அதிக சத்தம் எழுக்கும் பட்டாசுகள்…

Read More

அரியாங்குப்பம்–முள்ளோடை வரை 13 கி.மீ. மேம்பாலத்துக்கு ₹650 கோடி நிதி ஒதுக்கீடு

அரியாங்குப்பம் முதல் கடலூர் எல்லையான முள்ளோடை வரை 13 கிலோமீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்க ரூ.650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். புதுச்சேரியில் ரூ.436 கோடி மதிப்பில் உயர்மட்ட வழித்தடம் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முள்ளோடை வரை மேம்பாலம் அமைக்க மத்திய நிதி வழங்க வேண்டும் என கோரினார். அதனை ஏற்ற…

Read More

மேலும் 2 மேம்பாலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!

புதுச்சேரியில் மேலும் இரண்டு மேம்பாலங்கள் கட்ட மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என ஆளுநர் கைலாஷ்நாதன் வலியுறுத்தியுள்ளார். புதுவையில் ரூ.436 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் கைலாஷ்நாதன், “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை, பாலம், துறைமுகம், ரயில், விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்புகள்தான் நரம்பு மண்டலமாக உள்ளன. மக்கள் தொகை, வாகன எண்ணிக்கை, நகர வளர்ச்சி, தொழிற்சாலைகள் அதிகரிப்பால் போக்குவரத்து…

Read More

பழமையான குபேர் அங்காடி இடிப்பு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!

புதுச்சேரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க குபேர் அங்காடி இடிப்பு தொடர்பான வழக்கில், நகராட்சி ஆணையர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குபேர் அங்காடி, 1826ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழமையான சந்தையாகும். தற்போது காய்கறி, பூ, மீன் மற்றும் மளிகை உள்ளிட்ட 1400க்கும் மேற்பட்ட கடைகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பழைய கட்டிடத்தை இடித்து மூன்று அடுக்குகள் கொண்ட புதிய மார்க்கெட்டை…

Read More

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மீண்டும் மாணவர் போராட்டம்

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் ஒருவர் விடுதி வார்டனாக தொடர்வதை கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். வார்டன் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நிலையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

Read More

50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் JCM மக்கள் மன்றத்தில் இணைந்தனர்

புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், திருபுவனை தொகுதி JCM மக்கள் மன்ற வழக்கறிஞர் அணி தலைவர் ஆனந்தன் தலைமையில், திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் முன்னிலையில், சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அவர்களை நேரில் சந்தித்து, தங்களை JCM மக்கள் மன்றத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த இணைப்பு நிகழ்வில் பல்வேறு சமூக, அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.

Read More

தந்தையை கொன்றவரை 3 ஆண்டுகள் காத்திருந்து பழி தீர்த்த மகன்!

புதுச்சேரி ஏனாம் பகுதியில் தந்தையை கொன்றவரை 3 ஆண்டுகளாக காத்திருந்து பழி தீர்த்த மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏனாம் பகுதியைச் சேர்ந்த திபிரி செட்டி நாராயணசாமி (35) என்பவர் நேற்று இரவு திரையரங்கம் அருகே மர்ம நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஏனாம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில், 2022ஆம் ஆண்டு நாராயணசாமி, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்த மேக வெங்கடேசராவை பணம் திருப்பி…

Read More

முதலமைச்சர் ரங்கசாமி மத்திய சாலை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம்

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதி, புதுச்சேரி-கடலூர் சாலை மற்றும் NH-32 பகுதியின் மேம்பாட்டிற்கு சுமார் 957 கோடி ரூபாய் நிதி உதவி கோரிக்கை வைக்கிறார். மரப்பாலம் முதல் முல்லோடை வரை தொடர்ச்சியான மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க உயர்மட்ட பாலம் கட்டல், திறனை மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது முக்கிய குறிக்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,…

Read More

புதுச்சேரியில் ரூ.436 கோடி மேம்பால பணியை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்

புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை ரூ.436 கோடியில் 4 கி.மீ. புதிய மேம்பாலம் கட்டும் பணியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கி வைத்தார். மேம்பால பணிக்கான அடிக்கல் நாட்டு விழா தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்றது. இந்த மேம்பாலம் 30 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ரூ.25 கோடியில் 14 கி.மீ….

Read More

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்!

தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, புதுச்சேரி நகரில் உள்ள நேரு வீதி மற்றும் காந்தி வீதி பகுதிகளில் நடைபெற்ற சண்டே மார்க்கெட்டில் நேற்று மக்கள் திரளாகக் குவிந்தனர்.புதுச்சேரியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சண்டே மார்க்கெட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆடை, மின்சாதனங்கள், அலங்காரப் பொருட்கள் வரை பல்வேறு வகையான அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நகரின் முக்கிய சாலைகளான காந்தி வீதி மற்றும் நேரு வீதியின் இருபுறங்களிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஒருநாள் வியாபாரம் நடைபெற்றது….

Read More

பிரபல ரவுடி கொலையில் கைது செய்யப்பட்ட முத்து மீண்டும் கைது – பயங்கர ஆயுதங்களுடன் சிக்கினார்!

பிரபல ரவுடி ஐயப்பன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ரவுடி முத்துவை, லாஸ்பேட்டை போலீசார் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். புதுச்சேரி வானரபேட்டை பகுதியை சேர்ந்த ஐயப்பன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருகே கடத்தி சென்று கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முத்து உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்திருந்தனர். சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த முத்து, கருவடிக்குப்பம் பகுதியில் சொகுசு காரில் ஆயுதங்களுடன் சுற்றியபோது,…

Read More

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த எம்எல்ஏ சந்திர பிரியங்கா

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களின் குடும்பங்களை கோட்டிச்சேரி தொகுதி எம்எல்ஏ சந்திர பிரியங்கா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். காரைக்கால் கோட்டிச்சேரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவராமனுக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற 17 மீனவர்கள் இலங்கை கடற்படையால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பு, அதே பகுதியில் பத்து நாட்களுக்கு முன்பும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை சந்தித்த எம்எல்ஏ சந்திர பிரியங்கா,…

Read More

புதுச்சேரியில் கிராம உதவியாளர் மற்றும் எம்.டி.எஸ் உதவியாளருக்கான எழுத்து தேர்வு

புதுச்சேரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள கிராம உதவியாளர் மற்றும் எம்.டி.எஸ் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பல்வேறு தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாகூர் கலைக் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, திருவள்ளுவர் அரசு பெண்கள் கல்லூரி, அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப்பள்ளி, ஜீவானந்தம் அரசு பள்ளி, பெத்தி செமினார், அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடைபெற்ற ஆய்வின் போது, தேர்வு மையங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர், மின்சாரம்,…

Read More

புதுச்சேரி தவளக்குப்பத்தில் மீன் வண்டிகளால் கழிவு நீர் பரவி அவதி

தவளக்குப்பம் பகுதியிலிருந்து கடலூர், புதுச்சேரி, மடுகரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகள் வழியாக பல மீன் ஏற்றுமதி வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலைப்பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி, அறிவியல் கல்லூரி, கோயில் மற்றும் சிறு-குறு வியாபாரக் கடைகள் உள்ளதால், தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இப்பாதையைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், நல்லவாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் 20 முதல் 30 மீன் வாகனங்களில் இருந்து மீன் கழிவு நீர் சாலையில் கசியுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளிக்குச்…

Read More

புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…

மத்திய அரசின் ஓய்வூதிய மசோதாவை கண்டித்து, அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு எதிரான ஓய்வூதியத் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8-வது ஊதியக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், மேலும் குழுவின் வரம்பு குறிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு…

Read More

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு

புதுச்சேரி அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. புதுச்சேரி  அரசில் பணிபுரியும் குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸ் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை புதுச்சேரி அரசின் நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் உத்தரவு வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு கைக்கு கிடைக்கும் தொகை ரூ.6,908 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தது மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் அரசு பணியில் தொடர்ந்து பணியாற்றியவர்கள் மட்டுமே…

Read More

புதுச்சேரியில் ஹெலிகாப்டர் இன்ப சுற்றுலா தொடக்கம் – வானில் பறந்து புதுவையின் பசுமை அழகை ரசிக்கும் புதிய அனுபவம்

புதுச்சேரி சுற்றுலா துறை, உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுவையின் இயற்கை அழகை வானில் இருந்து கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் இன்ப சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் துவக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு ஹெலிகாப்டர் பயணத்தை தொடங்கி வைத்தார். சுமார் 20 நிமிடங்கள் நீடிக்கும் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா பயணத்தில் புதுச்சேரியின் முக்கிய…

Read More

பாலியல் புகாரில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் – மாணவர்கள் மீது நடவடிக்கை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு

காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகாருக்கு நியாயமான விசாரணை நடத்த வேண்டுமென மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி, கைது செய்து வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார். “மாணவர்கள் தங்கள் உரிமைக்காக அமைதியான முறையில் குரல் கொடுத்துள்ளனர். அவர்களை தாக்கி, வழக்குப்பதிவு செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது. மாணவர்கள்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை…

Read More

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் விடுவிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது-புதுவை பல்கலைக்கழகம் அறிக்கை.

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தை நோக்கி எதிர்ப்பு பேரணியில் புறப்பட்டனர். பிற்பகல் 2.45 மணியளவில் தொடங்கி, 3.10 மணியளவில் கட்டிடத்தை அடைந்த மாணவர்கள் சிலர் கட்டிடத்தின் பக்கவாட்டு வாயில்களூடாக நுழைந்தனர். நிர்வாகம் மற்றும் சிறப்பு காவல் அதிகாரிகள் மாணவர்களை அமைதியாக வெளியே அழைத்து, கட்டிடத்திற்கு வெளியே போராட்டத்தை தொடருமாறு கேட்டனர். ஆனால் மாணவர்கள் கோரிக்கையை ஏற்காமல், உள்ளே போராட்டத்தை தொடர்ந்தனர். 100 மீட்டர் உள்ளகப் பிரதேசத்தில் எந்தவித போராட்டங்களிலும் ஈடுபடாதிருப்பது குறித்த உயர்நீதிமன்ற…

Read More

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் காவல்துறையினரை மிரட்டும் வீடியோ வைரல்!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக, தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “இது என் லிமிட்… நான்தான் எம்எல்ஏ… உங்களை தொலைத்து விடுவேன். போலீஸ் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்… குற்றவாளிகளுக்கு ராஜமரியாதை தருகிறீர்கள், மாணவர்களை மிதிக்கிறீர்கள்” என கடுமையாக எச்சரிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதற்குமுன், காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில்…

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு – சிபிஎம், திமுக, விசிகவினர் கலைவாணனுடன் IPS சந்திப்பு

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் பேராசிரியர் மாதவய்யா மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் நேற்று நடத்திய போராட்டத்தின் போது, போலீசார் மாணவர்களை தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை கண்டித்து, சிபிஎம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து இன்று காலை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் IPS அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும்…

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரி JCM மக்கள் மன்றம் போராட்டம்!

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடைபெற்ற காவல் துறை நடவடிக்கைக்கு எதிராக JCM மக்கள் மன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. காலாப்பட்டு காவல் நிலையம் முன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர் கடந்த சில நாட்களாக பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்கள் குறித்து விவாதம் நிலவி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்…

Read More

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி – 100க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு

புதுச்சேரி : அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 100க்கும் மேற்பட்ட தனியார் செவிலியர் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். “புற்றுநோயை விட நம்பிக்கை பெரியது, பெண்களின் வலிமை அதைவிட பெரியது, ஒவ்வொரு பெண்ணும் விழிப்புணர்வுடன் இருக்கட்டும், புற்றுநோய் இல்லா உலகம் நமது ஆகட்டும்” போன்ற வாசகங்கள் இடம் பெற்ற…

Read More

புதுச்சேரியில் தொடர் செயின் பறிப்பு – மகாராஷ்டிரா கொள்ளையன் உள்ளிட்ட 3 பேர் கைது!

புதுச்சேரி : புதுச்சேரி முழுவதும் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் உட்பட மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முதலியார்பேட்டை, ஜான்பால் நகர், மூலக்குளம் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மூன்று பெண்களிடம் தங்கச் செயின்கள் பறிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், பி.ஒய்–01–சிடி–6689 என்ற எண்ணிலான பைக்கில் ஒரே நபர் மூன்றும் இடங்களிலும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த…

Read More

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராடிய மாணவர்கள் மீது தடியடி! 24 மாணவர்கள் கைது!

புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை நிர்வாகம் மூடி மறைப்பதாக குற்றம்சாட்டி, பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நள்ளிரவில் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர் அழுதபடி அளித்த ஆடியோ இணையத்தில் வைரலானது. அதில், துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் ஆபாசமாகப் பேசுவதோடு, நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும், மறுத்தால் இன்டெர்னல்…

Read More

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் A.K.சாய் சரவணன் குமார் கருத்துக்கு எதிராக JAACT அமைப்பினர் மனு

புதுச்சேரி யூனியன் பிரதேச காவல்துறை குறித்து சட்டமன்ற உறுப்பினராக உள்ள A.K. சாய் சரவணன் குமார் தெரிவித்த கருத்துக்கு எதிராக, “காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி (JAACT)” அமைப்பினர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். அமைப்பினர் தெரிவித்ததாவது: “7.10.2025 அன்று புதுச்சேரி சட்டமன்றத்தில் பேசியபோது, காவல்துறை சில நேரங்களில் சட்டத்திற்குப்புறம்பாக ‘என்கவுண்டர் (extra judicial killing)’ செய்ய வேண்டி வரும் என சாய் சரவணன் குமார்கூறியிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. இத்தகைய கருத்துகள்…

Read More

காரைக்கால் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது!

காரைக்கால், அக்டோபர் 09 :காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு கிராமத்தைச் சேர்ந்த சிவராமனுக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் முருகானந்தம், செல்வகுமார், ராஜேஷ், ராஜேஷ், குணசேகர், ஞானவேல் மற்றும் 17 மீனவர்கள் கடந்த 7ஆம்‌ தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர். அதிகாலை விசைப்படகு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, படகு பழுதடைந்தது. பழுது நீக்கும் பணியை மேற்கொண்டபோது இலங்கை கடற்படையினர் திடீரென வந்து 17 மீனவர்களையும் விசைப்படகையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசைப்படகையும் உடனடியாக மீட்டு…

Read More

புதுச்சேரி பொதுப்பணித்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!

புதுச்சேரியில் கடந்த 2016-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் (PWD) 2,642 பேர் தற்காலிக அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இவர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர், பணிநீக்கம் செய்யப்பட்ட இந்த ஊழியர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக மீண்டும் பணி வழங்கக் கோரி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், முதலமைச்சர் ரங்கசாமி, பணிநீக்கம் செய்யப்பட்ட 2,642 பேருக்கும் மீண்டும் பணி…

Read More

சிபிசிஐடி பிரிவில் காவலர்கள் பற்றாக்குறை — முக்கிய வழக்குகள் கிடப்பில்!

புதுச்சேரி காவல்துறையின் சிபிசிஐடி பிரிவில் தற்போது போலி ஆவணங்கள், கள்ளநோட்டு, ஆயுத கடத்தல், போலி நிதி நிறுவனம் மோசடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரணையில் உள்ளன. மேலும், பல மாதங்களாக நிலுவையில் உள்ள வழக்குகளையும் சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஆனால், காவலர்கள் பற்றாக்குறை காரணமாக பல முக்கிய வழக்குகள் தாமதமாகின்றன. தற்போது சிபிசிஐடி பிரிவில் சுமார் 30 காவலர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சில வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க 10 பேர் கொண்ட குழு…

Read More

புதுச்சேரியில் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்காததால், நூற்றாண்டு கண்ட அரசு உதவி பெறும் ….

புதுச்சேரியில் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்காததால், நூற்றாண்டு கண்ட அரசு உதவி பெறும் சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை பிரெஞ்சு ரெஸ்டாரண்டிற்கு வாடகை விட்ட கொடுமை புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் துவங்கப்பட்ட பள்ளிகளில், கிறிஸ்தவ, ஆங்கிலோ இந்தியன் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கப்பட்டது. இந்து மாணவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதனைக் கண்ட அப்போதைய பொன்னு முருகேசப் பிள்ளை தலைமையில் 20 இந்து இளைஞர்கள் 1880ம் ஆண்டு பொது தொண்டு…

Read More

கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழந்த குடும்பத்திற்கு ஜோஸ் சார்லஸ் மார்டின் நிதியுதவி

புதுச்சேரியில் மாசடைந்த குடிநீரை குடித்ததால் உயிழந்த 2 குடும்பத்தினருக்கு, சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகர், கோவிந்தசாலை பகுதிகளிலும், நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர், பிள்ளைதோட்டம், பெரியார் நகர், காமராஜர் நகர் தொகுதி சாரம், ஜீவா நகர், கவிக்குயில் நகர் போன்ற பகுதிகளில் அசுத்தமான குடிநீரை பொதுமக்கள் பருகி உள்ளனர். இதில்…

Read More

இலவச மதுபாட்டில் கேட்டு தகராறு – பெட்ரோல் குண்டு வீசுவோம் என மிரட்டிய ரவுடி கும்பல்

புதுச்சேரியில் இலவச மதுபாட்டில்கள் கேட்டு, ஊழியரை மிரட்டிய ரவுடி கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி அரியூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் மதுபான கடையில், ரவுடிகள் சிலர் தங்களுக்கு இலவசமாக மதுபானம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது கடை ஊழியர், மதுபானம் தர மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த ரவுடிகள் கடை மீது, பெட்ரோல் குண்டுகளை வீசிவிடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும், மதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ…

Read More

வணிகர்கள் உரிமை மாநாடு: சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு

புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாட்டில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாடு சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நேற்று செவ்வாய்கிழமை (23-09-25) மாலை நடக்கிறது. மாநாட்டுக்கு புதுவை வணிகர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டார். அங்காளன் எம்.எல்.ஏ., வில்லியம் ரீகன் ஜான்குமார், புதுவை வணிகர்கள்…

Read More

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது – உல்லாசத்தில் ஈடுபட்டது அம்பலம்

ஆரோவில் அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி காவல்துறையில் ‘ஆபரேஷன் திரிசூலம்’ என்ற திட்டம் மாநிலம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் தொடங்கப்பட்டது. அதன்படி, ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அவர்கள் வீட்டில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளார்களா என்பதை ஆராய்வதற்கும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரி முழுவதும்…

Read More

சிறப்பு மிகு நவராத்திரி விழா! – வீடுகளில் கொலு வைத்து கிராம மக்கள் வழிபாடு

புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் நவராத்திரியை முன்னிட்டு வீடுகளில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியை போற்றியும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் நவராத்திரி விழா…

Read More

மாசு கலந்த குடிநீர் விநியோகம்; காங். தர்ணா போராட்டம் – துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு

புதுச்சேரியில் மாசு கலந்த குடிநீர் விநியோகத்தை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நெல்லித்தோப்பு உருளையன்பேட்டை பகுதிகளில் மாசு கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த அசுத்த குடிநீரை குடித்த 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே நேற்று நெல்லித்தோப்பு பகுதிகளில் கான்வென்ட் வீதி, பள்ளிவாசல்…

Read More