சேலம் பரப்புரை நிகழ்வில் ஒருவர் உயிரிழப்பு
சேலத்தில் நடைபெற்ற த.வெ.க. பரப்புரை கூட்டத்தில் பங்கேற்ற வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி சூரஜ் என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
நீண்ட நேரம் கடும் வெயிலில் நின்றதால் மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

