அரசியல் கூட்டங்களுக்கான நிபந்தனைகள் வழக்கு: உயர் நீதிமன்றம் தீர்ப்பு

அரசியல் கூட்டங்கள் நடத்த விதிக்கப்படும் நிபந்தனைகள் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் முக்கிய தீர்ப்பை வழங்கியுள்ளது. அரசியல் கட்சிகள் தெரிவித்துள்ள ஆலோசனைகளை பரிசீலித்து, இறுதி வழிகாட்டு நெறிமுறைகளை வரும் ஜனவரி 5ஆம் தேதிக்குள் வெளியிட வேண்டும் என தலைமை நீதிபதி அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மேலும், அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளில் ஏதேனும் ஆட்சேபம் இருந்தால், சம்பந்தப்பட்ட அரசியல் கட்சிகள் மீண்டும் உயர் நீதிமன்றத்தை அணுகலாம் என்றும் நீதிமன்றம் தனது உத்தரவில் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்த தீர்ப்பின் மூலம், அரசியல் கூட்டங்களுக்கு விதிக்கப்படும் கட்டுப்பாடுகள் தெளிவான விதிமுறைகளின் அடிப்படையில் அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *