அணுசக்தித் துறையில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி: மத்திய அரசின் முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு
வாஷிங்டன்: இந்திய அணுசக்தித் துறையில் அந்நிய முதலீடுகளுக்கு அனுமதி வழங்கிய மத்திய அரசின் முடிவுக்கு, அமெரிக்கா வரவேற்பு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் அணுசக்தித் துறையில் இரு நாடுகளுக்கிடையேயான ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள ‘சாந்தி’ (Shanti) மசோதா முக்கியத்துவம் வாய்ந்தது என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த மசோதா, அணுசக்தி துறையில் புதிய முதலீடுகள், தொழில்நுட்ப பரிமாற்றம் மற்றும் கூட்டு முயற்சிகளுக்கு வழிவகுக்கும் என்றும், அதன் மூலம் இந்தியா–அமெரிக்கா இடையேயான உறவுகள் மேலும் வலுப்படும் என்றும் அமெரிக்கா தெரிவித்துள்ளது.
மேலும், அணுசக்தி துறையில் புதிய கண்டுபிடிப்புகள், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளில் இந்தியாவுடன் நெருக்கமான ஒத்துழைப்பை வழங்க தயாராக உள்ளோம் என அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்த முடிவு, உலகளாவிய அணுசக்தி சந்தையில் இந்தியாவின் பங்கினை மேலும் உயர்த்தும் வகையில் இருக்கும் என வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

