பி.எஸ்.எல்.வி. சி-62 தயாராகிறது : இன்று கவுண்ட்டவுன் தொடக்கம்

பி.எஸ்.எல்.வி. சி-62 ராக்கெட்டின் ஏவலுக்கு தேவையான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் நிறைவடைந்துள்ளன. ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இன்று காலை முதல் கவுண்ட்டவுன் நடைமுறைகள் தொடங்கப்பட்டுள்ளன. விஞ்ஞானிகள் மற்றும் தொழில்நுட்ப குழுவினர் தொடர்ந்து கண்காணிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். வானிலை மற்றும் தொழில்நுட்ப நிலைகள் சாதகமாக இருந்தால், நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது.

Read More

இமாசலில் பஸ் விபத்து: 14 பேர் பலி; பிரதமர் இழப்பீடு

இமாசல பிரதேசத்தில் பயணிகள் பஸ் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்தது . இதுவரை 14 பேர் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த விபத்தில் பலர் படுகாயம் அடைந்த நிலையில், அவர்கள் அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். சம்பவ இடத்திற்கு மீட்புப் படையினர் விரைந்து சென்று, மீட்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டனர். விபத்துக்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்ததுடன்,…

Read More

2026 விண்வெளிப் பயணம் ஆரம்பம்! 12-ஆம் தேதி புறப்படும் இஸ்ரோவின் பி.எஸ்.எல்.வி-C62

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ), 2026 ஆம் ஆண்டுக்கான தனது முதல் விண்வெளி பயணமாக பி.எஸ்.எல்.வி–சி62 ராக்கெட்டை ஜனவரி 12 ஆம் தேதி காலை 10:17 மணிக்கு ஏவ உள்ளது. இந்த ஏவல், ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் முதல் ஏவுதளத்திலிருந்து நடைபெற உள்ளது. இந்த ராக்கெட், குறிப்பிட்ட விண்வெளி திட்டத்தை நிறைவேற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது. தற்பொழுது அனைத்து தொழில்நுட்ப சோதனைகள் மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் தீவிரமாக…

Read More

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலமானார்

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், தேசத்தின் தலைவருமான கலிதா ஜியா (80) உடல்நலக் குறைவால் காலமானார். நீண்ட காலமாக உடல்நலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்த கலிதா ஜியா, மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று அவர் உயிரிழந்ததாக வங்கதேச அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அவரது மறைவுச் செய்தி வங்கதேச அரசியல் வட்டாரங்களில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வங்கதேசத்தின் முக்கிய அரசியல் தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கலிதா ஜியா, நாட்டின் முன்னாள் பிரதமராக பதவி வகித்து, பல்வேறு முக்கிய அரசியல்…

Read More

உலகின் பழமையான மொழி தமிழ்: பிரதமர் மோடி பெருமிதம்

உலகிலேயே பழமையான மற்றும் செழுமையான மொழிகளில் ஒன்றாக தமிழ் திகழ்வதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். 129-வது ‘மன் கி பாத்’ வானொலி நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், தமிழ் மொழியின் தொன்மை மற்றும் அதன் பண்பாட்டு முக்கியத்துவத்தை விரிவாக எடுத்துரைத்தார். குறிப்பாக, உத்தரப்பிரதேச மாநிலம் காசியில் தமிழ் மொழியை கற்றுக்கொள்ளும் ஆர்வம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாகவும், அங்குள்ள மக்கள் தமிழ் மொழி மற்றும் தமிழர் பண்பாட்டின் மீது பெரும் ஈர்ப்பு காட்டி வருவதாகவும் பிரதமர் மோடி…

Read More

‘பாகுபலி’ LVM3 ராக்கெட் மூலம் விண்ணில் பாய்ந்தது அமெரிக்காவின் ப்ளூபேர்ட்-6 செயற்கைக்கோள்

இந்தியாவின் ‘பாகுபலி ராக்கெட்’ என அழைக்கப்படும் இஸ்ரோவின் கனரக ஏவுகணையான LVM3 ராக்கெட் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த ‘ப்ளூபேர்ட்–6’ (BlueBird-6) செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தின் 2-ஆவது ஏவுதளத்தில் இருந்து இந்த ராக்கெட் விண்ணில் பாய்ந்தது. திட்டமிட்டபடி, செயற்கைக்கோள் அதன் குறிப்பிட்ட கக்ஷியில் நிலைநிறுத்தப்பட உள்ளது. இந்த செயற்கைக்கோள் மூலம், தொலைதூர மற்றும் சேவை வசதி குறைந்த பகுதிகளுக்கு கைப்பேசி இணைப்பு, அதிவேக 4ஜி மற்றும்…

Read More

கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான சேவைகள் பாதிப்பு

டெல்லி:டெல்லியில் நிலவி வரும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக இன்று (டிசம்பர் 20) 700-க்கும் மேற்பட்ட விமான சேவைகள் பாதிக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பனிமூட்டம் காரணமாக 88 விமானங்கள் முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், 89 விமானங்கள் தாமதமாக இயக்கப்பட்டுள்ளன. குறிப்பாக அதிகாலை மற்றும் காலை நேரங்களில் பனிமூட்டம் அதிகமாக இருந்ததால், விமானங்கள் தரையிறங்குவதிலும் புறப்படுவதிலும் சிக்கல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் பயணிகள் விமான நிலையங்களில் நீண்ட…

Read More

ISRO | டிசம்பர் 24ம் தேதி இஸ்ரோவின் LVM3 ராக்கெட் விண்ணில் பாய்கிறது

ஸ்ரீஹரிகோட்டா:இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) சார்பில் LVM3 ராக்கெட் டிசம்பர் 24ம் தேதி விண்ணில் ஏவப்பட உள்ளது. ஆந்திரப் பிரதேசம் ஸ்ரீஹரிகோட்டாவில் அமைந்துள்ள சதீஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து இந்த ராக்கெட் ஏவப்படவுள்ளதாக இஸ்ரோ அறிவித்துள்ளது. அமெரிக்காவுக்குச் சொந்தமான ஒரு முக்கிய செயற்கைக்கோளை சுமந்து செல்லும் இந்த LVM3 ராக்கெட், டிசம்பர் 24ம் தேதி காலை 8.54 மணிக்கு விண்ணில் பாய்கிறது. இஸ்ரோவின் கனரக ஏவுகணையான LVM3 மூலம் சர்வதேச அளவிலான விண்வெளி ஒத்துழைப்பு…

Read More

மத்திய பிரதேச அரசு மருத்துவமனையில் பெரும் அதிர்ச்சி: தலசீமியா சிகிச்சை பெற்ற 6 குழந்தைகளுக்கு HIV தொற்று

மத்திய பிரதேசம் : மத்திய பிரதேசத்தில் தலசீமியா நோய்க்காக சிகிச்சை பெற்று வந்த குழந்தைகளுக்கு தவறுதலாக HIV தொற்று உள்ள ரத்தம் செலுத்தப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் சத்னா மாவட்ட அரசு மருத்துவமனையில் நிகழ்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மருத்துவமனையில் தலசீமியா சிகிச்சையில் இருந்த 6 குழந்தைகளுக்கு HIV தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, லேபரட்டரி பொறுப்பாளர் உள்ளிட்ட 4 பேரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் (சஸ்பெண்ட்) செய்து மத்திய பிரதேச அரசு நடவடிக்கை…

Read More

எத்தியோப்பியா: பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு

அடிஸ் அபாபா: அதிகாரப்பூர்வ பயணமாக எத்தியோப்பியா சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டில் உற்சாகமான வரவேற்பும், உயரிய அரச மரியாதையும் வழங்கப்பட்டது. எத்தியோப்பியாவின் தலைநகர் அடிஸ் அபாபாவில் உள்ள விமான நிலையத்திற்கு நேரில் வந்த அந்நாட்டு பிரதமர் அபி அஹமது, பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்று வாழ்த்தினார். இதனைத் தொடர்ந்து நடைபெற்ற நிகழ்வில், எத்தியோப்பியா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடிக்கு அந்நாட்டு மிக உயரிய விருதான ‘தி கிரேட் ஹானர் நிஷான்’ விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது….

Read More

‘YOU BASTARDS’ – ஊடக பொறுப்பின் இரண்டு முகங்கள்

ஆஸ்திரேலியாவின் Daily Telegraph நாளிதழ், போண்டி கடற்கரை பகுதியில் நடந்த யூதர்களுக்கு எதிரான தீவிரவாத தாக்குதலை முன்பக்கத்தில் ஒரே வரியில் சுட்டிக்காட்டியது – “YOU BASTARDS.” முதல் பார்வையில் இந்த தலைப்பு கடுமையானதாக தோன்றலாம். ஆனால் அதன் பின்னணி, ஒரு குறிப்பிட்ட ஊடகப் பண்பாட்டை வெளிப்படுத்துகிறது. அந்த செய்தியில், குற்றவாளியின் பெயர், குடும்பப் பின்னணி, கல்வி, தனிப்பட்ட வாழ்க்கை போன்ற விவரங்கள் எதுவும் முன்னிலைப்படுத்தப்படவில்லை. மாறாக, சம்பவத்தின் தீவிரம், பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் மட்டுமே செய்தியின்…

Read More

நவோதயா பள்ளிகள் விவகாரம்: தமிழக அரசு-மத்திய அரசு பேச்சுவார்த்தை அவசியம் – உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: இந்தியா கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் நாடு என்றும், அதனால் தமிழக அரசு மற்றும் மத்திய அரசு இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி நிலுவையில் உள்ள பிரச்னைகளுக்கு தீர்வு காண வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. தமிழகத்தில் நவோதயா பள்ளிகளை அமைப்பது தொடர்பான வழக்கை விசாரித்த நீதிமன்றம், அந்த பள்ளிகளை நிறுவுவதற்கான பொருத்தமான இடங்களை ஆறு வார காலத்திற்குள் கண்டறிய தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. மேலும், கல்வி சார்ந்த வளர்ச்சியை முன்னிறுத்தி, இரு அரசுகளும் ஒருங்கிணைந்து…

Read More

ஆந்திரா பேருந்து விபத்து – உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல்!

ஆந்திர பிரதேச மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றிக் கொண்டு சென்ற தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தாக்கில் கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 9பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியானது. கடும் பனி மூட்டம் காரணமாக பக்தர்களை ஏற்றிச் சென்ற பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து மலைப்பாதையில் உருண்டு நொறுங்கியது. இந்த நிலையில், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து நிவாரண தொகையை அறிவித்துள்ளார். விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு 2,00,000 ரூபாயும் காயமடைந்தவர்களுக்கு…

Read More

ஆந்திர பிரதேசத்தில் கோர விபத்து! பள்ளத்தாக்கில் விழுந்த பேருந்து! 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல்!

ஆந்திர பிரதேசத்தில் 35 பக்தர்களை ஏற்றிச் சென்ற தனியார் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தாக்கில் விழுந்ததில் 9க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. கடும் பனி மூட்டத்தின் காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என கூறப்படுகிறது. ஆந்திர மாநிலம் அல்லூரி சீதாராம ராஜு மாவட்டத்தில் உள்ள துளசிபாகலு என்ற பகுதியில் மலைப்பாங்கான இடத்தில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து பள்ளத்தில் விழுந்தது. இதில் பேருந்தில் பயணித்த 9 பேர் உயிரிழந்ததாக முதற்கட்ட…

Read More

“எனது திரை வாழ்க்கையை அழிக்க முயற்சி நடந்தது!” – நடிகர் திலீப் விடுதலைக்குப் பின் பேச்சு!

கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லாததால் நடிகர் திலீப் இன்று (டிசம்பர் 8, 2025) எர்ணாகுளம் நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்டார். அவர் மீதான வழக்கு பொய் என்றும் தனது திரை வாழ்வை அழிக்க சதி நடந்ததாகவும் திலீப் வெளியான பின்னர் செய்தியாளர்களை சந்தித்தபோது தெரிவித்தார். மேலும் அவருக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார். திலீப் மீதான வழக்கில் எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. திலீப் மீது குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை என்றும், அவருக்கு எதிராகப் போதிய…

Read More

Dileep | கேரள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் நடிகர் திலீப் விடுதலை!

மலையாள நடிகை பாலியல் துன்புறுத்தல் வழக்கில் அதிரடி தீர்ப்பு வெளியாகியுள்ளது. பாலியல் துன்புறுத்தல் செய்த முதல் 6 பேரும் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. மலையாளம், தெலுங்கு, தமிழ் திரையுலகில் நடித்து வந்த கேரளாவை சேர்ந்த பிரபல நடிகையை, கேரளாவில் காரில் கடத்திச் சென்று பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்ட சம்பவம் அதிர செய்தது. கடந்த 2017ஆம் ஆண்டு பிப்ரவரி 17ஆம் தேதி இரவில் பிரபல நடிகை திருச்சூரில் இருந்து எர்ணாகுளம் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது, அவரது…

Read More

இந்தியா-ரஷியா உச்சி மாநாட்டை முடித்து அதிபர் புதின் ரஷியா திரும்பினார்

ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் தனது 2 நாள் அரசு முறை இந்திய பயணத்தை நிறைவு செய்து நேற்று இரவு ரஷியா திரும்பினார். புதன்கிழமை இரவு டெல்லி வந்த அவரை பிரதமர் நரேந்திர மோடி தானே விமான நிலையத்திற்கு சென்று வரவேற்றார். பயணத்தின் போது அதிபர் புதின் பல்வேறு அரசியல் மற்றும் இருதரப்பு நிகழ்ச்சிகளில் பங்கேற்றார். இதில் முக்கியமாக, நேற்று நடைபெற்ற 23வது இந்தியா–ரஷியா வருடாந்திர உச்சி மாநாட்டில் பிரதமர் மோடியும் புதினும் இணைந்து கலந்துகொண்டனர். மாநாட்டுக்குப்…

Read More

எச்-1பி விசா மூலம் அமெரிக்கா பெரிதும் பயனடைந்தது – எலான் மஸ்க்

வாஷிங்டன்: எச்-1பி விசா திட்டத்தின் மூலம் அமெரிக்காவுக்கு, குறிப்பாக இந்தியப் பொறியாளர்கள் வழங்கிய பங்களிப்பு மறுக்க முடியாதது என்று டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்‌எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார். இந்தியாவின் பிரபல பங்கு வர்த்தக தளமான செரோதா நிறுவனத்தின் இணை நிறுவனர் நிகில் காமத் நடத்தும் ‘WTF’ பாட்காஸ்டின் 16வது பகுதி சமீபத்தில் வெளியானது. இதில் விருந்தினராக கலந்து கொண்ட மஸ்க், ஸ்டார்ட்-அப் சூழல், செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி, தானியங்கி வாகனங்கள், சூரிய சக்தி தொழில்நுட்பம்…

Read More

ஆப்பிரிக்காவில் புதிய பெருங்கடல் உருவாகி வரும் அதிர்ச்சி தகவல்

பூமியில் ஒரு புதிய பெருங்கடல் உருவாகும் செயல்முறை தற்போது வேகமெடுத்து வருகிறது. இதனால் ஆப்பிரிக்கக் கண்டம் இரண்டாகப் பிரிய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக புதிய ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. முன்பெல்லாம் இந்த மாற்றம் 50 இலட்சம் முதல் 1 கோடி ஆண்டுகள் எடுக்கும் என கருதப்பட்டாலும், சமீபத்திய கண்டுபிடிப்புகள் இந்த நிகழ்வு அதைவிட மிக விரைவாக — ஏறக்குறைய 10 இலட்சம் ஆண்டுகளில், சில நேரங்களில் அதிலும் குறைவாக — நடைபெறலாம் எனக் கூறுகின்றன. இந்த கருத்தை முன்வைத்தவர், அமெரிக்க…

Read More

பாகிஸ்தானின் தாக்குதல்: ஆப்கானிஸ்தானில் 9 குழந்தைகள் உள்ளிட்ட 10 பேர் பலி

பாகிஸ்தானில் அண்மைக்காலமாக பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இதற்குக் காரணம் டெகரிக் இ தாலிபான் பாகிஸ்தான் (TTP) அமைப்பினருக்கு ஆப்கானிஸ்தான் காபூல் அரசு அடைக்கலம் வழங்குவதாக பாகிஸ்தான் குற்றம்சாட்டியுள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தானின் தாலிபான் அரசாங்கம் இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்துள்ளது. இதனால் இருநாடுகளுக்கும் இடையில் பதற்றம் அதிகரித்து வந்த நிலையில், கடந்த மாதமே பாகிஸ்தான் ராணுவம் ஆப்கானிஸ்தான் மீது தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலுக்கு பிந்தியும் சூழல் சமாதானமாகவில்லை. இந்நிலையில், மோதலின் தீவிரம் மேலும் உயர்…

Read More

அன்பை பொழிந்த ட்ரம்ப்-ஜி ஜின்பிங் : புதிய உலக அரசியல் சலசலப்பு

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், சீன அதிபர் ஜி ஜின்பிங் உடன் தொலைபேசியில் பேசினார் என்று சமூக வலைத்தள பதிவின் மூலம் தெரிவித்துள்ளார். உரையாடல் நேரத்தில், ஜி ஜின்பிங் சீனாவுக்கு வருமாறு விடுத்த அழைப்பை ட்ரம்ப் ஏற்றுக்கொண்டதாகவும், அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சீனாவுக்கு செல்லத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். அதேபோல், ட்ரம்ப் தாமும் ஜி ஜின்பிங்கை அமெரிக்க வர அழைத்ததாகவும், அந்த அழைப்பை சீன அதிபர் ஏற்றுக்கொண்டதால் அடுத்த ஆண்டு இறுதியில் அமெரிக்காவிற்கு வர உள்ளதாகவும்…

Read More

காசாவில் 25 மீ ஆழத்தில் 7 கி.மீ நீள மிகப்பெரிய சுரங்கம் – இஸ்ரேல் படை வெளியிட்ட வீடியோ வைரல்

காசா: ஹமாஸ் – இஸ்ரேல் மோதல் தொடங்கிய 2023 அக்டோபர் 7 முதல் போர்நிலை தொடர்ந்து கொண்டே இருக்கிறது. காசா பகுதியில் ஹமாஸ் அமைப்பினர் வீடுகளின் அடித்தளங்களில், நிலத்தடியில் அமைக்கப்பட்டுள்ள ரகசிய சுரங்கங்களில் மறைந்து தாக்குதல் நடத்தி வருவதாக இஸ்ரேல் படை குற்றம் சாட்டி வருகிறது.இந்த சுரங்கங்களை ஒன்றன் பின் ஒன்றாக கண்டுபிடித்து அழிக்கும் பணியில் இஸ்ரேல் படை ஈடுபட்டுள்ளது. இதன் தொடர்ச்சியாக, தெற்கு காசா எல்லைப்பகுதியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டவற்றில் மிகப் பெரியதாகிய புதிய ரகசிய சுரங்கம்…

Read More

ஜேஹ்ரான் மம்தானியை பாராட்டிய ட்ரம்ப், அரசியலில் அதிர்ச்சி; எதிரி இன்று நண்பன்!

அமெரிக்க அரசியலில் யாரும் எதிர்பாராத வகையில் பெரிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. இதற்கு முன் கடுமையாக விமர்சித்த நியூயார்க் மேயர் ஜேஹ்ரான் மம்தானியை, தற்போது நேரடியாக பாராட்டி முழு ஆதரவை வழங்குவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். வெள்ளை மாளிகையில் நடைபெற்ற சந்திப்பில் இந்த ஆச்சரிய அறிவிப்பு வெளிவந்தது. மோதலாக எதிர்பார்க்கப்பட்ட சந்திப்பு, ஆனால் விஷயம் மாறியது! மம்தானியை “கம்யூனிஸ்ட் பைத்தியக்காரர்” என்று முன்பு ட்ரம்ப் பலமுறை தாக்கியிருந்தார். அவர் மேயராகத் தேர்ந்தெடுக்கப்பட்டால் கூட்டாட்சி நிதியை நிறுத்துவேன்…

Read More

மாஸ்கோ ஏஐ கண்காட்சியில் மனித வடிவ ரோபோ நடனமாடி புதினை வரவேற்ற காட்சி வைரல்

ரஷ்யாவின் தலைநகர் மாஸ்கோவில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு (AI) கண்காட்சியில், அதிபர் விளாடிமிர் புதினை மனித வடிவ ரோபோ ஒன்று நடனமாடி வரவேற்ற காட்சி இணையத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. ரஷ்யாவின் மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றான ஸ்பெர்பேங்க், தங்களின் தொழில்நுட்ப முன்னேற்றங்களை வெளிப்படுத்தும் நோக்கில் மாஸ்கோவில் இந்த ஏஐ கண்காட்சியை ஏற்பாடு செய்தது. அதற்கு சிறப்பு விருந்தினராக அதிபர் புதின் வருகை தந்தார். கண்காட்சிக்கு வந்த புதினை, ரஷ்யாவில் உருவாக்கப்பட்ட ‘கிரீன்’ என்ற மனித வடிவ ரோபோ…

Read More

குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநருக்கு காலக்கெடு நிர்ணயிக்க முடியாது – உச்ச நீதிமன்றம்

மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கும் செயல்முறையில் குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு காலக்கெடு விதிக்கும் அதிகாரம் உச்ச நீதிமன்றத்துக்கு இல்லை என அரசியல் சாசன அமர்வு முக்கியமான தீர்ப்பை வழங்கியது. தமிழக ஆளுநரின் செயல்பாடுகள் குறித்து மாநில அரசு தொடர்ந்த வழக்கில், முன்னதாக இரு நீதிபதிகள் அமர்வு குடியரசுத் தலைவர் மற்றும் ஆளுநர்களுக்கு மசோதாக்களை ஒப்புதல் அளிக்க 3 மாத காலக்கெடு நிர்ணயித்தது. மேலும், அரசியல் சாசனத்தின் பிரிவு 142-ஐ பயன்படுத்தி, சில மசோதாக்களுக்கு நேரடியாக உச்ச நீதிமன்றமே…

Read More

பிகார் பேரவைத் தேர்தல்: முதல்கட்ட வாக்குப்பதிவு 64.66%!

பிகார் மாநிலத்தில் முதல்கட்டமாக நடைபெற்ற பேரவைத் தேர்தலில் 64.66 சதவிகிதம் வாக்குகள் பதிவாகியுள்ளன. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் இன்று (நவம்பர் 6) வாக்குப்பதிவு நடைபெற்றது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட பிகார் பேரவைக்கு இரு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டத் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவர் தேஜஸ்வி யாதவ், துணை முதல்வர் விஜய் குமார் சின்ஹா உள்ளிட்ட 1,314 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தலைமைத் தேர்தல் அலுவலர் வினோத் சிங் குஞ்சியால் தெரிவித்ததாவது: மாலை 6 மணி…

Read More

பீஹாரில் நாளை முதல் கட்ட சட்டசபை தேர்தல் – 18 மாவட்டங்களில் 121 தொகுதிகளில் வாக்குப்பதிவு

பாட்னா:பீஹார் மாநில சட்டசபை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. 18 மாவட்டங்களைச் சேர்ந்த 121 தொகுதிகளில் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையை செலுத்தவுள்ளனர். பாதுகாப்பு காரணங்களால் பதற்றமான ஓட்டுச்சாவடிகளில் மத்திய பாதுகாப்புப் படைகள் குவிக்கப்பட்டுள்ளன. தேர்தல் கமிஷன் அனைத்து தொகுதிகளிலும் விரிவான பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளது. தற்போது பீஹாரில் முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் (JDU) – பா.ஜ. கூட்டணி ஆட்சி செய்து வருகிறது. மொத்தம் 243 தொகுதிகள் கொண்ட…

Read More

ஆந்திராவில் கோவில் கூட்ட நெரிசல் விபத்து: குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழப்பு!

ஆந்திரா மாநிலம் ஸ்ரீகாகுளம் மாவட்டம், காசிபுக்கா பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ வெங்கடேஷ்வரா சுவாமி கோவிலில் இன்று காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குழந்தைகள் உட்பட 9 பேர் உயிரிழந்துள்ளனர். பிரபலமான இந்த கோவில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களை வரவேற்கிறது. இன்று ஏகாதசி நாளையொட்டி வழக்கத்தை விட அதிகமான பக்தர்கள் தரிசனம் செய்ய வந்ததால், கோவிலின் உள் பகுதிகளில் கடும் நெரிசல் ஏற்பட்டது. இந்த திடீர் நெரிசலில் பலர் மிதிக்கப்பட்டு காயமடைந்தனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட…

Read More

மும்பையில் அதிர்ச்சி: 17 குழந்தைகளை பணய கைதிகளாக கடத்திய நபர் என்கவுன்ட்டரில் சுட்டுக்கொலை

மும்பை: மும்பையின் போவை (Powai) பகுதியில் வியாழக்கிழமை நடைபெற்ற அதிர்ச்சிகரமான சம்பவம் ஒன்று நகரத்தை உலுக்கியது. “ஆர்.ஏ. ஸ்டூடியோ” (RA Studios) எனப்படும் நடிப்பு பயிற்சி நிலையத்தில் 15 முதல் 20 குழந்தைகள் வரை கடத்தப்பட்டு சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிப்பு வகுப்புகளுக்காக வந்திருந்த குழந்தைகள் சிலர் ஜன்னல் வழியே வெளியே பார்த்துக் கொண்டிருந்த காட்சிகள் பரபரப்பை ஏற்படுத்த, கவலைக்கிடமான பெற்றோர்கள் ஸ்டூடியோவின் வெளியே திரண்டனர். இந்த சம்பவத்தில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டவர் ரோஹித் ஆர்யா (Rohit…

Read More

காஸா போர் நிறுத்தத்தில் ட்ரம்ப் மட்டும் அல்ல!

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காஸாவில் போர் நிறுத்தத்தை தனது சாதனையாக காட்டியாலும், உண்மையில் பல நாடுகள் முக்கிய பங்காற்றியுள்ளன. டிரம்ப் 20 அம்ச திட்டத்தை அறிவித்தார்; ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அதற்குப் பின் ஒப்புக்கொண்டதால் தாக்குதல் நிறுத்தப்பட்டது. கத்தார் ஆரம்பத்திலிருந்தே மத்தியஸ்தராக செயல்பட்டு, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தைக்கு இடம் அளித்து அமைதிக்கு வழி செய்தது. கத்தார் அழுத்தத்தின்படி அமெரிக்கா கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அரபு நாடுகள் போர் நிறுத்தம் தொடர்பில் ஐநா பொதுச் சபையில் அழுத்தம்…

Read More

PF கணக்கில் இருந்து 100% பணம் எடுக்கலாம்…

மத்திய நிதி அமைச்சின் கீழ் கார்ப்பரேட் அபாய விரிவாக்கக் குழு (CBDT) கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (Provident Fund – PF) கணக்குகளில் பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 100% தொகை எடுக்கும் உரிமை: அவசர தேவைகள் (மருத்துவம், வீட்டு கடன் போன்றவை) ஏற்பட்டால் PF-ல் உள்ள முழு தொகையையும் எடுக்கலாம். முன்பு வரம்புகள் இருந்தன. கல்வி செலவுகள் வரம்பு உயர்வு: குழந்தைகளின் கல்விக்காக PF-லிருந்து எடுக்கக்கூடிய தொகை 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது….

Read More

BSF-ன் முதல் பெண் விமானப் பொறியாளர்: இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரியின் வரலாற்று சாதனை!

இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையான BSF (Border Security Force) வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி, BSF-ன் முதல் பெண் விமானப் பொறியாளராக (Pilot Engineer) பொறுப்பேற்றுள்ளார். இந்த சாதனை, பெண்களின் திறமையை வெளிப்படுத்தி, அமைப்பின் பன்முகப் பெண் சேர்க்கைக்கு மைல்கறையாக அமைந்துள்ளது. BSF இயக்குநர் தல்ஜித் சிங் தலைமையில் நடைபெற்ற சிறப்பு விழாவில், இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரிக்கு விமானத்தில் பறப்பதற்கான அதிகாரப்பூர்வ ‘பேட்ச்’ (Wings Patch) வழங்கப்பட்டது. இதேபோல், நான்கு…

Read More

தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறை… தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை

வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ள நிலையில், தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப்பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல, பீகாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாடினார். இதனையடுத்து, எதிர்க்கட்சிகள்…

Read More

இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? – பாகிஸ்தானுக்கு வாழ்வா, சாவா போட்டி

ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான் அணியும், வங்கதேசம் அணியும் மோதவுள்ளன. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இந்நிலையில் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற ஆசியக்கோப்பை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணியும், வங்கதேசம் அணியும் மோதின. முதல் போட்டியில் இலங்கை அணியை, வங்கதேசம் அணி வீழ்த்தி இருந்தது. கடந்த…

Read More

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மீதான தடை நீக்கம்… 19 பேர் பலிக்கு பின் அரசு அதிரடி முடிவு

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு திரும்பப் பெற்றுள்ளது. நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. முறைகேடுகளை தடுக்கவும், தேவையற்ற உள்ளீடுகளை தடுப்பதற்காகவும் புதிய விதிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியது. மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கியது. இதனை…

Read More
JCM

விலைகளில் ஏதேனும் குறைபாடா?… புகார் தெரிவிக்க இலவச உதவி எண்கள் அறிவிப்பு

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், நுகர்வோர்களுக்கு ஏதேனும் குறைபாடு இருந்தால், புகார் தெரிவிக்க இலவச உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி (03-09-25) புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பல முக்கிய…

Read More
ஹைட்ரஜன் குண்டு போட்டாலும் பிரதமர் மோடி வெல்வார் – தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி

ஹைட்ரஜன் குண்டு போட்டாலும் பிரதமர் மோடி வெல்வார் – தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி

பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூரவே நடத்திக் காண்பித்தவர் என்றும் ஹைட்ரஜன் பாம் போட்டாலும் பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், “திமுகவின் இந்து எதிர்ப்பு பிரச்சனையினால் நாங்கள் கலாச்சாரப் போரில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். கீழடி பொறுத்தவரை நாங்கள் தமிழர்களின் தொன்மையை மறைப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் தொன்மையை…

Read More

புதிய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இன்று முதல் அமல்… எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது?

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், எந்தெந்த பொருள்களின் விலைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பார்க்கலாம். ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி (03-09-25) புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்ட…

Read More
JCM

இந்தியாவிற்கு டஃப் கொடுத்த ஓமன்… 8 பவுலர்களை பயன்படுத்திய கேப்டன் ‘ஸ்கை’

ஆசியக்கோப்பை கிரிக்கெட் தொடரில் ஓமன் அணிக்கு எதிரான கடைசி லீக் போட்டியில், இந்திய அணி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ’ஏ’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் அணிகள் இடம்பெற்றுள்ளன. அதேபோல, ‘பி’ பிரிவில் இலங்கை, வங்கதேசம், ஆஃப்கானிஸ்தான் மற்றும் ஹாங்காங் ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. தொடரின் 12ஆவது போட்டியில் ‘ஏ’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய…

Read More

வக்பு திருத்த மசோதா: தடை விதிக்க மறுப்பு; முக்கிய விதிகளுக்கு இடைக்கால தடை

மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வக்பு திருத்த மசோதாவிற்கு தடைவிதிக்க உச்சநீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், முக்கிய விதிகளுக்கு இடைக்கால தடை விதித்துள்ளது. நாடு முழுவதும் வக்பு சொத்துக்களை ஒழுங்குபடுத்துதல் மற்றும் நிர்வாகத்தில் உள்ள சிக்கல்களுக்கு தீர்வுகாணும் நோக்கில் கடந்த 1995-ம் ஆண்டின் வக்பு சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளும் மசோதா மற்றும் முஸல்மான் வக்பு (ரத்து) மசோதா-2024 ஆகிய இரண்டும் நாடாளுமன்றத்தின் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் கடந்த ஏப்ரல் மாதம் நிறைவேற்றப்பட்டது. இந்த திருத்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது….

Read More
JCM

எந்தெந்த பொருள்களின் விலை குறையும்? – ஜிஎஸ்டி வரி விதிப்பில் என்னென்ன மாற்றங்கள்?

மத்திய அரசு அறிவித்துள்ள புதிய வரிவிதிப்பின் கீழ் எந்தெந்த பொருள்களின் விலை குறையும், மேலும் எந்தெந்த பொருள்களின் விலை அதிகரிக்கும், என்னென்ன மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பார்க்கலாம். ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் நேற்று புதன்கிழமை (03-09-25) அன்று புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்ட…

Read More
JCM

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மீதான தடை நீக்கம்… 19 பேர் பலிக்கு பின் அரசு அதிரடி முடிவு

அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு திரும்பப் பெற்றுள்ளது. நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. முறைகேடுகளை தடுக்கவும், தேவையற்ற உள்ளீடுகளை தடுப்பதற்காகவும் புதிய விதிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியது. மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கியது. இதனை…

Read More
JCM

‘யாருடைய மிரட்டலுக்கும் சீனா அஞ்சாது’ – ஷி ஜின்பிங் மறைமுக தாக்கு

சீனா யாருடைய மிரட்டலுக்கும் அஞ்சுவதில்லை என்றும், சீனாவின் வளர்ச்சியை தடுத்து நிறுத்த முடியாது என்றும் சீனாவில் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின் போது அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங் தெரிவித்தார். கடந்த ஆகஸ்ட் 31ஆம் தேதி சீனாவின் தியான்ஜென் நகரில் ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் கலந்துரையாடினர். அமெரிக்க வரி விதிப்பால், மூன்று முக்கிய நாடுகளும்…

Read More