தீபாவளிக்கு ரூ.570 மதிப்பிலான இலவச மளிகை தொகுப்பு வழங்கப்படும் – புதுச்சேரி முதல்வர் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி, அக்டோபர் 09:
நெட்டப்பாக்கம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர் கூறியது, “கடந்த கால ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. 10 ஆண்டுகள் மாநில வளர்ச்சி பின்னோக்கி சென்றது. உள்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்வி நிதி உதவி, வீடுகட்டும் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படவில்லை. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு சொன்னதையும், சொல்லாததையும் செய்யும் அரசாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
வரும் 10ஆம் தேதிக்கு மேல் இலவச அரிசி, கோதுமை மற்றும் விடுபட்ட இரண்டு மாதங்களுக்கான இலவச அரிசியையும் வழங்கப்படும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு எண்ணெய், ரவை, சர்க்கரை உள்ளிட்ட ரூ.570 மதிப்பிலான மளிகை தொகுப்பு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

