
வெள்ளவாரி வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து கொடுத்த ஜே.சி.எம். மக்கள் மன்றம் – பொதுமக்கள் நன்றி
காமராஜர் நகர் தொகுதியில் கழிவுநீர் நிறைந்த வெள்ளவாரி வாய்க்காலை, ஜே.சி.எம். மக்கள் மன்றம் தூர்வாரி சீரமைத்து கொடுத்துள்ளது. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் நகர், தேவகி நகர் வழியாக வெள்ளவாரி வாய்க்கால் செல்கிறது. கருவடிக்குப்பம் வெள்ளவாரி வாய்க்காலில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், காமராஜர் சாலை உப்பனாறு வாய்க்காலிலும் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளன. உப்பனாறு வாய்க்கால் மேம்பாலத்தை…