புதிய கட்சியை தொடங்கிய அண்ணாமலை!நொடிக்கு நொடி எகிறும் உறுப்பினர் எண்ணிக்கை …
அண்ணாமலை தலைமையில் புதிய அரசியல் கட்சி தமிழ்நாட்டில் உருவாக இருப்பதைத் தொடர்ந்து இதுகுறித்தான முக்கிய அறிவிப்பை அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ளார். ஏற்கனவே, பாஜக தலைமையிடம் தனது ராஜினாமா கடிதத்தை அவர் அளித்திருந்த நிலையில் இன்று 12 மணியளவில் சமூக வலைதளங்களில் சந்தித்து முக்கிய அறிவிப்பை வெளியிடுவேன் எனத் தெரிவித்திருந்தார். இதற்கிடையில் இன்று காலை அண்ணாமலையின் ராஜினாமா கடிதம் ஏற்கப்படுவதாக பாஜக தரப்பில் இருந்து அறிவிக்கப்விக்கப்பட்டது. தொடர்ந்து, ஏற்கனவே தெறிவிக்கப்பட்டபடி சமூக வலைதளங்களில் 12 மணிக்கு நேரலையில் வந்த அண்ணாமலை புதிய அரசியல் கட்சித் தொடங்குவதாக அறிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, பாஜகவில் பயணித்தது குறித்தும் நடிகர் ரஜினிகாந்த் அழைத்தது மற்றும் பல்வேறு நிகழ்வுகளைக் குறித்தும் பேசியிருக்கிறார். இதைப்பற்றி அவர் பேசுகையில், “தேசிய கட்சிகள் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளை புரிந்துக் கொள்வதில்லை; தமிழ்நாடு குறித்த தனது பார்வையும் பாஜக மூத்த தலைவர்களின் பார்வையும் ஒன்றாகவில்லை. 18 மாதங்களாக எனது அதிருப்தியை தெரிவித்து வந்தேன். எனது கருத்துக்கு தலைமை செவி சாய்க்கவில்லை. எதிர்காலத்தை நோக்கி பயணிப்பதற்கான நேரம் வந்துவிட்டது. ஒரு புதிய அரசியலை அடிப்படை கட்டமைப்பை மாற்றக்கூடிய அரசியலை உருவாக்க வேண்டுமென்ற அடிப்படையில் பாஜகவில் இருந்து வெளியேறி உள்ளேன்.
டிசம்பர் 4, 2025 அன்றே பாஜகவில் இருந்து வெளியே செல்லவிருக்கிறேன் என கட்சியிடம் தெரிவித்தேன். தேர்தல் பணியை முடித்துவிட்டு செல்லுங்கள் என தெரிவித்தனர். கட்சியின் உண்மைத் தொண்டனான அதனை செய்தேன்.
தற்போது, ஆனந்தமாக.. அன்போடு தமிழ்நாட்டில் ஒரு புதிய அரசியல் இயக்கத்தை நாம் தொடங்க இருக்கிறோம். கண்டிப்பாக அடுத்து நடக்கக்கூடிய தமிழகத்தின் பொதுத்தேர்தலில் நம் கட்சி போட்டியிடும். முதலில் இயக்கமாக அனைவரையும் உள்ளே கொண்டு வந்து, பிறகு அரசியல் சொல்லிக்கொடுத்து கட்சியாக மாற்றுவேன். நான் தொடங்கவுள்ள தனி இயக்கம் தமிழகத்தில் அடுத்து நடக்கும் பொதுத் தேர்தலில் கட்சியாக போட்டியிடும். சிறந்த மூளைகளை அரசியலுக்கு கொண்டுவருவேன்; அதற்கு சிறிதுகாலம் அவகாசம் தேவை. அனைவருக்கும் அரசியல் வாய்ப்பு கொடுக்க வேண்டும்; புதியவர்கள் அரசியலுக்கு வர வேண்டும்; நாம் செய்யப்போவது சாதாரண வேலை அல்ல; மிகப்பெரிய விஷயம்; கொஞ்சம் பொறுமை தேவை. தமிழ்நாட்டின் அரசியல் மொழி, இலக்கணத்தை மாற்ற வேண்டும் என்பதே விருப்பம். சமசரசமில்லாத கொள்கையை கொண்ட இயக்கமாக வழிநடத்துவதே என் இலக்கு” எனத் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, ரஜினிகாந்த் இயக்கத்தில் உரையாற்றியிருந்த அவர், ரஜினிகாந்த் 2020-ம் ஆண்டு தன்னை அவரது கட்சியில் சேர அழைத்தார். ஆனால், அவர் அரசியல் இயக்கம் ஆரம்பிப்பது தமிழ்நாட்டுக்கு நல்லதாக இருந்தாலும், கொரானா காலத்தில் அரசியல் கட்சி ஆரம்பிப்பது அவருக்கு நல்லதல்ல.எனவே, அவரது அழைப்பை மறுத்ததுடன் பாஜகவில் இணைவதை அவரிடம் தெளிவாக விளக்கியிருக்கிறேன்” எனத் தெரிவித்திருக்கிறார்.
தொடர்ந்து, தான் தொடங்கியிருக்கும் இயக்கத்திற்கான லிங்க்-ஐ அன்ணாமலை கொடுத்த நிலையில், அதில் சில நிமிடங்களிலேயே பலரும் தங்களை இணைத்து வருகின்றனர். இணைவோரின் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்க உள்ளதாக குறிப்பிடத்தக்கது

