மீனவ பெண்களின் கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்- LJK தலைவர்

சுனாமி நினைவு தினத்தை முன்னிட்டு, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட ஆழிப்பேரலையில் உயிரிழந்தவர்களின் நினைவாக அமைக்கப்பட்ட நினைவு சின்னத்தில் லட்சிய ஜனநாயக கட்சி (LJK) தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டின் அஞ்சலி செலுத்தினார்.

புதுச்சேரி வீராம்பட்டினம் கடற்கரையில் உள்ள சுனாமி நினைவு சின்னத்தில் மலர் தூவி மரியாதை செலுத்திய அவர், உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்தார்.

இதனைத் தொடர்ந்து, வீராம்பட்டினம் பகுதியைச் சேர்ந்த மீனவ பெண்களுடன் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகள் குறித்து நேரில் கேட்டறிந்தார். மீனவர்களின் வாழ்வாதாரம், பாதுகாப்பு வசதிகள் மற்றும் அடிப்படை தேவைகள் தொடர்பான கோரிக்கைகளை சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இந்த நிகழ்வில் LJK கட்சி நிர்வாகிகள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *