“அதிமுக மக்களுக்கு அடிமையாக இருக்கும் கட்சி” – கோவையில் அண்ணாமலை பேச்சு

கோவை

கோவையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை அதிமுக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி குறித்து கருத்து தெரிவித்தார். அவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பேச்சின்போது அண்ணாமலை கூறுகையில்,
என்னைப் பொறுத்தவரை அதிமுக ஒரு அடிமைக் கட்சிதான். ஆனால் அது யாருக்கும் அல்ல; மக்களை எஜமானர்களாக மதித்து, மக்களுக்கு அடிமையாக இருக்கும் கட்சி அதிமுக” என தெரிவித்தார்.

மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) குறித்தும் அவர் பேசினார்.“தேசிய ஜனநாயகக் கூட்டணியும் தமிழ்நாட்டு மக்களுக்கு அடிமையாக இருந்து, அவர்களின் நலனுக்காக செயல்படும் கூட்டணி” என அவர் கூறினார்.

அண்ணாமலையின் இந்த கருத்துகள் அரசியல் களத்தில் புதிய விவாதங்களை உருவாக்கியுள்ள நிலையில், இதற்கு எதிர்க்கட்சிகளின் பதில்கள் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *