ட்ரம்புக்கு நெருக்கடி .. முடிவடையும் ஈரான் போர்? நாடாளுமன்றத்தில் நிறைவேறிய தீர்மானம்!

ஈரான் போரில் பங்கேற்றுள்ள அமெரிக்கப் படைகளைத் திரும்பப் பெறும் தீர்மானம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதிபராக ட்ரம்ப் பதவியேற்ற பின்னர் அமெரிக்க நாடாளுமன்றத்தையும் மீறி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வந்தார். குறிப்பாக, வெனிசுலா மீது அவர் எடுத்த ராணுவ நடவடிக்கையும், ஈரான் மீது மேற்கொண்ட போர் நடவடிக்கையும் நாடாளுமன்றத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.

தற்போது நாடாளுமன்ற கீழவையில் ஈரான் போரில் இருந்து அமெரிக்க ராணுவத்தைத் திரும்பப்பெறும் சிறப்புமிக்க தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து விரைவில் மேலவையிலும் இதற்கான தீர்மானம் கொண்டுவரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இத்தீர்மானம் நாடாளுமன்றத்தின் மேலவையிலும் நிறைவேற்றப்பட்டால் இது உடனடியாக சட்டமாக நிறைவேற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலவையில் மொத்தம் உள்ள 100 இடங்களில் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு 53 இடங்களும், எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சிக்கு 47 இடங்களும் உள்ளன. கீழவையில் குடியரசுக் கட்சிக்கு பெரும்பான்மை இருந்தாலும், ட்ரம்ப் கட்சியைச் சேர்ந்த பலரும் இத்தீர்மானத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

அந்த வகையில், மேல்சபையிலும் இந்த தீர்மானத்துக்கு ட்ரம்ப் கட்சியினர் ஆதரவாக வாக்களிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அங்கும் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டால் வேறு வழியின்றி ட்ரம்புக்கு ஈரான் அமெரிக்கப் படைகளை ஈரானில் இருந்து பெறவேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *