புதுவை வீரர்களுக்கு LJK தலைவர் பாராட்டு – தேசிய போட்டிக்கு முன் ஊக்கமளிப்பு

புதுவையைச் சேர்ந்த டென்னிஸ் மற்றும் வாலிபால் கிளப் வீரர்கள், வரும் 25ம் தேதி ஜார்கண்டில் நடைபெறவுள்ள தேசிய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க உள்ள நிலையில், LJK தலைவர் ஜோஸ் சார்லஸ் மார்டினை சந்தித்து வாழ்த்துகளை பெற்றனர்.

இந்த சந்திப்பின்போது, தேசிய போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் தங்களின் பயிற்சி அனுபவங்கள், எதிர்பார்ப்புகள் குறித்து பகிர்ந்து கொண்டனர். அதற்கு பதிலளித்த ஜோஸ் சார்லஸ் மார்டினை, புதுவை வீரர்கள் மாநிலத்திற்கும் நாட்டிற்கும் பெருமை சேர்க்கும் வகையில் சிறப்பாக விளையாட வேண்டும் என ஊக்கமளித்தார்.

மேலும், விளையாட்டுத் துறையில் இளைஞர்கள் சாதிக்க தொடர்ந்து ஆதரவு வழங்கப்படும் என்றும், LJK சார்பில் தேவையான உதவிகள் செய்யப்படும் என்றும் அவர் உறுதியளித்தார். இந்த நிகழ்வு, வீரர்களிடையே புதிய உற்சாகத்தையும், தன்னம்பிக்கையையும் ஏற்படுத்தியதாக தெரிவிக்கப்படுகிறது.

தேசிய அளவிலான போட்டிகளில் புதுவை வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வெற்றி பெற வேண்டும் என விளையாட்டு ரசிகர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *