ஒரு மாணவி மட்டுமே படிக்கும் அரசு பள்ளி…

ராமநாதபுரம் மாவட்டம், கருப்பூர் கிராம அரசு தொடக்க பள்ளியில் ஒரே ஒரு மாணவி மட்டும் படித்து வருகிறார். இவருக்கு,ஆதியூர் அரசு தொடக்க பள்ளியில் இருந்து சத்துணவு வழங்கப்படுகிறது.

கடந்த ஆண்டு நான்கு பேர் படித்த நிலையில் இந்த ஆண்டு ஒரு மாணவி மட்டும் படிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. மீதமிருந்த மூவர் வேறு பள்ளிக்கு சென்று விட்டதாக கூறப்படுகிறது. காரைக்குடியை சேர்ந்த ஆசிரியர் அம்மாணவிக்கு கல்வி கற்பித்து வருகிறார்.

வாட்டார கல்வி அலுவலர்கள் ‘கருப்பூர் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.கிராம மக்களை சந்தித்து அரசு பள்ளிகளில் குழந்தைகளை சேர்க்க விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம்.விரைவில் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கப் படும் .கூடுதல் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்’.எனக்கூறினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *