

நாகை செல்கிறார் தவெக தலைவர் விஜய்… பல்வேறு நிபந்தனைகளுக்கு மத்தியில் பிரசாரம்…
தவெக தலைவர் விஜய் இரண்டாம் கட்ட பிரசாரத்தை மேற்கொள்வதற்காக இன்று நாகை மற்றும் திருவாரூர் ஆகிய மாவட்டங்களுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், விஜய்யின் பிரசாரத்தின்போது ஏராளமான ரசிகர்களும், தொண்டர்களும்…

புதுச்சேரியில்”கோ ப்ரீ சைக்கிள்”மோசடி வழக்கில் ஆய்வாளர் சஸ்பெண்ட்!
புதுச்சேரியில் Go Free Cycles (கோ ப்ரீ சைக்கிள்) என்ற போலி சைக்கிள் நிறுவனம் மூலம் பொதுமக்களிடம் 50 கோடிக்கு மேல் மோசடி செய்யப்பட்ட வழக்கில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அதில் சம்பந்தப்பட்ட விசாரணை அதிகாரியான சைபர் கிரைம் ஆய்வாளர் கீர்த்தியை போலீஸ் தலைமையகம் உத்தரவிட்டு சஸ்பெண்ட் செய்துள்ளது. பெங்களூரு தலைமையிடமாக செயல்பட்ட கோ ப்ரீ சைக்கிள் நிறுவனத்தின் புதுச்சேரி கிளை, காமராஜர் சாலையில் இயங்கியதில், வாடிக்கையாளர்களுக்கு அதிக லாபம் தருவதாக வாடிக்கையாளர்களை கவர்ந்து ரூ.4.5 லட்சம் முதலீடு…

குன்னூர்-மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் பாறை விழுந்து விபத்து!
நீலகிரி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய, விடிய இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்து, பல பகுதிகளில் அவதி உண்டாக்கியது. வானிலை ஆய்வு மையம் முன்னதாகவே மாவட்டத்தில் கனமழை பெய்யும் என எச்சரிக்கை வழங்கியுள்ளது. கோவையிலிருந்து மானந்தவாடி நோக்கி சென்று கொண்டிருந்த கேரளா அரசு பேருந்து குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதையில் குரும்பாடி பகுதியில் பாறை விழுந்ததில் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக, பேருந்தில் இருந்த 48 பயணிகள் யாரும் காயமின்றி உயிர் தப்பினர். மாற்று பேருந்து மூலம் பயணிகள் பாதுகாப்பாக…

மின் கம்பத்திற்கு பதிலாக மரக் குச்சிகள்!
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே தில்லைநகர் பகுதியில், மின்வாரியத்தின் அலட்சியமான நடவடிக்கை ஒன்று பொதுமக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. சின்னசேலம் துணை மின் நிலையத்தின் கீழ்பட்ட அந்தப் பகுதியில் உயர் மின் அழுத்த கம்பிகள் செல்கின்றன. இந்நிலையில், புதிய மின் கம்பம் அமைப்பதற்கு பதிலாக மின்துறை ஊழியர்கள் மரக் குச்சிகளை வைத்து மின் கம்பங்களுக்கு முட்டுக் கொடுத்து இணைத்துள்ளனர். உலகமே டிஜிட்டல் யுகமாக மாறிக் கொண்டிருக்கும்போது, இவ்வாறு மரக் குச்சிகளை மின் கம்பங்களுக்கு மாற்றாக பயன்படுத்தியிருப்பது அப்பகுதி மக்களிடையே…

புதுச்சேரியில் தண்ணீர் கேனில் கரப்பான் பூச்சி!
புதுச்சேரி லெனின் வீதியில் உள்ள தனியார் நிறுவனத்திற்கு விநியோகம் செய்யப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கேன்களில் கரப்பான் பூச்சி மிதக்கும் காட்சி கொண்ட வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் இயங்கி வரும் தனியார் குடிநீர் சுத்திகரிப்பு தொழிற்சாலையில் இருந்து, டீலர்கள் மூலம் புதுச்சேரி முழுவதும் தண்ணீர் கேன்கள் விநியோகம் செய்யப்படுகின்றன. அதன்படி, லெனின் வீதியில் உள்ள விஷ்ணு டிரிங்கிங் வாட்டர் சப்ளை நிறுவனம் இன்று கார்த்திக் காந்தி என்பவரது நிறுவனத்திற்கு தண்ணீர்…

மயிலாடுதுறை அருகே அரசு பேருந்து நடத்துனர் மீது தாக்குதல்!
மயிலாடுதுறை அருகே அரசு பேருந்தில் படியில் பயணம் செய்த மாணவர்களை மேலே வருமாறு கேட்டுக்கொண்டதால், நடத்துனர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையிலிருந்து திருச்சிற்றம்பலம் நோக்கி செல்லும் 1C எண் அரசு பேருந்து மாலை 6.10 மணியளவில் புறப்பட்டது. இதில் நடராஜபுரத்தைச் சேர்ந்த முனியப்பன் (46) கண்டக்டராக பணியாற்றி வந்தார். பேருந்து சென்று கொண்டிருக்கும்போது படியில் நின்ற மாணவர்களை மேலே ஏறச் சொன்ன முனியப்பனின் பேச்சைக் கேட்காமல் மாணவர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. பின்னர்,…

கழிவறை கட்டும் திட்டத்தில் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டர் கைது!
புதுச்சேரி அரியாங்குப்பம் கொம்யூனில், மத்திய அரசின் ஸ்வச் பாரத் தனிநபர் கழிவறை கட்டும் திட்டத்தில் ரூ.60 லட்சம் மோசடி நடந்தது தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு போலீசார் தற்காலிக கம்ப்யூட்டர் ஆபரேட்டரை கைது செய்துள்ளனர். 2016 முதல் 2021 வரை நடைமுறையில் இருந்த இந்த திட்டத்தில், கழிவறைகள் கட்டப்படாமல் ரூ.59.89 லட்சம் தொகை முறைகேடாக எடுத்துக்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தற்போதைய வட்டார வளர்ச்சி அதிகாரி கார்த்திகேசன் கடந்த ஜூலை மாதம் புதுச்சேரி லஞ்ச ஒழிப்பு பிரிவில் புகார் அளித்தார்….

கோத்தகிரியில் மின்கம்பியில் சிக்கி கரடி உயிரிழப்பு!
நீலகிரி மாவட்டம் கோத்தகிரி பகுதியில் நேற்று இரவு பெய்த கனமழையால் மின் கம்பி அறுந்து விழுந்தது. அதில் சிக்கிய 6 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி பரிதாபமாக உயிரிழந்தது. சமீப காலமாக கோத்தகிரி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கரடிகள் உணவு, தண்ணீர் தேடி குடியிருப்பு பகுதிகளுக்குள் அடிக்கடி நுழைந்து வருகின்றன. இதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். இந்நிலையில், நேற்று இரவு கோத்தகிரி – அல்லமலை கிராமம் செல்லும் நடைபாதையில் மின் கம்பி ஒன்று அறுந்து விழுந்தது. இன்று…

தமிழ்நாட்டில் தொடங்குகிறது வடகிழக்கு பருவமழை!
தமிழ்நாட்டில் நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கும் என வானிலை ஆய்வு தகவல்கள் தெரிவிக்கின்றன. மாநிலம் முழுவதும் பரவலாக கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. சில பகுதிகளில் அடிக்கடி மற்றும் இடியுடன் கூடிய மழை நடைபெறலாம் என காத்திருக்கும் வானிலை நிலவரம் எச்சரிக்கிறது. விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கவும், கடலோர பகுதிகளில் வலுவான காற்று காரணமாக சேதம் ஏற்படக்கூடும் என்பதைக் கருத்தில் கொள்ளவும் வானிலை அமைப்பு அறிவுறுத்தியுள்ளது.

காஸா போர் நிறுத்தத்தில் ட்ரம்ப் மட்டும் அல்ல!
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் காஸாவில் போர் நிறுத்தத்தை தனது சாதனையாக காட்டியாலும், உண்மையில் பல நாடுகள் முக்கிய பங்காற்றியுள்ளன. டிரம்ப் 20 அம்ச திட்டத்தை அறிவித்தார்; ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் அதற்குப் பின் ஒப்புக்கொண்டதால் தாக்குதல் நிறுத்தப்பட்டது. கத்தார் ஆரம்பத்திலிருந்தே மத்தியஸ்தராக செயல்பட்டு, ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையேயான பேச்சுவார்த்தைக்கு இடம் அளித்து அமைதிக்கு வழி செய்தது. கத்தார் அழுத்தத்தின்படி அமெரிக்கா கட்டாயப்படுத்தப்பட்டதாகவும், அரபு நாடுகள் போர் நிறுத்தம் தொடர்பில் ஐநா பொதுச் சபையில் அழுத்தம்…

புதுச்சேரி கட்டிடத் தொழிலாளர்கள் போராட்டம்!
புதுச்சேரியில் 300க்கும் மேற்பட்ட கட்டிடத் தொழிலாளர்கள் தட்டாஞ்சாவடி பகுதியில் உள்ள கட்டிட தொழிலாளர்கள் நலவாரிய அலுவலகத்தை முற்றுகை செய்து, தீபாவளி போனஸ் ₹6,000 வரை உயர்த்தி வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தொழிலாளர்கள், 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு போனஸ் கிடையாது என்ற தகவல் பரவியதால் பரபரப்பும் ஏற்பட்டது. அதிகாரிகள் சரியான பதில் அளிக்கவில்லை என்றும், வட மாநில தொழிலாளர்கள் அதிகமாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தொழிலாளர்கள் குற்றச்சாட்டு எழுப்பினர்.

புதுச்சேரி சுகாதாரதுறை பணியாளர்கள் போராட்டம்!
புதுச்சேரி சுகாதார துறையில் பணியாற்றும் ஆஷா பணியாளர்கள், மாதமாதம் தாமதமின்றி ஊதியம் வழங்க வலியுறுத்தி, முதலமைச்சர் அறிவித்த ஊதிய உயர்வை வழங்காததை கண்டித்து, இயக்குனர் அலுவலக வாயலில் தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 100க்கும் மேற்பட்ட ஆஷா பணியாளர்கள் பங்கேற்றனர். புதுச்சேரியில் சுமார் 500 ஆஷா பணியாளர்கள் வீட்டுக்குவீடு சென்று, குழந்தைகளுக்கு தடுப்பூசி உள்ளிட்ட சுகாதார பணிகளில் உதவுகின்றனர். கடந்த இரண்டு ஆண்டுகளாக இவர்கள் ரூ.10,000 மாத ஊதியம் பெற்றுவருகின்றனர். கடந்த மார்ச் சட்டப்பேரவை கூட்டத்தில் முதலமைச்சர்…

புதுச்சேரியில் தீபாவளி அன்று இரண்டு மணி நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி
உச்சநீதிமன்றத்தின் வழிகாட்டுதலின் அடிப்படையில், புதுச்சேரியில் தீபாவளி நாளன்று பட்டாசு வெடிப்பதற்கு இரண்டு மணி நேரம் மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. புதுச்சேரி மாசுக்கட்டுப்பாட்டு குழுமம் வெளியிட்ட அறிவிப்பில், தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்ட நேரங்கள் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளன காலை: 7.00 மணி முதல் 8.00 மணி வரை,மாலை: 7.00 மணி முதல் 8.00 மணி வரை அதே நேரத்தில், மருத்துவமனைகள், வழிபாட்டுத் தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் நீதிமன்றக் கட்டிடங்கள் உள்ளிட்ட அமைதிப்பகுதிகளின் 100 மீட்டர் சுற்றளவில்…

புதுச்சேரியில் 1986ல் தொடங்கப்பட்ட பாசிக் நிறுவனம் மூடல்!
புதுச்சேரி அரசின் வேளாண் சேவை மற்றும் தொழில் கார்ப்பரேஷன் (பாசிக்) நிறுவனம் 1986ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. வேளாண் இடுபொருட்கள், விதைகள், செடிகள் மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விநியோகம் போன்ற துறைகளில் பாசிக் நிறுவனம் செயல்பட்டு வந்தது. 2006–07 வரை லாபகரமாக இயங்கிய நிறுவனம் பின்னர் நஷ்டத்தை சந்தித்து வந்தது. 2007–08ஆம் ஆண்டில் ரூ.85 லட்சம் நஷ்டம் ஏற்பட்டது. தற்போது நிறுவனம் சுமார் ரூ.50 கோடி நஷ்டத்தில் உள்ளது. சுமார் 300 பேருக்கு வேலை வழங்க வேண்டிய நிலையில்,…

பாகூர் அருகே தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டு!
பாகூர் அருகே சோரியாங்குப்பம் பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் மணல் திருட்டில் ஈடுபட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர். பசுமை தீர்ப்பாயம் தென்பெண்ணை ஆற்றில் மணல் எடுப்பதற்கு தடை விதித்து இருந்தது. மேலும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்காமல் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்க மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதற்கிடையில், சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டதால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து பொதுமக்கள் ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ வேண்டாம் என அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்திருந்தனர்….

40 ஆண்டுகள் பின்னர் கிளிஞ்சல்மேடு ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில் தேர் திருவிழா
காரைக்கால் அருகே கிளிஞ்சல்மேடு மீனவ கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த ஸ்ரீ எல்லையம்மன் ஆலயத்தில், 40 ஆண்டுகளுக்கு பின் தேர் திருவிழா இன்று வெகு விமரிசையாக நடைபெற்றது. 1976 ஆம் ஆண்டிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருந்த தேர் திருவிழாவை மீண்டும் நடத்தும் நோக்கில், ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய தேர் தயாரிக்கப்பட்டது. பணி முடிவடைந்ததைத் தொடர்ந்து, இன்று ஸ்ரீ எல்லையம்மன் புதிய தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து மகா தீபாராதனை நடைபெற்றது. பின்னர் ஏராளமான மீனவ மக்கள் “ஓம்…

அரியாங்குப்பத்தில் கஞ்சா விற்ற 2 கல்லூரி மாணவர்கள் கைது!
அரியாங்குப்பம் அருகே கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்றதாக இரு வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து கஞ்சா மற்றும் இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன. புதுச்சேரி முழுவதும் கஞ்சா விற்பனை மற்றும் அதனால் ஏற்படும் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதால், டிஜிபி உத்தரவின்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர். இதன் தொடர்ச்சியாக, அரியாங்குப்பம் பாரதி நகர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுகிறது என்ற ரகசிய தகவலினை அடிப்படையாகக் கொண்டு, இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் உத்தரவின் பேரில் சப் இன்ஸ்பெக்டர் முருகானந்தம்…

PF கணக்கில் இருந்து 100% பணம் எடுக்கலாம்…
மத்திய நிதி அமைச்சின் கீழ் கார்ப்பரேட் அபாய விரிவாக்கக் குழு (CBDT) கூட்டத்தில் வருங்கால வைப்பு நிதி (Provident Fund – PF) கணக்குகளில் பணம் எடுக்கும் விதிகளில் முக்கிய மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. 100% தொகை எடுக்கும் உரிமை: அவசர தேவைகள் (மருத்துவம், வீட்டு கடன் போன்றவை) ஏற்பட்டால் PF-ல் உள்ள முழு தொகையையும் எடுக்கலாம். முன்பு வரம்புகள் இருந்தன. கல்வி செலவுகள் வரம்பு உயர்வு: குழந்தைகளின் கல்விக்காக PF-லிருந்து எடுக்கக்கூடிய தொகை 10 மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது….

பள்ளி மாணவர்களுக்கு JCM மக்கள் மன்றம் சார்பில் தீபாவளிக்கு பட்டாசு பெட்டிகள்
திருபுவனை தொகுதியில் உள்ள அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அறிவுறுத்தலின்படி பட்டாசு பெட்டிகள் வழங்கப்பட்டன. திருபுவனை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அங்காளன், பள்ளிச் சிறுவர்களுக்கு பட்டாசு பெட்டிகளை வழங்கி, தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். JCM மக்கள் மன்றம் சார்பில் நூற்றுக்கணக்கான மாணவர்களுக்கு இந்த பட்டாசுகள் வழங்கப்பட்டு, மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் JCM மக்கள் மன்ற நிர்வாகிகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் ஆதரவாளர்கள் உள்ளிட்ட பலர்…

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் உச்சநீதிமன்றம் அமலாக்கத்துறைக்கு கண்டனம்!
டாஸ்மாக் முறைகேடு புகார் வழக்கில் அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் கடுமையான கேள்விகள் எழுப்பியது. நீதிமன்றம், சந்தேகம் இருந்தாலே எந்த அரசு நிறுவனத்திலும் நுழைந்து ஆவணங்களை எடுத்துச் செல்லலாமா என கேள்வி எழுப்பியுள்ளது. தமிழ்நாடு அரசு வழக்கில், சட்டவிரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றது எனக் கூறி அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது. இதனைத் தொடர்ந்து உச்சநீதிமன்றம், அரசு அலுவலகத்தில் சோதனை நடத்துவது கூட்டாட்சி தத்துவத்துக்கு எதிராகவா? என்று கேள்வி எழுப்பியது. அமலாக்கத்துறை வாதம், விசாரணை அதிகாரி தவறு செய்திருந்தால் தனிப்பட்ட முறையில் அவரை…

கூடலூரில் அரசு பேருந்தை தாக்க முயன்ற காட்டு யானை!
கூடலூர் அருகே கரியசோலை பகுதியில், இரவு நேரத்தில் பயணிகளுடன் சென்ற அரசு பேருந்தை காட்டு யானை தாக்க முயன்ற சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. நெல்கிரி மாவட்டம் கூடலூர், பந்தலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கூடலூரிலிருந்து தேவலா வழியாக அரசு பேருந்து கரியமலை பகுதியை நோக்கி சென்றபோது, வனப்பகுதியில் இருந்து குட்டியுடன் வெளியேறிய யானை, தனது குட்டியை பாதுகாக்கும் நோக்கில் பேருந்தை தாக்க முயன்றது. பயணிகள் ஹார்ன் ஒலியை கேட்டு ஓட்டுனர்…

சீர்காழியில் வேல் வடிவ ஆலய கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயிலடி சாலையில், மார்கோனி மந்திராலயா கார்டனில் புதிதாக அமைக்கப்பட்ட ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ வேல்முருகன் ஆலய கும்பாபிஷேகம் விமர்சியாக நடைபெற்றது. வேல் வடிவில் அமைக்கப்பட்ட ஆலய மண்டலத்தில், புனித நீர் கொண்ட கலசங்கள் வைக்கப்பட்டு சிறப்பு யாகம் நடைபெற்றது. பின்னர், ஸ்ரீ வள்ளி ஸ்ரீ தெய்வானை மற்றும் ஸ்ரீ வேல்முருகன் சுவாமிக்கு மாப்பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், சந்தனம், பஞ்சாமிர்தம் போன்ற பொருட்களை கொண்டு சிறப்பு…

விற்பனைக்கு வைத்த 5 கிலோ கஞ்சா – மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த நபர் கைது!
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ரயில் நிலையம் அருகே வாகன நிறுத்தம் பகுதியில் விற்பனைக்கு வைத்து இருந்த 5 கிலோ கஞ்சா மீதான நடவடிக்கையில், மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த மதியார் ரஹ்மான் மொல்லா (26) என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். இந்நிலையில், கஞ்சா வழக்கு குற்றவாளி மதியார்…

புதுச்சேரியில் குழந்தைகளுக்கு இலவச பாதுகாப்பு கண்ணாடி…
புதுச்சேரியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பட்டாசு வாங்கும் 20,000 குழந்தைகளுக்கு இலவச பாதுகாப்பு கண்ணாடி வழங்கப்படும். முதலில் 5,000 கண்ணாடிகள் திங்கள்கிழமை வழங்கப்பட்டன. மாவட்ட ஆட்சியர் அ. குலோத்துங்கன் கூறியதாவது, தீபாவளி போது வெடிக்கும் பட்டாசுகள் 100-க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு கண் பாதிப்பை ஏற்படுத்தக்கூடும். இதற்கெதிராக, அனைத்து பட்டாசு கடைகளிலும் குழந்தைகளுக்கு பாதுகாப்பு கண்ணாடிகள் வழங்கப்படும். இது புதுச்சேரி அரவிந்த் மருத்துவமனை மற்றும் கெராலிங்க் இன்டர்நேஷனல் நிறுவனங்களுடன் இணைந்து செயல்படுத்தப்படுகிறது. கண்ணாடிகள், துகள்கள், ஒளி தீவிரம், புகை…

நேரு எம்.எல்.ஏ தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் மீது போலீசார் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை கண்டித்து, மாணவர்கள் மீது போடப்பட்ட பொய் வழக்கை திரும்பப்பெறவும், பாலியல் புகார் விசாரணைக் குழு அமைக்கவும் வலியுறுத்தி அண்ணாசிலை அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மனிதநேய மக்கள் சேவை இயக்கத் தலைவர் மற்றும் உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நேரு தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில், தமிழர் களம், மாணவர் கூட்டமைப்பு, காரைக்கால் மக்கள் போராட்டக் குழு உள்ளிட்ட பல்வேறு சமூக மற்றும் பொதுநல அமைப்புகள்…

புதுச்சேரியில் சாலை விபத்தில் ஊழியர் பலி!
புதுச்சேரி பத்துக்கண்ணு அருகே செங்கல் ஏற்றிக்கொண்டு அதிவேகமாக வந்த மினி லாரி, எதிரே வந்த இருசக்கர வாகனத்தை மோதியதில் தனியார் தொழிற்சாலை மேலாளர் ராஜா (35) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். வளவனூர் பகுதியைச் சேர்ந்த ராஜா, புதுச்சேரி மேட்டுப்பாளையம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் உற்பத்தி மேலாளராக பணியாற்றி வந்தார். திருமணமாகி மூன்று மாத பெண் குழந்தைக்கு தந்தையான அவர், பணி காரணமாக புதுச்சேரி நோக்கி சென்று கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது. லாரி ஓட்டுனர் விபத்துக்குப் பின்…

போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது வாலிபர்!
கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை செய்த குற்றச்சாட்டில் 21 வயது கவியரசன் என்பவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் பரிந்துரையின் அடிப்படையில், கோவை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் குற்றவாளியை “பாலியல் குற்றவாளி” என கருதி, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்….

அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் தர்ணா போராட்டம்!
அன்புமணி ஆதரவு பாமக சட்டமன்ற உறுப்பினர்கள், ஜி.கே. மணி பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக இருந்து வரும் பொறுப்பிலிருந்து நீக்கப்படுமாறு கோரி சட்டமன்ற பேரவை வளாகத்தில் தர்ணா போராட்டம் மேற்கொண்டனர். போராட்டத்தில் வெங்கடேஸ்வரன், சிவகுமார், சதாசிவம் ஆகியோர் பங்கேற்றனர். அவர்கள் தர்மபுரி சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேஸ்வரனை பாமக சட்டமன்ற உறுப்பினர் குழு தலைவராக, மற்றும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமாரை பாமக கொரடா’வாக நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். போராட்டத்திற்குப் பிறகு வெங்கடேஸ்வரன் செய்தியாளர்களை…

புதுச்சேரி மாநிலம் ஏனாம் பிராந்தியத்தில் கனமழை!
புதுச்சேரி மாநிலத்தின் ஏனாம் பிராந்தியத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், கோயில்கள், பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்களில் மழை நீர் தேங்கி வெள்ளம் போல் காட்சியளிக்கிறது. கடந்த 24 மணி நேரத்தில் சுமார் 9 செ.மீ மழை பதிவாகியுள்ள இந்த பகுதியில், சித்தாராம வீதி, பிள்ளையார் கோயில் வீதி, நீரோடம் வீதி, சிக்காரிய வீதி போன்ற பகுதிகளில் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. வினாயகர் கோயில் மற்றும் ஏனாம் காவல் நிலையம் உள்ளிட்ட…

தீபாவளி முன்னிட்டு புதுச்சேரியில் பட்டாசு குடோன்களில் போலீசார் தீவிர ஆய்வு!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரியில் பட்டாசுகள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் மற்றும் குடோன்களில் போலீசார் தீவிர ஆய்வு மேற்கொண்டனர். பண்டிகை காலங்களில் அனுமதிக்கப்பட்ட பொருட்களைக் கொண்டு மட்டுமே பட்டாசுகள் தயாரிக்கப்படுகிறதா, அரசின் விதிமுறைகள் பின்பற்றப்படுகிறதா என்பதனை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. திருக்கனூர், கூனிச்சம்பட்டு, சந்தை புதுக்குப்பம் உள்ளிட்ட பகுதிகளில் திருக்கனூர் காவல் ஆய்வாளர் ராஜ்குமார் தலைமையில் போலீசார் ஆய்வு செய்தனர். இதில், அனுமதிக்கப்பட்ட அளவில் மருந்துப் பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளதா மற்றும் அதிக சத்தம் எழுக்கும் பட்டாசுகள்…

அரியாங்குப்பம்–முள்ளோடை வரை 13 கி.மீ. மேம்பாலத்துக்கு ₹650 கோடி நிதி ஒதுக்கீடு
அரியாங்குப்பம் முதல் கடலூர் எல்லையான முள்ளோடை வரை 13 கிலோமீட்டர் நீளத்தில் மேம்பாலம் அமைக்க ரூ.650 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி அறிவித்தார். புதுச்சேரியில் ரூ.436 கோடி மதிப்பில் உயர்மட்ட வழித்தடம் மற்றும் சாலை மேம்பாட்டு பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் பேசிய முதலமைச்சர் ரங்கசாமி, முள்ளோடை வரை மேம்பாலம் அமைக்க மத்திய நிதி வழங்க வேண்டும் என கோரினார். அதனை ஏற்ற…

மேலும் 2 மேம்பாலங்களுக்கு மத்திய அரசு நிதி வழங்க வேண்டும்!
புதுச்சேரியில் மேலும் இரண்டு மேம்பாலங்கள் கட்ட மத்திய அரசு நிதி வழங்க வேண்டும் என ஆளுநர் கைலாஷ்நாதன் வலியுறுத்தியுள்ளார். புதுவையில் ரூ.436 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய ஆளுநர் கைலாஷ்நாதன், “நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு சாலை, பாலம், துறைமுகம், ரயில், விமான நிலையம் போன்ற உள்கட்டமைப்புகள்தான் நரம்பு மண்டலமாக உள்ளன. மக்கள் தொகை, வாகன எண்ணிக்கை, நகர வளர்ச்சி, தொழிற்சாலைகள் அதிகரிப்பால் போக்குவரத்து…

பழமையான குபேர் அங்காடி இடிப்பு வழக்கு – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது!
புதுச்சேரியின் வரலாற்றுச் சிறப்புமிக்க குபேர் அங்காடி இடிப்பு தொடர்பான வழக்கில், நகராட்சி ஆணையர் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. புதுச்சேரி நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள குபேர் அங்காடி, 1826ஆம் ஆண்டு பிரெஞ்சு ஆட்சிக் காலத்தில் கட்டப்பட்ட பழமையான சந்தையாகும். தற்போது காய்கறி, பூ, மீன் மற்றும் மளிகை உள்ளிட்ட 1400க்கும் மேற்பட்ட கடைகள் இங்கு செயல்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ், பழைய கட்டிடத்தை இடித்து மூன்று அடுக்குகள் கொண்ட புதிய மார்க்கெட்டை…

தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து நிறுவனங்களிலும் ஆய்வு செய்ய அரசு உத்தரவு!
இருமல் மருந்து குடித்து 25 குழந்தைகள் உயிரிழந்த சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருந்து தயாரிப்பு நிறுவனங்களிலும் விரிவான ஆய்வு மேற்கொள்ள தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மாநிலம் முழுவதும் மருந்து உற்பத்தி நிறுவனங்களின் தரம், உற்பத்தி முறை, பாதுகாப்பு நடைமுறைகள் ஆகியவை குறித்து துறை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். சம்பந்தப்பட்ட வழக்கில், மருந்து தயாரித்த ஸ்ரீசன் நிறுவனம் தயாரிப்பு உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும், நிறுவனத்தின் செயல்பாடு முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது….

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் மீண்டும் மாணவர் போராட்டம்
புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான பேராசிரியர் ஒருவர் விடுதி வார்டனாக தொடர்வதை கண்டித்து மாணவர்கள் மீண்டும் போராட்டத்தை தொடங்கினர். வார்டன் அலுவலகத்தை முற்றுகையிட்டு மாணவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.நிலையைக் கட்டுப்படுத்த பாதுகாப்பு படையினர் பல்கலைக்கழக வளாகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்

50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் JCM மக்கள் மன்றத்தில் இணைந்தனர்
புதுச்சேரி மாநிலத்தின் பல்வேறு சட்டமன்ற தொகுதிகளைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள், திருபுவனை தொகுதி JCM மக்கள் மன்ற வழக்கறிஞர் அணி தலைவர் ஆனந்தன் தலைமையில், திருபுவனை சட்டமன்ற உறுப்பினர் அங்காளன் முன்னிலையில், சமூக சேவகர் சார்லஸ் மார்டின் அவர்களை நேரில் சந்தித்து, தங்களை JCM மக்கள் மன்றத்தில் இணைத்துக் கொண்டனர். இந்த இணைப்பு நிகழ்வில் பல்வேறு சமூக, அரசியல் பிரமுகர்களும் பங்கேற்றனர்.

தந்தையை கொன்றவரை 3 ஆண்டுகள் காத்திருந்து பழி தீர்த்த மகன்!
புதுச்சேரி ஏனாம் பகுதியில் தந்தையை கொன்றவரை 3 ஆண்டுகளாக காத்திருந்து பழி தீர்த்த மகனை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். ஏனாம் பகுதியைச் சேர்ந்த திபிரி செட்டி நாராயணசாமி (35) என்பவர் நேற்று இரவு திரையரங்கம் அருகே மர்ம நபர்களால் கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்தார். அவரை மீட்டு ஏனாம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். விசாரணையில், 2022ஆம் ஆண்டு நாராயணசாமி, வட்டிக்கு பணம் கொடுக்கும் தொழில் செய்த மேக வெங்கடேசராவை பணம் திருப்பி…

தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம் – பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் பிரச்சாரம் தொடக்கம்
தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு, தமிழக அரசியல் கட்சிகள் மக்கள் சந்திப்பு மற்றும் பிரச்சாரப் பயணங்களை தீவிரப்படுத்தி வருகின்றன. அந்த வகையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் ‘தமிழகம் தலை நிமிர தமிழனின் பயணம்’ என்ற முழக்கத்துடன் மதுரையில் பிரச்சாரப் பயணத்தை தொடங்கினார். மதுரை அண்ணா நகர் அம்பிகா தியேட்டர் அருகே நடைபெற்றது . தொடக்கவிழாவில் மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், எல். முருகன், எம்எல்ஏ வானதி சீனிவாசன், மற்றும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள்…

கோவை மாவட்டம் வால்பாறையில் யானை தாக்கி பாட்டி, பேத்தி உயிரிழப்பு!
வால்பாறை அருகே யானை தாக்கியதில் பாட்டியும் பேத்தியும் பரிதாபமாக உயிரிழந்தனர். வால்பாறை அடுத்துள்ள ஊமையாண்டி முடக்கு எஸ்டேட் பகுதியில் இன்று அதிகாலை 3 மணியளவில் காட்டு யானை குடியிருப்பு பகுதியில் புகுந்தது. அப்போது தோட்டத் தொழிலாளி அசலா என்பவரின் வீடு யானையால் இடிக்கப்பட்டது. வீடு இடிக்கும் சத்தத்தை கேட்டு அசலா தனது ஆறு வயது பேத்தி ஹேமா ஸ்ரீயை தூக்கிக் கொண்டு வெளியேற முயன்றார். அப்போது காட்டு யானை இருவரையும் தூக்கி வீசி காலால் மிதித்தது. இதில்…

முதலமைச்சர் ரங்கசாமி மத்திய சாலை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம்
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு கடிதம் எழுதி, புதுச்சேரி-கடலூர் சாலை மற்றும் NH-32 பகுதியின் மேம்பாட்டிற்கு சுமார் 957 கோடி ரூபாய் நிதி உதவி கோரிக்கை வைக்கிறார். மரப்பாலம் முதல் முல்லோடை வரை தொடர்ச்சியான மற்றும் கடுமையான போக்குவரத்து நெரிசல் மற்றும் பயணிகளுக்கு ஏற்படும் சிரமங்களை குறைக்க உயர்மட்ட பாலம் கட்டல், திறனை மேம்படுத்தல் மற்றும் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது முக்கிய குறிக்கோளாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும்,…

புதுச்சேரியில் ரூ.436 கோடி மேம்பால பணியை நிதின் கட்கரி தொடங்கி வைத்தார்
புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் இந்திரா காந்தி சதுக்கம் முதல் ராஜீவ் காந்தி சதுக்கம் வரை ரூ.436 கோடியில் 4 கி.மீ. புதிய மேம்பாலம் கட்டும் பணியை மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி இன்று தொடங்கி வைத்தார். மேம்பால பணிக்கான அடிக்கல் நாட்டு விழா தட்டாஞ்சாவடி பகுதியில் நடைபெற்றது. இந்த மேம்பாலம் 30 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், ரூ.25 கோடியில் 14 கி.மீ….

BSF-ன் முதல் பெண் விமானப் பொறியாளர்: இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரியின் வரலாற்று சாதனை!
இந்தியாவின் எல்லைப் பாதுகாப்புப் படையான BSF (Border Security Force) வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் தொடங்கியுள்ளது. இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரி, BSF-ன் முதல் பெண் விமானப் பொறியாளராக (Pilot Engineer) பொறுப்பேற்றுள்ளார். இந்த சாதனை, பெண்களின் திறமையை வெளிப்படுத்தி, அமைப்பின் பன்முகப் பெண் சேர்க்கைக்கு மைல்கறையாக அமைந்துள்ளது. BSF இயக்குநர் தல்ஜித் சிங் தலைமையில் நடைபெற்ற சிறப்பு விழாவில், இன்ஸ்பெக்டர் பாவ்னா சவுத்ரிக்கு விமானத்தில் பறப்பதற்கான அதிகாரப்பூர்வ ‘பேட்ச்’ (Wings Patch) வழங்கப்பட்டது. இதேபோல், நான்கு…

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி சண்டே மார்க்கெட்டில் மக்கள் கூட்டம்!
தீபாவளி பண்டிகை நெருங்கி வருவதையொட்டி, புதுச்சேரி நகரில் உள்ள நேரு வீதி மற்றும் காந்தி வீதி பகுதிகளில் நடைபெற்ற சண்டே மார்க்கெட்டில் நேற்று மக்கள் திரளாகக் குவிந்தனர்.புதுச்சேரியில் வாரந்தோறும் ஞாயிற்றுக்கிழமைகளில் நடைபெறும் சண்டே மார்க்கெட்டில் வீட்டு உபயோகப் பொருட்கள் முதல் ஆடை, மின்சாதனங்கள், அலங்காரப் பொருட்கள் வரை பல்வேறு வகையான அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. நகரின் முக்கிய சாலைகளான காந்தி வீதி மற்றும் நேரு வீதியின் இருபுறங்களிலும் தற்காலிக கடைகள் அமைக்கப்பட்டு ஒருநாள் வியாபாரம் நடைபெற்றது….

கரூர் கூட்ட நெரிசல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!
கரூர் விஜய் பிரசார கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த வழக்கை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் இன்று (திங்கள்) உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி, கரூரில் த.வெ.க தலைவர் விஜய் சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து, தமிழ்நாடு அரசு ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர்…

கிருஷ்ணகிரி தனியார் பள்ளி நிகழ்ச்சியில் இந்திய அணி கிரிக்கெட் வீரர் நடராஜன்
கிருஷ்ணகிரியில் அமைந்துள்ள நாளந்தா இண்டர்நேஷனல் பள்ளியில் 2025-26ம் ஆண்டிற்கான மாநில அளவிலான பள்ளி விளையாட்டு போட்டிகள் இன்று தொடங்கியது. இந்த விழாவில் இந்திய கிரிக்கெட் அணியின் வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியின் பிக்கிள் பால் மைதானத்தில் போட்டிகளை துவக்கினார். நடராஜன், மாணவர்களிடம் பேசிய பேச்சில், தன்னுடைய வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து, தேர்ந்தெடுக்கும் துறையில் மனமார்ந்த பற்று மிக முக்கியம் என தெரிவித்தார். “நான் இதுவரை நான்கு அறுவை சிகிச்சைகளை சந்தித்துவிட்டேன். இருப்பினும்,…

கல்லூரியில் பேராசிரியரை தாக்கிய 5 மாணவர்கள் கைது
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகாதேவி பகுதியில் உள்ள ஸ்காட் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு பயிலும் ஐந்து மாணவர்கள், ஒரு பேராசிரியரை தாக்கியதால் போலீசார் அவர்களை கைது செய்தனர். கல்லூரியில் கல்விச் சுற்றுலா நிகழ்வில், மாணவிகள் ஒருவர் பேராசிரியர் தவறாக நடந்து கொண்டதாக புகார் அளித்தார். இதனை தொடர்ந்து மாணவர்கள், கல்லூரி நிர்வாகம் செயல்படுவதாக கூறி, உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர். அதன்பின் சேக் முகமது மைதீன், வசந்த் ஸ்ரீதரன், சுஜின், முத்துராஜ் உள்ளிட்ட ஐந்து பேர் கல்லூரிக்குள் புகுந்து…

காரைக்கால் மீன்பிடி துறைமுகம் ரூ.136.17 கோடியில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம்-நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
காரைக்கால் மீன்பிடி துறைமுகம் இன்று 136.17 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் விரிவாக்கம் செய்யப்பட்டது. இந்த விரிவாக்க பணிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொளி மூலம் அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். 2012 ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட இந்த துறைமுகம், காரைக்காலில் உள்ள 11 மீனவ கிராமங்களைச் சேர்ந்த மீனவர்களுக்கு முக்கிய பயன்பாடாக உள்ளது. மீனவர்கள் தொடர்ந்து துறைமுகத்தை நவீன வசதிகளுடன் மேம்படுத்த கோரிக்கை விடுத்தனர். விரிவாக்க பணியில், மீன் பதப்படுத்தும் நிலையம், படகுகள் மூலம்…

பிரபல ரவுடி கொலையில் கைது செய்யப்பட்ட முத்து மீண்டும் கைது – பயங்கர ஆயுதங்களுடன் சிக்கினார்!
பிரபல ரவுடி ஐயப்பன் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளிவந்த ரவுடி முத்துவை, லாஸ்பேட்டை போலீசார் பயங்கர ஆயுதங்களுடன் கைது செய்து காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனர். புதுச்சேரி வானரபேட்டை பகுதியை சேர்ந்த ஐயப்பன், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலை அருகே கடத்தி சென்று கொலை செய்யப்பட்டார். அந்த வழக்கில் முத்து உள்ளிட்ட எட்டு பேரை போலீசார் கைது செய்திருந்தனர். சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த முத்து, கருவடிக்குப்பம் பகுதியில் சொகுசு காரில் ஆயுதங்களுடன் சுற்றியபோது,…

இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் தெரிவித்த எம்எல்ஏ சந்திர பிரியங்கா
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட காரைக்கால் மீனவர்களின் குடும்பங்களை கோட்டிச்சேரி தொகுதி எம்எல்ஏ சந்திர பிரியங்கா நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். காரைக்கால் கோட்டிச்சேரி மீனவ கிராமத்தைச் சேர்ந்த சிவராமனுக்கு சொந்தமான விசைப்படகில் மீன் பிடிக்கச் சென்ற 17 மீனவர்கள் இலங்கை கடற்படையால் துப்பாக்கி முனையில் கைது செய்யப்பட்டனர். இதற்கு முன்பு, அதே பகுதியில் பத்து நாட்களுக்கு முன்பும் 12 மீனவர்கள் கைது செய்யப்பட்டிருந்தனர். இந்நிலையில், கைது செய்யப்பட்ட மீனவர்களின் குடும்பங்களை சந்தித்த எம்எல்ஏ சந்திர பிரியங்கா,…

புதுச்சேரியில் கிராம உதவியாளர் மற்றும் எம்.டி.எஸ் உதவியாளருக்கான எழுத்து தேர்வு
புதுச்சேரியில் நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற உள்ள கிராம உதவியாளர் மற்றும் எம்.டி.எஸ் உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வுகளை முன்னிட்டு, மாவட்ட ஆட்சியர் குலோத்துங்கன் பல்வேறு தேர்வு மையங்களை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாகூர் கலைக் கல்லூரி, பாரதிதாசன் மகளிர் கல்லூரி, திருவள்ளுவர் அரசு பெண்கள் கல்லூரி, அன்னை சிவகாமி அரசு மேல்நிலைப்பள்ளி, ஜீவானந்தம் அரசு பள்ளி, பெத்தி செமினார், அமலோற்பவம் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட மையங்களில் நடைபெற்ற ஆய்வின் போது, தேர்வு மையங்களில் பொருத்தப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள், குடிநீர், மின்சாரம்,…

புதுச்சேரி தவளக்குப்பத்தில் மீன் வண்டிகளால் கழிவு நீர் பரவி அவதி
தவளக்குப்பம் பகுதியிலிருந்து கடலூர், புதுச்சேரி, மடுகரை உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் பிரதான சாலைகள் வழியாக பல மீன் ஏற்றுமதி வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலைப்பகுதியில் அரசு ஆரம்பப் பள்ளி, அறிவியல் கல்லூரி, கோயில் மற்றும் சிறு-குறு வியாபாரக் கடைகள் உள்ளதால், தினசரி நூற்றுக்கணக்கான பொதுமக்கள் இப்பாதையைப் பயன்படுத்துகின்றனர். இந்நிலையில், நல்லவாடு உள்ளிட்ட கடற்கரை பகுதிகளுக்கு செல்லும் 20 முதல் 30 மீன் வாகனங்களில் இருந்து மீன் கழிவு நீர் சாலையில் கசியுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் பள்ளிக்குச்…

புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்…
மத்திய அரசின் ஓய்வூதிய மசோதாவை கண்டித்து, அதனை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என புதுச்சேரி ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மத்திய அரசு ஓய்வூதியர்களுக்கு எதிரான ஓய்வூதியத் திருத்த சட்டத்தை ரத்து செய்ய வேண்டும், 8-வது ஊதியக்குழுவுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களை நியமிக்க வேண்டும், மேலும் குழுவின் வரம்பு குறிப்பை உடனடியாக அறிவிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். புதுச்சேரி சுதேசி பஞ்சாலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் 50க்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்கள் கலந்து கொண்டு…

பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிக்கை…
சாதியை சட்டம் மூலம் ஒழிக்க முயற்சி வேண்டாம்; சமூகநீதி வழியே சமத்துவத்தை உருவாக்க நடவடிக்கை எடுங்கள். பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் சமூகநீதியை முன்னிறுத்தாமல் சாதி ஒழிப்பு ஏற்பட முடியாது என கோரிக்கை விடுத்துள்ளார். கொள்கை அறிவிப்புகளாக அல்லது தெரு பெயர்கள் மாற்றம் போன்ற நாடகமாதிரியாகக் காரியங்கள் நடத்துவதை அவர் கண்டித்தார்; சாதியை நீக்குவதற்கு உண்மையான தீர்வு சமத்துவம் உருவாக்கும் நீடிக்கமான செயல்திட்டங்கள் என்று தெரிவித்துள்ளார். பிற்படுத்தப்பட்டவர்களின் நிலையை உயர்த்தும் விதத்தில் சாதிவாரி மக்கள் தொகை…

காஞ்சிபுரத்தில் தயாரிக்கப்பட்ட இருமல் மருந்து 20 குழந்தைகளின் உயிரை பரித்துள்ளது – சீமான் கண்டனம்
காஞ்சிபுரத்தில் இயங்கும் தனியார் மருந்து நிறுவனம் ஸ்ரீ சான் பார்மாவின் ‘Coldrif’ இருமல் மருந்து, தொழிற்சாலைகளில் பயன்படுத்தப்படும் ப்ரோப்பிலீன் கிளைகால் (Propylene Glycol) அளவை மீறி சேர்க்கப்பட்டதால் 20 பிஞ்சுக் குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்தது. இதன் பின்னர் நிறுவனர் ரங்கநாதன் கோவிந்தன் மத்திய பிரதேச காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாடு மருந்து கட்டுப்பாட்டு இயக்ககம் மேற்கொண்ட ஆய்வில், கடந்த 14 ஆண்டுகளில் அந்த நிறுவனத்தில் எந்த சோதனையும் நடத்தப்படவில்லை, மொத்தம் 364 விதிமீறல்கள் இருந்தது என்பது…

சீனாவுக்கு மேலும் 100% வரி: அதிரடி அறிவிப்பு – டிரம்ப்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சீனாவுக்கு எதிராக வர்த்தகப்போரில் புதிய கட்டத்தை தொடங்கியுள்ளார். வரும் நவம்பர் 1ம் தேதி முதல் சீனாவுக்கு மேலும் 100 சதவீதம் வரி விதிக்கப்படவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். டிரம்ப் தனது அறிக்கையில், “சீனா உலக வர்த்தகத்தில் ஆக்கிரமிப்பு நிலைப்பாட்டை எடுத்துள்ளது. இதனால் அனைத்து நாடுகளும் பாதிக்கப்படுகின்றன. எனவே சீனாவில் தயாரிக்கப்படும் ஒவ்வொரு பொருளுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும். அதோடு முக்கியமான மென்பொருட்களிலும் ஏற்றுமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும்,” என்று கூறியுள்ளார். ஏற்கனவே சீன பொருட்களுக்கு…

புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு ரூ.7,000 தீபாவளி போனஸ் அறிவிப்பு
புதுச்சேரி அரசு தனது ஊழியர்களுக்கு தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மகிழ்ச்சியான செய்தியை அறிவித்துள்ளது. புதுச்சேரி அரசில் பணிபுரியும் குரூப் ‘பி’ மற்றும் ‘சி’ பிரிவு ஊழியர்களுக்கு ரூ.7,000 போனஸ் வழங்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இத்தகவலை புதுச்சேரி அரசின் நிதித்துறை சார்பு செயலர் சிவக்குமார் உத்தரவு வெளியிட்டுள்ளார். இதன் அடிப்படையில், அரசு ஊழியர்களுக்கு கைக்கு கிடைக்கும் தொகை ரூ.6,908 என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், குறைந்தது மூன்று ஆண்டுகள் மற்றும் அதற்கு மேல் அரசு பணியில் தொடர்ந்து பணியாற்றியவர்கள் மட்டுமே…

புதுச்சேரியில் ஹெலிகாப்டர் இன்ப சுற்றுலா தொடக்கம் – வானில் பறந்து புதுவையின் பசுமை அழகை ரசிக்கும் புதிய அனுபவம்
புதுச்சேரி சுற்றுலா துறை, உலகம் முழுவதும் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் நோக்கில் பல்வேறு புதிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, புதுவையின் இயற்கை அழகை வானில் இருந்து கண்டு ரசிக்க ஹெலிகாப்டர் இன்ப சுற்றுலா திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் துவக்க விழாவில் சட்டமன்ற உறுப்பினர் அனிபால் கென்னடி கலந்து கொண்டு ஹெலிகாப்டர் பயணத்தை தொடங்கி வைத்தார். சுமார் 20 நிமிடங்கள் நீடிக்கும் இந்த ஹெலிகாப்டர் சுற்றுலா பயணத்தில் புதுச்சேரியின் முக்கிய…

பாலியல் புகாரில் நியாயமான விசாரணை நடத்த வேண்டும் – மாணவர்கள் மீது நடவடிக்கை கண்டித்து எதிர்க்கட்சித் தலைவர் சிவா பேச்சு
காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள் மீது சுமத்தப்பட்டுள்ள பாலியல் புகாருக்கு நியாயமான விசாரணை நடத்த வேண்டுமென மாணவர்கள் ஜனநாயக முறையில் போராட்டம் நடத்தினர். அந்த போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தி, கைது செய்து வழக்கு பதிவு செய்தது கண்டிக்கத்தக்கது என புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சிவா தெரிவித்துள்ளார். “மாணவர்கள் தங்கள் உரிமைக்காக அமைதியான முறையில் குரல் கொடுத்துள்ளனர். அவர்களை தாக்கி, வழக்குப்பதிவு செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது. மாணவர்கள்மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகளை…

கைது செய்யப்பட்டுள்ள மாணவர்களை பாதுகாப்பாகவும், விரைவாகவும் விடுவிக்க பல்கலைக்கழக நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருகிறது-புதுவை பல்கலைக்கழகம் அறிக்கை.
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் பல்கலைக்கழக நிர்வாகக் கட்டிடத்தை நோக்கி எதிர்ப்பு பேரணியில் புறப்பட்டனர். பிற்பகல் 2.45 மணியளவில் தொடங்கி, 3.10 மணியளவில் கட்டிடத்தை அடைந்த மாணவர்கள் சிலர் கட்டிடத்தின் பக்கவாட்டு வாயில்களூடாக நுழைந்தனர். நிர்வாகம் மற்றும் சிறப்பு காவல் அதிகாரிகள் மாணவர்களை அமைதியாக வெளியே அழைத்து, கட்டிடத்திற்கு வெளியே போராட்டத்தை தொடருமாறு கேட்டனர். ஆனால் மாணவர்கள் கோரிக்கையை ஏற்காமல், உள்ளே போராட்டத்தை தொடர்ந்தனர். 100 மீட்டர் உள்ளகப் பிரதேசத்தில் எந்தவித போராட்டங்களிலும் ஈடுபடாதிருப்பது குறித்த உயர்நீதிமன்ற…

புதுச்சேரியில் பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரம் காவல்துறையினரை மிரட்டும் வீடியோ வைரல்!
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவாக, தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் காவல் நிலையத்தில் காவல்துறை அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், “இது என் லிமிட்… நான்தான் எம்எல்ஏ… உங்களை தொலைத்து விடுவேன். போலீஸ் உங்கள் வேலையை மட்டும் பாருங்கள்… குற்றவாளிகளுக்கு ராஜமரியாதை தருகிறீர்கள், மாணவர்களை மிதிக்கிறீர்கள்” என கடுமையாக எச்சரிக்கும் காட்சி பதிவாகியுள்ளது. இதற்குமுன், காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில்…

புதுச்சேரி பல்கலைக்கழக மாணவர்கள் கைதை கண்டித்து லாஸ்பேட்டையில் மாணவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட நடவடிக்கையை கண்டித்து, லாஸ்பேட்டையில் உள்ள புதுச்சேரி பல்கலைக்கழக சமூதாய கல்லூரி மாணவர்கள் இன்று கல்லூரி வாயிலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் தங்களது கைகளில் பதாகைகள் ஏந்தி, “மாணவர் ஒற்றுமை வாழ்க”, “அரசியல் பழிவாங்கல் ஒழியட்டும்”, “மாணவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” எனக் கோஷங்களை எழுப்பினர். மாணவர்களை ஆதரித்து பல சமூக அமைப்புகளும், மாணவர் இயக்கங்களும் கல்லூரி முன்பு ஒன்று கூடி தங்களது ஒற்றுமையை வெளிப்படுத்தினர். கைது செய்யப்பட்ட மாணவர்கள்…

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்கள் மீதான நடவடிக்கைக்கு எதிர்ப்பு – சிபிஎம், திமுக, விசிகவினர் கலைவாணனுடன் IPS சந்திப்பு
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக கூறப்படும் பேராசிரியர் மாதவய்யா மீது நடவடிக்கை கோரி மாணவர்கள் நேற்று நடத்திய போராட்டத்தின் போது, போலீசார் மாணவர்களை தாக்கிய சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலை கண்டித்து, சிபிஎம், திமுக, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகிய கட்சிகள் இணைந்து இன்று காலை முதுநிலை காவல் கண்காணிப்பாளர் கலைவாணன் IPS அவர்களைச் சந்தித்து மனு அளித்தனர். மாணவர்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு எதிராக எந்தவித சட்ட நடவடிக்கையும்…

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரி JCM மக்கள் மன்றம் போராட்டம்!
புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவர்கள் மீது நடைபெற்ற காவல் துறை நடவடிக்கைக்கு எதிராக JCM மக்கள் மன்றம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. காலாப்பட்டு காவல் நிலையம் முன், JCM மக்கள் மன்ற தலைவர் ரீகன் ஜான்குமார் தலைமையில் நிர்வாகிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர்கள் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர் கடந்த சில நாட்களாக பல்கலைக்கழகத்தில் பாலியல் புகார்கள் குறித்து விவாதம் நிலவி வருகிறது. இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்…

மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு பேரணி – 100க்கும் மேற்பட்ட செவிலியர் கல்லூரி மாணவ மாணவிகள் பங்கேற்பு
புதுச்சேரி : அக்டோபர் மாதம் மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதம் எனக் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனை முன்னிட்டு புதுச்சேரியில் பல்வேறு அமைப்புகள் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, 100க்கும் மேற்பட்ட தனியார் செவிலியர் கல்லூரிகளை சேர்ந்த மாணவ, மாணவிகள் இணைந்து விழிப்புணர்வு பேரணியில் பங்கேற்றனர். “புற்றுநோயை விட நம்பிக்கை பெரியது, பெண்களின் வலிமை அதைவிட பெரியது, ஒவ்வொரு பெண்ணும் விழிப்புணர்வுடன் இருக்கட்டும், புற்றுநோய் இல்லா உலகம் நமது ஆகட்டும்” போன்ற வாசகங்கள் இடம் பெற்ற…

புதுச்சேரியில் தொடர் செயின் பறிப்பு – மகாராஷ்டிரா கொள்ளையன் உள்ளிட்ட 3 பேர் கைது!
புதுச்சேரி : புதுச்சேரி முழுவதும் பெண்களிடம் தொடர் செயின் பறிப்பு வழக்கில் ஈடுபட்ட மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த பிரபல வழிப்பறி கொள்ளையன் உட்பட மூவர் போலீசாரால் கைது செய்யப்பட்டனர். முதலியார்பேட்டை, ஜான்பால் நகர், மூலக்குளம் பகுதிகளில் கடந்த சில நாட்களில் மூன்று பெண்களிடம் தங்கச் செயின்கள் பறிக்கப்பட்டன. இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், பி.ஒய்–01–சிடி–6689 என்ற எண்ணிலான பைக்கில் ஒரே நபர் மூன்றும் இடங்களிலும் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அந்த…

புதுச்சேரி மத்திய பல்கலைக்கழகத்தில் பாலியல் குற்றச்சாட்டை முன்வைத்து போராடிய மாணவர்கள் மீது தடியடி! 24 மாணவர்கள் கைது!
புதுச்சேரி காலாப்பட்டு மத்திய பல்கலைக்கழகத்தில் மாணவிகளின் பாலியல் குற்றச்சாட்டுகளை நிர்வாகம் மூடி மறைப்பதாக குற்றம்சாட்டி, பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், நள்ளிரவில் போலீசார் தடியடி நடத்தி மாணவர்களை கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு, காரைக்கால் கிளையில் படிக்கும் மாணவி ஒருவர் அழுதபடி அளித்த ஆடியோ இணையத்தில் வைரலானது. அதில், துறை சார்ந்த பேராசிரியர் ஒருவர் ஆபாசமாகப் பேசுவதோடு, நிர்வாண புகைப்படங்களை அனுப்புமாறு வற்புறுத்தியதாகவும், மறுத்தால் இன்டெர்னல்…

புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினர் A.K.சாய் சரவணன் குமார் கருத்துக்கு எதிராக JAACT அமைப்பினர் மனு
புதுச்சேரி யூனியன் பிரதேச காவல்துறை குறித்து சட்டமன்ற உறுப்பினராக உள்ள A.K. சாய் சரவணன் குமார் தெரிவித்த கருத்துக்கு எதிராக, “காவல் சித்திரவதைக்கு எதிரான கூட்டு இயக்கம் – தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி (JAACT)” அமைப்பினர் அதிகாரிகளிடம் மனு அளித்துள்ளனர். அமைப்பினர் தெரிவித்ததாவது: “7.10.2025 அன்று புதுச்சேரி சட்டமன்றத்தில் பேசியபோது, காவல்துறை சில நேரங்களில் சட்டத்திற்குப்புறம்பாக ‘என்கவுண்டர் (extra judicial killing)’ செய்ய வேண்டி வரும் என சாய் சரவணன் குமார்கூறியிருப்பது மிகுந்த வருத்தத்திற்குரியது. இத்தகைய கருத்துகள்…

காரைக்கால் மீனவர்கள் 17 பேர் இலங்கை கடற்படையால் கைது!
காரைக்கால், அக்டோபர் 09 :காரைக்கால் மாவட்டம் கோட்டுச்சேரிமேடு கிராமத்தைச் சேர்ந்த சிவராமனுக்கு சொந்தமான மீன்பிடி விசைப்படகில் முருகானந்தம், செல்வகுமார், ராஜேஷ், ராஜேஷ், குணசேகர், ஞானவேல் மற்றும் 17 மீனவர்கள் கடந்த 7ஆம் தேதி கடலில் மீன் பிடிக்க சென்றனர். அதிகாலை விசைப்படகு தென்கிழக்கு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது, படகு பழுதடைந்தது. பழுது நீக்கும் பணியை மேற்கொண்டபோது இலங்கை கடற்படையினர் திடீரென வந்து 17 மீனவர்களையும் விசைப்படகையும் கைப்பற்றினர். கைது செய்யப்பட்ட மீனவர்களையும் விசைப்படகையும் உடனடியாக மீட்டு…

புதுச்சேரி பொதுப்பணித்துறை பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் மீண்டும் பணி வழங்கக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம்!
புதுச்சேரியில் கடந்த 2016-ஆம் ஆண்டு பொதுப்பணித்துறையில் (PWD) 2,642 பேர் தற்காலிக அடிப்படையில் பணியில் அமர்த்தப்பட்டனர். ஆனால், தேர்தல் நடத்தை விதிமுறை அமலில் இருந்ததால், தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி இவர்களின் நியமனம் ரத்து செய்யப்பட்டது. அதன் பின்னர், பணிநீக்கம் செய்யப்பட்ட இந்த ஊழியர்கள் கடந்த எட்டு ஆண்டுகளாக மீண்டும் பணி வழங்கக் கோரி பல கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சமீபத்தில் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில், முதலமைச்சர் ரங்கசாமி, பணிநீக்கம் செய்யப்பட்ட 2,642 பேருக்கும் மீண்டும் பணி…

சிபிசிஐடி பிரிவில் காவலர்கள் பற்றாக்குறை — முக்கிய வழக்குகள் கிடப்பில்!
புதுச்சேரி காவல்துறையின் சிபிசிஐடி பிரிவில் தற்போது போலி ஆவணங்கள், கள்ளநோட்டு, ஆயுத கடத்தல், போலி நிதி நிறுவனம் மோசடி உள்ளிட்ட பல்வேறு முக்கிய வழக்குகள் விசாரணையில் உள்ளன. மேலும், பல மாதங்களாக நிலுவையில் உள்ள வழக்குகளையும் சிபிசிஐடி விசாரித்து வருகிறது. ஆனால், காவலர்கள் பற்றாக்குறை காரணமாக பல முக்கிய வழக்குகள் தாமதமாகின்றன. தற்போது சிபிசிஐடி பிரிவில் சுமார் 30 காவலர்கள் மட்டுமே பணியாற்றி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. சில வழக்குகளில் குற்றவாளிகளை பிடிக்க 10 பேர் கொண்ட குழு…

தீபாவளிக்கு ரூ.570 மதிப்பிலான இலவச மளிகை தொகுப்பு வழங்கப்படும் – புதுச்சேரி முதல்வர் முதல்வர் ரங்கசாமி
புதுச்சேரி, அக்டோபர் 09:
நெட்டப்பாக்கம் தொகுதியில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி அவர் கூறியது, “கடந்த கால ஆட்சியில் எந்தவொரு வளர்ச்சி பணியும் நடைபெறவில்லை. 10 ஆண்டுகள் மாநில வளர்ச்சி பின்னோக்கி சென்றது. உள்கட்டமைப்பை மேம்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கல்வி நிதி உதவி, வீடுகட்டும் திட்டம் உள்ளிட்டவை செயல்படுத்தப்படவில்லை. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணி அரசு பொறுப்பேற்று பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த அரசு சொன்னதையும், சொல்லாததையும் செய்யும் அரசாக உள்ளது” என தெரிவித்துள்ளார்.
வரும் 10ஆம் தேதிக்கு மேல் இலவச அரிசி, கோதுமை மற்றும் விடுபட்ட இரண்டு மாதங்களுக்கான இலவச அரிசியையும் வழங்கப்படும்
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, குடும்ப அட்டைதாரர்களுக்கு எண்ணெய், ரவை, சர்க்கரை உள்ளிட்ட ரூ.570 மதிப்பிலான மளிகை தொகுப்பு வழங்கப்படும் என அவர் கூறியுள்ளார்.

புதுச்சேரியில் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்காததால், நூற்றாண்டு கண்ட அரசு உதவி பெறும் ….
புதுச்சேரியில் ஆசிரியர்கள், ஊழியர்களுக்கு கல்வித்துறை சம்பளம் வழங்காததால், நூற்றாண்டு கண்ட அரசு உதவி பெறும் சொசியத்தே புரோகிரேசீஸ்த் பள்ளியை பிரெஞ்சு ரெஸ்டாரண்டிற்கு வாடகை விட்ட கொடுமை புதுச்சேரியில் அரங்கேறி உள்ளது. புதுச்சேரியை ஆண்ட பிரெஞ்சு ஆட்சியர் காலத்தில் துவங்கப்பட்ட பள்ளிகளில், கிறிஸ்தவ, ஆங்கிலோ இந்தியன் மற்றும் பிரெஞ்சுக்காரர்களின் குழந்தைகளுக்கு கல்வி போதிக்கப்பட்டது. இந்து மாணவர்களுக்கு அனுமதி வழங்கவில்லை. அதனைக் கண்ட அப்போதைய பொன்னு முருகேசப் பிள்ளை தலைமையில் 20 இந்து இளைஞர்கள் 1880ம் ஆண்டு பொது தொண்டு…

உறுதியானது விஜய்யின் பிரசார இடங்கள்… தடபுடலாக ரெடியாகும் நாமக்கல், கரூர்
தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி, நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் நடைபெறவுள்ள இடங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்ட பிரச்சாரங்களை…

இளையராஜா பாடல்கள் விவகாரம்… சோனி நிறுவனத்திற்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு…
இசையமைப்பாளர் இளையராஜாவின் பாடல்களை பயன்படுத்தியதன் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் விவரங்களை தாக்கல் செய்ய சோனி நிறுவனத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இசையமைப்பாளர் இளையராஜா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் புதிய மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தான் இசையமைத்த பாடல்களை தனது அனுமதி பெறாமல் சோனி நிறுவனம் பயன்படுத்தி வருவதோடு பாடல்களை மாற்றி அமைப்பதாகவும் மனுவில் கூறியுள்ளார். மேலும், யூ ட்யூப் உள்ளிட்ட தளங்களில் பயன்படுத்தியதன் மூலம் சோனி நிறுவனம் வணிக ரீதியாக பலனடைந்ததாகவும்…

கழிவுநீர் கலந்த குடிநீரால் உயிரிழந்த குடும்பத்திற்கு ஜோஸ் சார்லஸ் மார்டின் நிதியுதவி
புதுச்சேரியில் மாசடைந்த குடிநீரை குடித்ததால் உயிழந்த 2 குடும்பத்தினருக்கு, சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி தலா ரூ.1 லட்சம் உதவித் தொகையை வழங்கினார். கடந்த சில தினங்களுக்கு முன்பு புதுச்சேரி உருளையன்பேட்டை நேரு நகர், கோவிந்தசாலை பகுதிகளிலும், நெல்லித்தோப்பு தொகுதி சக்தி நகர், பிள்ளைதோட்டம், பெரியார் நகர், காமராஜர் நகர் தொகுதி சாரம், ஜீவா நகர், கவிக்குயில் நகர் போன்ற பகுதிகளில் அசுத்தமான குடிநீரை பொதுமக்கள் பருகி உள்ளனர். இதில்…

பிரசார அட்டவணையில் திடீர் மாற்றம்! – தவெக தலைவர் விஜய் அதிரடி முடிவு
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், தான் மேற்கொள்ளும் மக்களை நேரடியாக சந்திக்கும் பிரசார சுற்றுப்பயண அட்டவணையில் சில மாற்றங்களை செய்துள்ளார். தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்ட பிரச்சாரங்களை…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ மாற்றியது ஏன்? – நீதிபதி விளக்கம்
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கின் விசாரணையை சிபிஐ மாற்றியது ஏன் என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி பி.வேல்முருகன் விளக்கம் அளித்துள்ளார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை 5ஆம் தேதி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் இதுவரை 27 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் உள்ளது. இந்நிலையில் இந்த வழக்கின் விசாரணையை சிபிஐ-க்கு மாற்றக் கோரி,…

தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறை… தேர்தல் ஆணையம் சுற்றறிக்கை
வாக்காளர் பட்டியலில் குளறுபடிகள் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி உள்ள நிலையில், தபால் வாக்குகள் எண்ணுவதில் புதிய நடைமுறையை தேர்தல் ஆணையம் பரிந்துரைத்து உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கா்நாடகத்தில் நடைபெற்ற 2024ஆம் ஆண்டு மக்களவைத் தோ்தலில் வாக்காளா் பட்டியல் சட்ட விரோதமாக திருத்தப்பட்டதாகவும், இதன்மூலம் வாக்குகள் திருடப்பட்டதாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார். அதேபோல, பீகாரில் நடைபெற்ற சிறப்பு தீவிர திருத்தத்தில் வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாகவும் ராகுல்காந்தி குற்றம்சாடினார். இதனையடுத்து, எதிர்க்கட்சிகள்…

இந்தியாவுடன் இறுதிப்போட்டியில் மோதப்போவது யார்? – பாகிஸ்தானுக்கு வாழ்வா, சாவா போட்டி
ஆசியக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடரில் இன்று பாகிஸ்தான் அணியும், வங்கதேசம் அணியும் மோதவுள்ளன. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. இந்நிலையில் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற ஆசியக்கோப்பை ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணியும், வங்கதேசம் அணியும் மோதின. முதல் போட்டியில் இலங்கை அணியை, வங்கதேசம் அணி வீழ்த்தி இருந்தது. கடந்த…

இலவச மதுபாட்டில் கேட்டு தகராறு – பெட்ரோல் குண்டு வீசுவோம் என மிரட்டிய ரவுடி கும்பல்
புதுச்சேரியில் இலவச மதுபாட்டில்கள் கேட்டு, ஊழியரை மிரட்டிய ரவுடி கும்பலை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். புதுச்சேரி அரியூர் பகுதியில் இயங்கி வந்த தனியார் மதுபான கடையில், ரவுடிகள் சிலர் தங்களுக்கு இலவசமாக மதுபானம் கேட்டு மிரட்டியுள்ளனர். அப்போது கடை ஊழியர், மதுபானம் தர மறுத்துள்ளார். இதனையடுத்து அந்த ரவுடிகள் கடை மீது, பெட்ரோல் குண்டுகளை வீசிவிடுவோம் என மிரட்டியுள்ளனர். மேலும், மதுபான கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை உடைத்து சேதப்படுத்தி உள்ளனர். இது தொடர்பான வீடியோ…

அபிஷேக் சர்மா அபாரம்; 41 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் தோல்வி – ஃபைனலுக்கு சென்ற இந்தியா
வங்கதேசம் அணிக்கு எதிரான ஆசியக்கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இந்திய அணி 41 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. 17ஆவது ஆசியக்கோப்பை போட்டிகள் கடந்த செப்டம்பர் 09ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. லீக் போட்டிகள் முடிவில் இந்தியா, பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகள் தகுதிபெற்றன. முதல் போட்டியில் இலங்கை அணியை வங்கதேசம் அணி வீழ்த்தி இருந்தது. இந்நிலையில் நேற்று புதன்கிழமை (செப்டம்பர் 24) நடைபெற்ற ஆசியக்கோப்பை ‘சூப்பர் 4’…

இன்ஸ்டாகிராமிலும் உச்சத்தை தொட்ட தவெக தலைவர்! – அரசியல்வாதிகளில் விஜய் முதலிடம்
சமூக வலைதளங்களில் அதிக பின் தொடர்பவர்களை கொண்ட தமிழக அரசியல்வாதியாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் உள்ளார். இன்றைய கணினி யுகத்தில் சமூக வலைதளங்களை பயன்படுத்தாமல் இருப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம். அந்த அளவிற்கு, பொதுமக்களின் அங்கமாக சமூக வலைதளங்கள் மாறிவிட்டன. தூங்கி விழிப்பதில் தொடங்கி, தூக்கம் தொலைக்கும் ஒரு கருவியாக மனித வாழ்வை ஆக்கிரமித்துவிட்டன. குறிப்பாக சமூக வலைங்களில் திரைப் பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள், நட்சத்திரங்கள் தொடங்கி எளிய ஜனங்கள் முதற்கொண்டு சமூக வலைதளங்களில் தங்களது…

வணிகர்கள் உரிமை மாநாடு: சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் பங்கேற்பு
புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாட்டில் சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். புதுச்சேரி வணிகர்கள் கூட்டமைப்பு சார்பில் வணிகர்கள் உரிமை மாநாடு சுகன்யா கன்வென்ஷன் சென்டரில் நேற்று செவ்வாய்கிழமை (23-09-25) மாலை நடக்கிறது. மாநாட்டுக்கு புதுவை வணிகர் கூட்டமைப்பு தலைவர் சிவசங்கர் எம்.எல்.ஏ., தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினராக சமூக சேவகர் ஜோஸ் சார்லஸ் மார்டின் கலந்து கொண்டார். அங்காளன் எம்.எல்.ஏ., வில்லியம் ரீகன் ஜான்குமார், புதுவை வணிகர்கள்…

தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது – உல்லாசத்தில் ஈடுபட்டது அம்பலம்
ஆரோவில் அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், 9 இருசக்கர வாகனங்கள் மற்றும் சொகுசு காரை போலீஸார் பறிமுதல் செய்தனர். புதுச்சேரி காவல்துறையில் ‘ஆபரேஷன் திரிசூலம்’ என்ற திட்டம் மாநிலம் முழுவதும் குற்ற சம்பவங்களை குறைக்கவும், ரவுடிகளை கட்டுப்படுத்துவதற்கும் தொடங்கப்பட்டது. அதன்படி, ரௌடிகளின் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கும், அவர்கள் வீட்டில் ஆயுதங்கள் அல்லது வெடி பொருட்கள் ஏதேனும் பதுக்கி வைத்துள்ளார்களா என்பதை ஆராய்வதற்கும் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. புதுச்சேரி முழுவதும்…

சிறப்பு மிகு நவராத்திரி விழா! – வீடுகளில் கொலு வைத்து கிராம மக்கள் வழிபாடு
புதுச்சேரி நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பலரும் நவராத்திரியை முன்னிட்டு வீடுகளில் கொலு வைத்து வழிபட்டு வருகின்றனர். இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான நவராத்திரி விழா ஆண்டுதோறும் புரட்டாசி மாதம் அமாவாசைக்கு மறுநாள் தொடங்கி 9 நாட்கள் கொண்டாடப்படுகிறது. விழாவில் முதல் 3 நாட்கள் துர்க்கையை வேண்டியும், அடுத்த 3 நாட்கள் லட்சுமியை வேண்டியும், கடைசி 3 நாட்கள் சரஸ்வதியை போற்றியும் பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டின் நவராத்திரி விழா…

மாசு கலந்த குடிநீர் விநியோகம்; காங். தர்ணா போராட்டம் – துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் பரபரப்பு
புதுச்சேரியில் மாசு கலந்த குடிநீர் விநியோகத்தை கண்டித்து முன்னாள் முதல்வர் நாராயணசாமி தலைமையில் காங்கிரஸ் நிர்வாகிகள் துணைநிலை ஆளுநர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தி வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதுச்சேரியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு, நெல்லித்தோப்பு உருளையன்பேட்டை பகுதிகளில் மாசு கலந்த குடிநீர் விநியோகம் செய்யப்பட்டது. இந்த அசுத்த குடிநீரை குடித்த 6 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் புதுச்சேரியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தது. இதற்கிடையே நேற்று நெல்லித்தோப்பு பகுதிகளில் கான்வென்ட் வீதி, பள்ளிவாசல்…

வாங்கிய கடனுக்கு பதில் அளிக்காத ரவி மோகன்… வீட்டில் நோட்டீஸ் ஒட்டிய அதிகாரிகள்…
நடிகர் ரவி மோகனின் ஈசிஆர் சொகுசு பங்களா வீட்டிற்கு வாங்கிய கடனை முறையாக செலுத்தாததால் தனியார் வங்கி அதிகாரிகள் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டியுள்ளனர். சென்னை ஈசிஆர் ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள நடிகர் ரவி மோகனின் சொகுசு பங்களா வீட்டை (ICICI BANK) தனியார் வாங்கி கடனில் வாங்கியுள்ளார். கடந்த 11 மாதங்களாக கடன் தொகையை ரவி மோகன் செலுத்தாததால் வங்கி நிர்வாகம் சார்பில் மூன்று அதிகாரிகள் ரவி மோகன் வீட்டில் அறிவிப்பு நோட்டீஸ் ஒட்டினர். ரவி மோகன் மீது…

தோல்வியை சந்திக்காத இந்திய அணிக்கு சவால் அளிக்குமா வங்கதேசம்?
ஆசியக்கோப்பை டி20 தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றில் இன்று இந்திய அணியும் வங்கதேசம் அணியும் பலப்பரீட்சை நடத்த உள்ளது. ஆசியக்கோப்பை தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகள் அனைத்திலும், தோல்வியை தழுவாமல் வெற்றி நடைபோட்டு வருகிறது இந்திய அணி. லீக் சுற்றில் ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் மற்றும் ஓமன் அணியை வீழ்த்தி இருந்தது. அதேபோல், சூப்பர் 4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தானையும் துவம்சம் செய்தது. இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா தனது அபார…

வெள்ளவாரி வாய்க்காலை தூர்வாரி சீரமைத்து கொடுத்த ஜே.சி.எம். மக்கள் மன்றம் – பொதுமக்கள் நன்றி
காமராஜர் நகர் தொகுதியில் கழிவுநீர் நிறைந்த வெள்ளவாரி வாய்க்காலை, ஜே.சி.எம். மக்கள் மன்றம் தூர்வாரி சீரமைத்து கொடுத்துள்ளது. புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதிக்கு உட்பட்ட சங்கரதாஸ் சுவாமிகள் நகர், தேவகி நகர் வழியாக வெள்ளவாரி வாய்க்கால் செல்கிறது. கருவடிக்குப்பம் வெள்ளவாரி வாய்க்காலில் குப்பை மற்றும் பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி குவிந்து கிடக்கிறது. இதனால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசி, சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. அதேபோல், காமராஜர் சாலை உப்பனாறு வாய்க்காலிலும் குப்பை கழிவுகள் தேங்கியுள்ளன. உப்பனாறு வாய்க்கால் மேம்பாலத்தை…

முதலமைச்சர் ஸ்டாலின் தொகுதியில் போலி வாக்காளர்கள் – நயினார் நாகேந்திரன் அதிரடி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் தொகுதியான கொளத்தூர் தொகுதியில், நிறைய போலி வாக்காளர்களை சேர்த்து உள்ளனர் என்று பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டி உள்ளார். மறைந்த மூத்த நடிகர் எம்.ஆர்.ராதாவின் துணைவியாரும், நடிகை மற்றும் பாஜக தலைவருமான ராதிகா சரத்குமாரின் தாயாருமான கீதா ராதாவின் மறைவையொட்டி தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், சரத்குமார் மற்றும் ராதிகா சரத்குமார் ஆகியோருக்கு ஆறுதல் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நயினார் நாகேந்திரன், “திரை உலகில் எத்தனை பேர்…

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் மீதான தடை நீக்கம்… 19 பேர் பலிக்கு பின் அரசு அதிரடி முடிவு
அரசுக்கு எதிராக போராட்டத்தில் குதித்தவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 19 பேர் மரணமடைந்ததை அடுத்து, வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதித்த தடையை அரசு திரும்பப் பெற்றுள்ளது. நேபாளத்தில் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், வாட்ஸ்ஆப், யூடியூப் உள்ளிட்ட 26 சமூக வலைத்தளங்களுக்கு அந்நாட்டு அரசாங்கம் தடை விதித்துள்ளது. முறைகேடுகளை தடுக்கவும், தேவையற்ற உள்ளீடுகளை தடுப்பதற்காகவும் புதிய விதிமுறைகளை அரசாங்கம் அமல்படுத்தியது. மேலும், பாதிக்கப்பட்ட நிறுவனங்கள் மீண்டும் புதுப்பித்துக் கொள்ள 7 நாட்கள் அவகாசம் வழங்கியது. இதனை…

ஆன்லைன் பட்டாசு விளம்பரங்களை நம்பி ஏமாற வேண்டாம் – போலீஸார் எச்சரிக்கை!
ஆன்லைனில் வெளியாகும் பட்டாசு விளம்பரங்களை நம்பி, பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்று புதுச்சேரி சைபர் கிரைம் போலீஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். தற்போதைய இணைய யுகத்தில், சீப்பு, சோப்பு முதல் மொபைல் போன்கள், லேப்டாப் உள்ளிட்ட விலையுயர்ந்த பொருட்கள் வரை ஆன்லைனில் வாங்கும் பழக்கம் நாளுக்கு நாள் பொதுமக்களிடையே பெருகி வருகிறது. அதிலும், குறிப்பாக பண்டிகை காலங்களில் வீட்டில் இருந்தே பொருட்களை வாங்க பொதுமக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். ஆனால், அதில் பலரும் ஏமாற்றம் அடைந்த பின்பு, காவல்துறையினரை நாடிச்…

பேராசிரியர்களுக்கு பதவி, சம்பள உயர்வு வழங்கப்படவில்லை – ஜோஸ் சார்லஸ் மார்டின் அதிருப்தி
பேராசிரியர்களுக்கு நீண்ட காலமாக தரப்பட வேண்டிய பதவி மற்றும் சம்பள உயர்வுகள் வழங்கப்படாதது அதிருப்தியைத் தருகிறது என்று சமூக ஆர்வலர் ஜோஸ் சார்லஸ் மார்டின் தெரிவித்துள்ளார். இது குறித்து ஜோஸ் சார்லஸ் மார்டின் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “புதுச்சேரி அரசு கல்லூரிகளில் மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் பணியமர்த்தப்பட்டு 20 ஆண்டுகளுக்கும் மேல் பணிபுரியும், பேராசிரியர்களுக்கு நீண்ட காலமாக தரப்பட வேண்டிய பதவி மற்றும் சம்பள உயர்வுகள் வழங்கப்படாதது அதிருப்தியைத் தருகிறது. இது மாணவர்களுக்கான கல்வியின் தரத்தைப் பாதிக்கும்…

ஆவின் பொருள்களின் விலை குறைப்பா? திமுக அரசின் திருட்டுத்தனம் – அன்புமணி கண்டனம்
திமுக அரசின் கீழ் செயல்படும் ஆவின் நிறுவனம் நடத்தும் விலை குறைப்பு போன்ற நாடகங்கள் அப்பட்டமான திருட்டுத்தனம் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி (03-09-25) புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்ட…

அதிமுகவுக்கு கூட இவ்வளவு நிபந்தனைகள் இல்லை… விஜய்க்கு ஆதரவாக முக்கிய கட்சி மனு
பிரதான எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு இவ்வளவு கடுமையான நிபந்தனைகளை விதிக்காத அரசு, விஜய்க்கு விதிக்கிறது என்று தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று…

புதிய சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்பு – சுயேட்சை எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கைது
புதுச்சேரியின் பாகூர் பகுதியிலுள்ள சேலியமேடு கிராமத்தில் புதிய சுங்கச்சாவடி அமைக்க எதிர்ப்புத் தெரிவித்து, போராட்டத்தில் ஈடுபட்ட சுயேட்சை எம்.எல்.ஏ., நேரு உள்ளிட்டோரை காவல் துறையினர் கைது செய்தனர். விழுப்புரம் – புதுச்சேரி – நாகப்பட்டினம் நான்குவழிச் சாலையில், புதுச்சேரியின் பாகூர் பகுதியிலுள்ள சேலியமேடு கிராமத்தில் புதிய சுங்கச்சாவடி அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், இரு மாநில மக்களின் போக்குவரத்துக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என தெரிவித்து காரைக்கால் தெற்கு தொகுதி சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர் நேரு போராட்டத்தில்…

விலைகளில் ஏதேனும் குறைபாடா?… புகார் தெரிவிக்க இலவச உதவி எண்கள் அறிவிப்பு
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், நுகர்வோர்களுக்கு ஏதேனும் குறைபாடு இருந்தால், புகார் தெரிவிக்க இலவச உதவி எண்களை மத்திய அரசு அறிவித்துள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி (03-09-25) புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பல முக்கிய…

ஹைட்ரஜன் குண்டு போட்டாலும் பிரதமர் மோடி வெல்வார் – தமிழிசை சவுந்தரராஜன் அதிரடி
பிரதமர் நரேந்திர மோடி ஆபரேஷன் சிந்தூரவே நடத்திக் காண்பித்தவர் என்றும் ஹைட்ரஜன் பாம் போட்டாலும் பிரதமர் மோடி வெற்றி பெறுவார் என்றும் பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், “திமுகவின் இந்து எதிர்ப்பு பிரச்சனையினால் நாங்கள் கலாச்சாரப் போரில் வெற்றி பெற வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறோம். கீழடி பொறுத்தவரை நாங்கள் தமிழர்களின் தொன்மையை மறைப்பது போல் தோற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறார்கள். இன்னும் சொல்லப்போனால் தமிழர்களின் தொன்மையை…

நம்மை கண்டு அஞ்சுகின்றனர்… அதனாலேயே இப்படி செய்கிறார்கள் – விஜய் தாக்கு
நமக்குப் பெருகி வரும் அங்கீகாரத்தைக் கண்டு அஞ்சி நடுங்குகின்றனர் என்றும் இந்த நடுக்கத்தினாலேயே யாருக்கும் விதிக்காத கடுமையான விதிமுறைகளை நமக்கு விதிக்கின்றனர் என்றும் தவெக விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால்,…

புதிய ஜி.எஸ்.டி. வரிவிதிப்பு இன்று முதல் அமல்… எந்தெந்த பொருட்களின் விலை குறைகிறது?
மத்திய அரசு அறிவித்துள்ள புதிய ஜி.எஸ்.டி. வரி சீர்திருத்தம் இன்று முதல் அமலுக்கு வரும் நிலையில், எந்தெந்த பொருள்களின் விலைகளில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன என்பதை பார்க்கலாம். ஜிஎஸ்டி கவுன்சிலின் 56-வது கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த செப்டம்பர் 3ஆம் தேதி (03-09-25) புதுடெல்லியில் நடைபெற்றது. இதில் ஜிஎஸ்டி மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. மேலும், சரக்கு மற்றும் சேவை வரி தொடர்பாக பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இந்த அறிவிப்பை வெளியிட்ட…

மிரட்டிப் பார்க்கிறீர்களா சி.எம்.சார்?… அதுக்கு நான் ஆள் இல்லை… நாகையில் சவால் விட்ட விஜய்
முதலமைச்சர் தன்னை மிரட்டிப் பார்ப்பதாகவும், ஆனால் அந்த மிரட்டலுக்கு எல்லாம் தான் பயப்படப்போவதில்லை என்றும் தவெக தலைவர் விஜய் நாகை பிரசாரத்தில் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், ‘மக்களுடன் சந்திப்பு’ என்ற பெயரில் தமது முதல் சுற்றுப்பயணத்தை கடந்த 13ஆம் தேதி சனிக்கிழமை அன்று தொடங்குகினார். தொடர்ந்து டிசம்பர் மாதம் 20ஆம் தேதி வரை தமிழ்நாடு முழுவதும் அனைத்து மாவட்டங்களுக்கும் சென்று மக்கள் சந்திப்பு கூட்டம் பிரச்சாரங்களை நடத்த திட்டமிடப்பட்டது. ஆனால், விஜய்யின் பிரசாரத்தின்போது திருச்சியிலும்,…
- 1
- 2