வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு ஜாக்பாட்: பட்ஜெட்டில் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள்
மத்திய பட்ஜெட்டில், வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு (NRI) ஆதரவான முக்கிய முதலீட்டு அறிவிப்புகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டுள்ளார்.
இதன்படி, இந்தியாவிற்கு வெளியே வசிக்கும் தனிநபர்கள் Portfolio Investment Scheme (PIS) மூலம் இந்திய பங்குச் சந்தையில் ஈக்விட்டி முதலீடு செய்ய அனுமதிக்கப்பட உள்ளனர். தனிநபர் முதலீட்டு வரம்பு தற்போது உள்ள 5% இலிருந்து 10% ஆக உயர்த்தப்பட முன்மொழியப்பட்டுள்ளது.
அதேபோல், அனைத்து NRI முதலீட்டாளர்களுக்கும் பொருந்தும் மொத்த முதலீட்டு வரம்பும் 10% இலிருந்து 24% ஆக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மாற்றத்தின் மூலம், இந்திய நிறுவனங்களில் வெளிநாட்டு தனிநபர் முதலீட்டாளர்கள் அதிக பங்குகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு உருவாகிறது.
இந்த நடவடிக்கை பங்குகளின் விலை நிர்ணயத்தை மேம்படுத்துவதுடன், பங்குரிமையை மேலும் ஆழப்படுத்தும் என்றும், நீண்டகால மூலதன உருவாக்கத்திற்கு இது உறுதுணையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

